disalbe Right click

Sunday, January 24, 2016

அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவத்திட்டம்





அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவத்திட்டம் பற்றித்தெரியுமா?
மகப்பேறு காலத்தில் தாய், சேய் ஆரோக்கியத்தைக் காக்கவும், இறப்பு விகிதங்களை குறைக்கவும், சுகப்பிரசவத்தை அதிகமாக்கவும் எனப் பல காரணங்களுக்காக கொண்டுவரப்பட்டு இருக்கிறது அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவத் திட்டம். கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டம் இது.
இதன் பயனாளிகள் யார்? பலன்கள் என்ன?
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு, குழந்தை பெற்ற பிறகு, தாய் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்புக்காக சோப், துண்டு உள்ளீட்ட 16 வகைப் பொருட்கள் அடங்கிய குழந்தைநலப் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இதனுடன் கர்ப்பமானது முதல் பயன்படுத்தக் கூடிய மகப்பேறு கால 11 வகை சித்த மருத்துவ மூலிகை மருந்துகளும் கொடுக்கப்பட உள்ளன. இந்த மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் தாய், சேய் இருவர் நலமும் பாதுகாக்கப்படும். இதுதான் அம்மா மகப்பேறு சஞ்சீவி மருத்துவத் திட்டத்தின் நோக்கம்.
என்னென்னெ மூலிகைகள்? அவற்றின் பலன்கள் என்ன?
1) மாதுளை மணப்பாகு :
மாதுளை பழச்சாற்றிலிருந்து உருவாக்கப்படுகிறது மாதுளை மணப்பாகு. இது பெண்களின் கருவளர் காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தடுத்து கருப்பைக்கு வலுவூட்டி ரத்த விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். கர்ப்பமானது முதல் ஐந்தாவது மாதம் வரை இதனை சாப்பிடலாம்.
2) கறிவேப்பிலைப்பொடி :
நூறு கிராம் கறிவேப்பிலையிலேயே எண்ணற்ற பலன்கள் இருப்பதை நிறைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. செரிமானத்துக்கு பெரிதும் உதவக்கூடியது இது. எனவே நன்கு பசி எடுக்கும். இயற்கையான இரும்புச்சத்து இதில் அதிகளவு உள்ளது.
கறிவேப்பிலை இட்லிப்பொடி பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இது சங்க இலக்கியங்களில் “கஞ்ச முக நறி” என்று குறிப்பிடப்படுகிறது. கர்ப்பமானது முதல் மூன்று மாதங்கள் இதனை சாப்பிடலாம்.
அதிகமான குடிப்பழக்கத்தால் கணையம் கெட்டுப் போனவர்களும்
கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து உண்டால் குணம் பெறலாம்.
3) அன்னபேதி மாத்திரை :
அன்னபேதியும் எலுமிச்சைச் சாறும் கொண்டு தயாரிக்கப்படும் இது அன்னபேதி செந்தூரம் என்றும் அழைக்கப்படுகிறது. மூன்றுமாத முடிவில் இதனை எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சைச் சாறு இருப்பதால் மலச்சிக்கல், வாதி வருவதை இது தடுக்கும்.
இதன் வேதியல் பெயர் பெரஸ் சல்பேட் ஆகும். கலங்கலான தண்ணீரில் இந்த அன்னபேதி மாத்திரையைப் போட்டால் தண்ணீர் தெளிவடையும்.
4) நெல்லிக்காய் லேகியம்:
ஜாதிபத்ரி, ஜாதிக்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு இது தயார் செய்யப்படுகிறது. ஐந்து கிராம் அல்லது ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் போதும். அதிகமான வைப்பமின் “சி” உள்ளது என்பதால் வைட்டமின் குறைபாட்டை நீக்கும். அன்னபேதி மாத்திரையுடன் சேர்ந்து சாப்பிடுவதால் இரும்புச் சத்தை உட்கிரகிக்க்கும் தன்மை அதிகமாகும்.
5) ஏலாதி சூரண மாத்திரை :
ஏலக்காயை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கும் இம்மாத்திரை செரிமானத்தை அதிகப்படுத்தக் கூடியது. மூன்றாவது மாதம் முதல் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
6) உளுந்து தைலம் :
ஏழாவது மாதத்தில் இருந்தே வயிறு முன் தள்ளப்படுவதால் கர்ப்பிணிகளுக்கு முதுகுவலி ஏற்படும். முதுகுவலியை குறைக்கவும், இடுப்பு எலும்பை அதிகப்படுத்தவும் இந்தத் தைலம் உதவும். உளுந்தை வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி அதனுடன் எண்ணையை கலந்து இது தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணையை பூசுவதால் வயிற்று தசைகள் இலகுவாகி பிரசவத்தை எளிதாக்கும்.
7) குந்திரிகத் தைலம்:
குழந்தைப்பேற்றை எளிதாக்க, கர்ப்பப்பை வாயைத் திறக்கச் செய்வதற்கு இது பயன்படுகிறது. ஒன்பதாம் மாதம் மருத்துவர் ஆலோசனைப்படி பிறப்புறுப்பில் இதனை பயன்படுத்த வேண்டும்.
8) பாவன பஞ்சங்குலத் தைலம் :
மிளகு, சீரகம், வெள்ளாட்டுப்பால் இவையெல்லாம் சேர்த்து செய்யப்பட்டது இந்தத் தைலம். இதனை இரவு மட்டும் ஒரு சொட்டுப் பாலில் கலந்து சாப்பிடவேண்டும். இதுவும் பிரசவத்தை எளிதாக்க உதவக்கூடியது.
9) சதாவேரி லேகியம் :
தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தக்கூடியது சதாவேரி லேகியம். இதற்கு தண்ணீர்விட்டான் கிழங்கு என்ற வேறொரு பெயரும் உண்டு. தாய்ப்பால் நிறுத்தப்படும் வரை அதாவது ஒருவருடம் வரைக்கும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
10) பிண்ட தலம்:
ஒரு பூரண மகப்பேறு மருத்துவம் என்பது குழந்தைப்பிறப்புடன் முடிந்துவிடுவது இல்லை. குழந்தைப் பிறப்பிற்குப் பிறகும் தாய், சேய் நலம் காக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், பிரசவத்திற்குப்பின் தாயின் உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க இந்தத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.
11) உரை மாத்திரை :
ஆரம்ன கால நோய்களை சமாளிக்க குழந்தைக்குக் கொடுக்கப் படுவது உரை மாத்திரை ஆகும். கடுக்காய், மாசிக்காய், வசம்பு, சுட்டகரி, சுக்கு, திப்பிலி, அக்கரகாரம், வெள்ளைப்பூண்டு, அதிமதுரம் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்காத காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு இன்றளவும் பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்து இது. குழந்தைக்கு ஏழாம் மாதத்தில் இருந்து பதினெட்டாவது மாதம் (ஒன்றரை வயது) வரை உரை மாத்திரை கொடுக்கலாம். இதனை தாய்ப்பாலில் அல்லது வெந்நீரில் கலந்து கொடுக்கவேண்டும்.
எப்போது, எவ்வளவு சாப்பிடவேண்டும்?
கர்ப்பகால பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையும் ஒவ்வொரு மருந்தையும் இருவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படி பயன்படுத்துவது? எவ்வளவு சாப்பிடுவது? எப்போது சாப்பிடுவது? எனபது பற்றி ஒவ்வொன்றிலும் குறிப்புகள் கொடுக்கப் பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் அந்தந்த மாதங்களில் பயன்படுத்தினால் போது. லேகிய வகையறாக்களை சில நாட்கள் பயன்படுத்திவிட்டு, மீண்டும் சில நாட்கள் கழித்து பயன்படுத்தக்கூடாது. அந்தந்தப் பொருட்களுக்கான காலவரம்பு குறிப்பிடப் பட்டிருக்கும்.அதை கவனித்து பயன்படுத்த வேண்டும். இதனால், பிரசவகால தாய், சேய் இறப்பு விகிதம் பெருமளவு குறையும் என்பது உறுதி.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் இந்தத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார் சித்த மருத்துவக் கல்லூரி உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் ஸ்ரீராம் அவர்கள்.
நன்றி : புதியதலைமுறை இதழ் - 28.01.2016

Friday, January 22, 2016

ஸ்ட்ரோக் (பக்கவாதம்)

ஸ்ட்ரோக்! வேகம் முக்கியம்
என்னாச்சுன்னு தெரியலைங்க. திடீர்னு இரண்டு நாளுக்கு முன் கை, கால் ஒருபக்கமா இழுத்துக்கிடுச்சுஇப்போ பேச வேற முடியல. ஞாபகம் மங்கிட்டே வருதுன்னு சொல்றாங்க. பிழைக்கிறதே கஷ்டமாம்” – இது போன்ற உரையாடல்கள் தற்போது சர்வசாதாரணமாக, கிராமம், நகரம் என எங்கெங்கும் கேட்கிறது. பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஆனால், ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புஉணர்வு மட்டும் மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாக உள்ளது. இதனால், பலர் சரியான சிகிச்சை இன்றியே உயிரிழக்க நேரிடுகிறது.
பக்கவாதம் (ஸ்ட்ரோக்)
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்லாதபோது, மூளை செயலிழப்பதுதான்பிரெய்ன் அட்டாக்எனப்படும் ஸ்ட்ரோக். தமிழில், `பக்கவாதம்’. மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால், மூளை செயல் இழந்து, மரணம் ஏற்படலாம்.
இளம் வயதில் ஸ்ட்ரோக்
ஸ்ட்ரோக் பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும். இவர்கள் புகைபிடிப்பவராகவோ, மது அருந்துபவராகவோ, சர்க்கரை நோயாளியாகவோ, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவராகவோ இருந்தால் ரிஸ்க் அதிகம். தவிர, 40 வயதுக்குள் ஸ்ட்ரோக் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. உடலில், புரோட்டின் சி, புரோட்டின் எஸ் குறைதல், `ஹோமோசிஸ்டீன்என்னும் அமினோஅமிலம் அதிகரித்தல், ஆன்டித்ரோம்பின் – 3 குறைதல், கார்டியோலிபின் உடலில் தங்குதல் போன்றவற்றால் இளம் வயதில் ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு ஸ்ட்ரோக்
ஒருசில குழந்தைகள் வளரும்போது, அவ்வப்போது திடீர், திடீரெனக் கீழே விழுந்துவிடுவார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அடிக்கடி ஸ்ட்ரோக்குக்கான அறிகுறி தெரியும். சில குழந்தைகளுக்கு மூளைக்குச் செல்லும் அனைத்து ரத்தக் குழாய்களும் அவ்வப்போது சுருங்குவதால், இந்தப் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னைக்குமொயா-மொயாநோய் என்று ஒரு பெயர் உண்டு.
பரிசோதனை
உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால், தைராய்டு அளவைப் பரிசோதிப்பதன் மூலம் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறியலாம்.
சிகிச்சை என்ன?
ஸ்ட்ரோக் வந்தவுடன் உடனடியாக ஸ்ட்ரோக் யூனிட், அவசரசிகிச்சைப் பிரிவு வசதி உள்ள மருத்துவமனைக்குச் செல்வதுதான் சிறந்தது. மூன்றரை மணி நேரத்துக்குள் சென்றுவிட்டால், அவருக்கு `இன்ட்ராவீனஸ் த்ரொம்போலைசிஸ்எனும் சிகிச்சை அளிக்கப்படும். இதை அளித்துவிட்டால், ஸ்ட்ரோக் வந்தவர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட முடியும். நேரம் கடந்துவிட்டால், இந்த தெரப்பி பயன் அளிக்காது.
மூன்றரை மணி நேரத்தில் வர முடியாதவர்கள், ஸ்ட்ரோக் வந்த எட்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு `இன்ட்ரா ஆர்டிரியல் த்ரோம்போலைசிஸ்அல்லது `மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமிசிகிச்சை அளித்து, உயிரைக் காப்பாற்றலாம். சில சமயங்களில் பின்மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 12 மணி நேரத்துக்குள் இந்த தெரப்பி கொடுப்பதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும்.
மருத்துவமனைக்கு 12 மணி நேரம் கழித்துச் சென்றால், பரிசோதனைக்குப் பிறகு மூளையின் வீக்கம் அளவிடப்படும். மூளையின் வீக்கம் அதிகமாக இருந்தால், `டீகம்ப்ரஸிவ் கிரேனியேக்டமி எனும் அறுவைசிகிச்சை செய்யப்படும். இதில், வீக்கம் உள்ள பகுதியில் மண்டைஓடு திறக்கப்பட்டு, வீக்கம் குறைந்த பின்னர், சில நாட்களில் அறுவைசிகிச்சை செய்தபின் மண்டைஓட்டை மூடிவிடுவார்கள். இவர்களுக்கு, கை, கால்கள், வாய் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு குறைவு. எனினும், உயிரைக் காப்பாற்ற முடியும்.
தடுப்புமுறைகள்
மினி ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு, அவரவர் உடல்நிலையைப் பொருத்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு, ஆஸ்ப்ரின் போன்ற ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை அளிக்கப்படும். உடலில் ஹோமோசிஸ்டீன் அதிகமாக இருந்தால், ஃபோலிக்அமிலம் மற்றும் மெத்தில் கோபாலமைன் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டுவந்தால், ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.
நவீன சிகிச்சைமுறைகள்
ஸ்ட்ரோக், மினிஸ்ட்ரோக் வந்தால் தற்போது உள்ள சில நவீன சிகிச்சைமுறைகள் மூலம் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. மினி ஸ்ட்ரோக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால், இதயச் செயல்பாட்டை ஆய்வுசெய்ய வேண்டும். பின்னர், கழுத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, டாப்ளர் பரிசோதனையும், சி.டி ஆஞ்ஜியோகிராபி பரிசோதனையும் செய்யப்படும். பரிசோதனையில், ரத்தக் குழாய்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டால், கரோட்டிட் என்டார்டெரக்டமி (Carotid endarterectomy) என்ற அறுவைசிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்படும். ஒருவேளை, கழுத்தில் இருக்கும் ஏதாவது ஒரு ரத்தக் குழாய் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு மூளைக்கு வெளியே இருக்கும் ரத்தக் குழாயை எடுத்து, மூளைக்கு உள்ளே வைத்து பைபாஸ் அறுவைசிகிச்சை (Cerebaral bypass) செய்து, ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க முடியும்.
மறுவாழ்வு சிகிச்சைகள்
ஸ்ட்ரோக் வந்த குறிப்பிட்ட நேரம் கடந்த பின்னர், சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டாலும், சிலரால் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கான வரம்தான் மறுவாழ்வு சிகிச்சைகள். பிசியோதெரப்பி மூலம் அவர்களை சக்கர நாற்காலியில் உட்காரும் அளவுக்கோ, தனியாக நடக்கும் அளவுக்கோ தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்படும். 60 சதவிகிதம் வரை மறுவாழ்வு சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. மறுவாழ்வு சிகிச்சைகள் மூலம் தற்போது பலர் மீண்டுவருகிறார்கள். எனவே, நம்பிக்கை இழக்க வேண்டாம்.
– -------------------------------------------------------------------------------பு.விவேக் ஆனந்த்
ஸ்ட்ரோக் யாருக்கு வரும்?
யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனினும், ஸ்ட்ரோக் ஏற்பட ஆறு முக்கியமான காரணிகளைச் சொல்ல முடியும்.
உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அழுத்தம் அதிகரிக்கும்போது, அவை சுருங்கும். ரத்தக் குழாய் சுருங்கும்போது, மூளைக்கு ரத்தம் செல்வது, படிப்படியாகத் தடைப்பட்டு ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
டயாபடீஸ்: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, ரத்தக் குழாய்களில் இருக்கும் புரதங்களால் ஆன அடுக்கு பாதிப்படையும். இதனால், குளுக்கோஸ், சிறுசிறு கொழுப்புக்கட்டிகள்போல, ரத்தக் குழாய்களில் படியும். இந்தக் கொழுப்புக்கட்டிகள் காரணமாக, கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
கொலஸ்ட்ரால்: ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் படிந்து, அடைப்பை ஏற்படுத்தலாம்.
புகைபிடிப்பவர்கள்: நிக்கோட்டின் ரத்தக் குழாயில் படியும்போது, அவை, ரத்தக் குழாய்களில் விரிசலை ஏற்படுத்தும். விரிசலில், ரத்தத் தட்டணுக்கள் ஆங்காங்கே ஒட்டிக்கொள்ளும். இதனாலும் அடைப்பு ஏற்படலாம்.
ஆல்கஹால்: மது அருந்துபவர்களுக்கு, மேற்சொன்ன நான்கு வகையிலும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
மரபியல் காரணி: பரம்பரையில் யாருக்காவது ஸ்ட்ரோக் வந்தால், கவனமாக இருக்க வேண்டும். ஸ்ட்ரோக் ஏற்பட, மரபியல்ரீதியான வாய்ப்புகளும் அதிகம்.
ரத்தக் குழாய் அடைப்பு (Ischemic stroke)
கழுத்தில் இருந்து முன்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும், பின்பக்கமாக இரண்டு ரத்தக் குழாய்களும் மூளைக்குச் செல்கின்றன. இந்த நான்கு ரத்தக் குழாய்களும் மூளைப்பகுதியில் சந்தித்துப் பிரியும்.
இதயம் ஒழுங்கின்றி திடீரென வேகமாகத் துடிக்கும் பிரச்னையான ரூமாட்டிக் இதய நோய் உள்ளவர்களுக்கு, இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் திடீரென அடைப்பு ஏற்படுவதால் ஸ்ட்ரோக் ஏற்படலாம். கழுத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் முன்பக்க ரத்தக் குழாய்களிலும், மூளைக்கு உட்புறமாகச் செல்லும் நுண்ணிய ரத்தக் குழாய்களிலும் கொழுப்புகள் படிந்து, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வரலாம்.
ரத்தக்கசிவு ஸ்ட்ரோக் (Hemorrhagic Stroke)
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்தம் கசிவதாலும் ஸ்ட்ரோக் ஏற்படலாம். இதில் இரண்டு வகை உள்ளன.
வயதானவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் மூளைக்கு உள்ளே செல்லும் ரத்தக் குழாய்களில் கீறல் விழுந்து, ரத்தக் குழாய் வெடித்து, ரத்தம் கசியும். பெரும்பாலும், மூளையில் உள்ள பேசல் காங்கிலியா (Basal ganglia) செரபெல்லம், பான்ஸ் பகுதிகளில் இருக்கும் ரத்தக் குழாய்களில் இத்தகையக் கசிவு ஏற்படலாம்.
மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பலூன் போல வீக்கம் ஏற்பட்டு, பின்னர் ரத்தக் குழாய்கள் வெடிப்பதாலும், ரத்தம் கசிந்து, மூளைக்கு ரத்தம் செல்லாமல் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு, .எஸ்.ஹெச் (Aneurysm sub arachnoid hemorrhage) என்று பெயர்.
மினி ஸ்ட்ரோக்
`டி..எனச் சொல்லப்படும் டிரான்சியன்ட் இஸ்கீமிக் அட்டாக்கை `மினி ஸ்ட்ரோக்என்கின்றனர். ஸ்ட்ரோக் வரப்போகிறது என்பதை, முன்கூட்டியே நமக்குத் தெரிவிப்பதுதான் மினி ஸ்ட்ரோக். மினி ஸ்ட்ரோக் ஏற்பட்டால், திடீரென வாய் கோணி, பேச்சுக் குழறும்; கண் ஒரு பக்கமாக மங்கலாகத் தெரியும்; சில சமயம் பார்வை பறிபோனதுபோல இருட்டாகத் தெரியும். இந்தப் பிரச்னை சில நொடிகளில், நிமிடங்களில் தானாகவே சரியாகிவிடும். இவர்களுக்கு, மறுநாளோ, அடுத்த வாரமோகூட ஸ்ட்ரோக் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, ஆரம்ப நிலையிலேயே மருத்துவர்களை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம். அதைப் புறக்கணித்தோம் என்றால், ரிண்ட் (RIND) எனப்படும் அடுத்த நிலை ஸ்ட்ரோக் வரலாம். இந்த நிலைவந்தால், ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து, வாய்க் குழறல், கை, கால்கள் சரியாகிவிடும். கை, முகம், பேச்சு மூன்றும் ஒரு சேர இழுத்து கொள்ளும்போதுதான் ஸ்ட்ரோக் என்கிறோம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் மருத்துவர்கள் FAST என்பதை நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும் எனகிறார்கள்.
F – Face Drooping: (முகம் ஒரு பக்கமாகக் கோணுதல்) குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
A – Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.
S – Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.
T – Time: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க எட்டு டிப்ஸ்
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றம் அவசியம்.
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க வேண்டும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வேண்டும்.
மது அருந்துவதை அறவே நிறுத்தவும்.
புகைபிடிப்பதை உடனே விட்டுவிடுங்கள்.
எப்போதும் நீர்ச்சத்து தேவை, தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.
உடற்பயிற்சி, சமச்சீர் உணவின் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள்வைப்பது அவசியம்.
ஸ்ட்ரோக் ஏற்படும் சமயங்களில் வலது மூளை பாதிக்கப்பட்டால், உடலின் இடது பக்கம் பாதிக்கப்படும், கை,கால்கள் செயல் இழக்கும். இடது மூளை பாதித்தால், உடலின் வலது பக்கம் செயல் இழந்துபோவதுடன், பேச்சுத்திறனும், பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறனும் பாதிக்கப்படும். வலது பக்க மூளையைவிட இடது பக்க மூளை பாதித்தால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.
நன்றி : டாக்டர் விகடன் - 16.01.201