disalbe Right click

Sunday, February 12, 2017

எம்.எல்.ஏ-க்களின் செல்போன் & இ மெயில் ஐ.டி.


எம்.எல்.ஏ-க்களின் செல்போன் & இ மெயில் ஐ.டி.

1 Gummidipoondi 
Thiru K.S. Vijaya Kumar AIADMK 94452 79999 mlagummidipoondi@tn.gov.in

2 Ponneri (SC) 
Thiru P. Balaraman AIADMK 93826 98074 
mlaponneri@tn.gov.in

3 Tiruttani 
Thiru P.M. Narasimhan AIADMK
94433 86356 mlatiruttani@tn.gov.in

4 Thiruvallur 
Thiru V.G. Raajendran DMK 98410 37747 Phone : 044-24475556 mlatiruvallur@tn.gov.in

5 Poonamallee (SC) 
Thiru T.A. Elumalai AIADMK 96006 27999 & 97509 76555 mlapoonamallee@tn.gov.in

6 Avadi 
Thiru K. Pandiarajan AIADMK 98408 79559 
mlaavadi@tn.gov.in

7 Maduravoyal 
Thiru P. Benjamin (Hon. Minister) AIADMK 9884 995440 mlamaduravoyal@tn.gov.in

8.Ambattur 
Thiru V. Alexander AIADMK 98410 33211 
mlaambattur@tn.gov.in

9.Madavaram
Thiru S. Sudharsanam, DMK - 94440 16596 & 99400 16596
Phone : 044-25531222 & 044-25531333
mlamadavaram@tn.gov.in

10. Tiruvottiyur 
Thiru K.P.P. Samy, DMK - 94440 35377
mlatiruvottiyur@tn.gov.in

11. Dr. Radhakrishnan Nagar,
Selvi J Jayalalithaa (Expired)

12. Perambur
Thiru P. Vetriivel, AIADMK - 98417 21234
mlaperambur@tn.gov.in

13. Kolathur
Thiru M.K. Stalin, (Hon. Leader of the Opposition), DMK
Cell : 8220034343 Phone : 044-24356600
mlakolathur@tn.gov.in

14. Villivakkam
Thiru B. Ranganathan, DMK - 98400 22088
Phone :044-26701133
mlavillivakkam@tn.gov.in

15. Thiru-Vi-Ka-Nagar (SC)
Thiru P. Sivakumar @ Thayagam Kavi - DMK - 98410 60863
mlathiruvikanagar@tn.gov.in

16. Egmore (SC)
Thiru K.S. Ravichandran, DMK - 98400 22250
mlaegmore@tn.gov.in

17. Royapuram,
Thiru D. Jayakumar (Hon. Minister) AIADMK - 92821 02950
mlaroyapuram@tn.gov.in

18. Harbour 
Thiru P.K. Sekar Babu, DMK- 98410 40026
mlaharbour@tn.gov.in

19. Chepauk-Thiruvallikeni
Thiru J. Anbazhagan - DMK - 94440 35553
Phone :044-24347245 & 044-24344941
mlachepauk@tn.gov.in

20. Thousand Lights
Thiru Ku. Ka. Selvam, DMK - 94440 10618
mlathousandlights@tn.gov.in

21. Anna Nagar
Thiru M.K. Mohan, DMK - 93848 77779
mlaannanagar@tn.gov.in

22. Virugambakkam
Thiru Virugai V.N. Ravi, AIADMK - 93837 70505
mlavirugambakkam@tn.gov.in

23. Saidapet
Thiru Ma. Subramanian, DMK - 91767 00000
mlasaidapet@tn.gov.in

24. Thiyagaraya Nagar
Thiru B. Sathyanarayanan, AIADMK - 98410 26424
mlathiyagarayanagar@tn.gov.in

25. Mylapore
Thiru R. Nataraj, AIADMK - 98404 84411
mlamylapore@tn.gov.in

26. Velachery
Thiru Vagai Chanderasekar, DMK - 90032 19505
mlavelachery@tn.gov.in

27. Sholinganallur
Thiru S. Aravind Ramesh, DMK - 98400 61354
mlashozhinganallur@tn.gov.in

28. Alandur
Thiru T.M. Anbarasan, DMK - 94440 10354
mlaalandur@tn.gov.in

29.Sriperumbudur (SC)
Thiru K. Palani, AIADMK - 98843 53649
mlasriperumbudur@tn.gov.in

30. Pallavaram
Thiru I. Karunanithi, DMK - 94440 02029 & 95000 30009
mlapallavaram@tn.gov.in

31. Tambaram
Thiru S.R. Raja, DMK - 98400 26066
mlatambaram@tn.gov.in

32. Chengalpattu, 
Tmt. M. Varalakshmi, DMK - 98400 22883
Phone :044-27454805
mlachengalpattu@tn.gov.in

33. Thiruporur
Thiru M. Kothandapani, AIADMK - 94443 55368
mlathiruporur@tn.gov.in

34. Cheyyur (SC)
Dr. R.T. Arasu, DMK- 97898 18399
mlacheyyur@tn.gov.in

35. Madurantakam (SC)
Thiru S. Pugazhenthi, DMK - 94434 44923 & 90032 77693
mlamadurantakam@tn.gov.in

36. Uthiramerur
Thiru K. Sundar, DMK - 9444075122
mlauthiramerur@tn.gov.in

37. Kancheepuram
Thiru C.V.M.P. Ezhilarasan, DMK - 94435 47676
mlakancheepuram@tn.gov.in

38. Arakkonam (SC)
Thiru S. Ravi, AIADMK - 98430 25123
mlaarakkonam@tn.gov.in

39. Sholinghur
Thiru N.G. Parthiban, AIADMK - 98401 33673 &  94434 38016
Phone : 04172-262281 & 04172- 262222
mlasholingur@tn.gov.in

40. Katpadi
Thiru Durai Murugan, DMK - 94445 29999
Phone : 0416- 2242941 & 044-24470886
mlakatpadi@tn.gov.in

41. Ranipet
Thiru R. Gandhi, DMK - 94432 22770
mlaranipet@tn.gov.in

42. Arcot
Thiru J.L. Eswarappan, DMK - 94432 65161
mlaarcot@tn.gov.in

43. Vellore
Thiru P. Karthikeyan, DMK - 94433 26684
Phone : 0416-2226684
mlavellore@tn.gov.in

44. Anaikattu
Thiru A.P. Nandakumar, DMK - 96266 56666
mlaanaikattu@tn.gov.in

45. Kilvaithinankuppam (SC)
Thiru G. Loganathan, AIADMK - 97512 32311
mlakilvaithinankuppam@tn.gov.in

46. Gudiyatham (SC)
Tmt. C. Jayanthi Padmanabhan, AIADMK- 9884928936
mlagudiyattam@tn.gov.in

47. Vaniyambadi
Dr. (Tmt) Nilofer, (Hon. Minister) AIADMK - 94433 29062
Phone : 044- 26423726
mlavaniyambadi@tn.gov.in

48. Ambur
Thiru R. Bala Subramani, AIADMK - 98948 33033
mlaambur@tn.gov.in

49. Jolarpet 
Thiru K.C. Veeramani (Hon. Minister) AIADMK - 94433 41745
mlajolarpet@tn.gov.in

50. Tirupattur
Thiru A. Nallathambi, DMK - 98948 30020
mlathirupatur@tn.gov.in

51. Uthangarai (SC)
Tmt. N. Manoranjitham, AIADMK - 94865 64353
mlauthangarai@tn.gov.in

52. Bargur
Thiru C.V. Rajendiran, AIADMK - 94432 68844
mlabargur@tn.gov.in

53. Krishnagiri
Thiru T. Senguttuvan, DMK - 94432 66282 & 94425 66383
mlakrishnagiri@tn.gov.in

54. Veppanahalli
Thiru P. Murugan, DMK - 99440 06633
mlaveppanahalli@tn.gov.in

55. Hosur
Thiru P. Balakrishna Reddy, (Hon. Minister), AIADMK
94432 54520
mlahosur@tn.gov.in

56. Thalli
Thiru Y. Prakaash, DMK - 94432 78852 & 98450 13880
mlathalli@tn.gov.in

57. Palacode
Thiru Anbalagan K.P. (Hon. Minister) AIADMK 94440 12777 & 94432 61223
mlapalacode@tn.gov.in

58. Pennagaram
Thiru P.N.P. Inbasekaran, DMK - 94431 58971 & 95536 30004
mlapennagaram@tn.gov.in

59. Dharmapuri
Thiru P. Subramani, DMK - 94437 55331
mladharmapuri@tn.gov.in

60. Pappireddipatti
Thiru P. Palaniappan AIADMK 94430 56522
mlapappireddippatti@tn.gov.in

61. Harur (SC)
Thiru R. Murugan, AIADMK - 94435 13355
mlaharur@tn.gov.in

62. Chengam (SC)
Thiru M.P.Giri, DMK - 94875 57999
mlachengam@tn.gov.in

63. Tiruvannamalai
Thiru E.V. Velu, DMK - 94890 59091
mlatiruvannamalai@tn.gov.in

64. Kilpennathur
Thiru K. Pitchandi, DMK- 94432 19999
Phone : 04175-223643
mlakilpennathur@tn.gov.in

65. Kalasapakkam
Thiru V. Panneerselvam, AIADMK - 96551 09251 & 98430 38848
mlakalasapakkam@tn.gov.in

66. Polur
Thiru K.V. Sekaran - DMK - 94433 22264
mlapolur@tn.gov.in

67. Arani
Thiru S. Sevoor Ramachandran (Hon. Minister) AIADMK 94433 28045
mlaarani@tn.gov.in

68. Cheyyar
Thiru K. Mohan, AIADMK - 96777 05159
mlacheyyar@tn.gov.in

69. Vandavasi (SC)
Thiru S. Ambeth Kumar - DMK, 88070 26688 & 94431 04285
mlavandavasi@tn.gov.in

70. Gingee
Thiru K.S. Masthan - DMK - 9443073085
mlagingee@tn.gov.in

71. Mailam
Dr. R. Masilamani, DMK - 94430 80191
Phone : 04147-222932
mlamailam@tn.gov.in

72. Tindivanam (SC)
Tmt. P. Seethapathy, DMK - 84893 96363
mlatindivanam@tn.gov.in

73. Vanur (SC)
Thiru M. Chakrapani, AIADMK - 96009 36829
mlavanur@tn.gov.in

74. Villuppuram
Thiru C.Ve. Shanmugam (Hon. Minister) AIADMK - 94433 26779
mlaviluppuram@tn.gov.in

75. Vikkiravandi
Thiru K. Rathamani, DMK - 94434 39356
mlavikravandi@tn.gov.in

76 Tirukoilur
Thiru K. Ponmudy, DMK - 94438 59983
Phone : 04146-240364
mlatirukkoyilur@tn.gov.in

77. Ulundurpet
Thiru R. Kumaraguru, AIADMK - 94432 68259 & 94432 68257
mlaulundurpettai@tn.gov.in

78. Rishivandiyam
Thiru K. Karthikeiyan, DMK - 94431 01268
mlarishivandiyam@tn.gov.in

79. Sankarapuram
Thiru T. Udhaya Suriyan, DMK - 94434 97724
mlasankarapuram@tn.gov.in

80. Kallakurichi (SC)
Thiru A. Prabhu, AIADMK - 90476 84777
Phone : 4151-233456
mlakallakurichi@tn.gov.in

81. Gangavalli (SC)
Thiru A. Maruthamuthu, AIADMK - 94434 69961
mlagangavalli@tn.gov.in

82. Attur (SC)
Thiru R.M. Chinnathambi, AIADMK - 94867 73264
mlaattur@tn.gov.in

83. Yercaud (ST)
Tmt. G. Chitra, AIADMK - 94887 09233
mlayercaud@tn.gov.in

84. Omalur
Thiru S. Vetrivel - AIADMK - 94432 34523
mlaomalur@tn.gov.in

85. Mettur
Thiru S. Semmalai, AIADMK - 94441 04773
mlamettur@tn.gov.in

86. Edappadi
Thiru Edappadi K. Palaniswami, (Hon. Minister) AIADMK - 94431 46857
mlaedappadi@tn.gov.in

87. Sankari
Thiru S. Raja, AIADMK - 94434 57193
mlasankari@tn.gov.in

88. Salem (West)
Thiru G. Venkatachalam, AIADMK - 94432 34115
Phone : 0427- 2387779
mlasalemwest@tn.gov.in

89. Salem (North)
Thiru R. Rajendran, DMK - 94433 20715
mlasalemnorth@tn.gov.in

90. Salem (South)
Thiru A.B. Sakthivel, AIADMK - 94432 66985
mlasalemsouth@tn.gov.in

91. Veerapandi
Tmt. P. Manonmani - AIADMK - 94437 77367 & 94875 37367
mlaveerapandi@tn.gov.in

92. Rasipuram (SC)
Dr. (Tmt.) V. Saroja - (Hon. Minister), AIADMK - 93400 32299 & 93447 72869
mlarasipuram@tn.gov.in

93. Senthamangalam (ST)
Thiru C. Chandrasekaran, AIADMK - 94432 49526
mlasenthamangalam@tn.gov.in

94. Namakkal
Thiru K.P.P. Baskar, AIADMK - 94433 69996
mlanamakkal@tn.gov.in

95. Paramathi Velur
Thiru K.S. Moorthiy - DMK - 94433 56856
mlaparamathvelur@tn.gov.in

96. Tiruchengodu
Tmt. Pon. Saraswathi, AIADMK - 88833 56666
mlathiruchengodu@tn.gov.in

97. Kumarapalayam
Thiru P. Thangamani - (Hon. Minister) - AIADMK - 98427 40154 & 98427 40154
mlakumarapalayam@tn.gov.in

98. Erode (East)
Thiru K.S. Thennarasu, AIADMK - 94437 60009
mlaerodeeast@tn.gov.in

99. Erode (West)
Thiru K.V. Ramalingam, AIADMK - 90131 81177 & 89033 66399
Phone :0424-2272929
mlaerodewest@tn.gov.in

100. Modakkurichi
Thiru V.P. Sivasubramani, AIADMK - 99429 91000
mlamodakkurichi@tn.gov.in

101. Dharapuram (SC)
Thiru V.S. Kalimuthu, INC - 93606 55444
mladharapuram@tn.gov.in

102. Kangeyam
Thiru U. Thaniyarasu, AIADMK - 98422 02445
mlakangayam@tn.gov.in

103. Perundurai
Thiru N.D. Venkatachalam, AIADMK - 98427 13466
mlaperundurai@tn.gov.in

104. Bhavani
Thiru K.C. Karuppanan, (Hon. Minister) - AIADMK 
Cell:  94433 47777 & 98652 07777
mlabhavani@tn.gov.in

105. Anthiyur
Thiru E.M.R. Raja @ K.R. Rajakrishnan, AIADMK - 98427 68833
mlaanthiyur@tn.gov.in

106. Gobichettipalayam
Thiru K.A. Sengottaiyan, AIADMK, 94426 21215 & 94430 92725
mlagobichettipalayam@tn.gov.in

107. Bhavanisagar (SC)
Thiru S. Eswaran, AIADMK -97157 26693
mlabhavanisagar@tn.gov.in

108. Udhagamandalam
Thiru R. Ganesh, INC - 94436 69698
mlaudhagamandalam@tn.gov.in

109. Gudalur (SC)
Thiru M. Thiravidamani - DMK - 94439 00711
Phone : 04262-220909
mlagudalur@tn.gov.in

110. Coonoor
Thiru A. Ramu, AIADMK - 94433 75713
mlacoonoor@tn.gov.in

111. Mettupalayam
Thiru O.K. Chinnaraj, AIADMK - 94430 54933
mlamettuppalayam@tn.gov.in

112. Avanashi (SC)
Thiru P. Dhanapal, (Hon. Speaker) AIADMK - 99524 97272
mlaavanashi@tn.gov.in

113. Thiruppur (North)
Thiru K.N. Vijeyakumar - AIADMK - 93442 02567
mlatiruppurnorth@tn.gov.in

114. Tiruppur (South)
Thiru S. Gunasekaran, AIADMK - 99423 89992
mlatiruppursouth@tn.gov.in

115. Palladam
Thiru A. Natarajan, AIADMK - 98429 15800
mlapalladam@tn.gov.in

116. Sulur
Thiru R. Kanagaraj, AIADMK - 99435 34795
mlasulur@tn.gov.in

117. Kavundampalayam
Thiru V.C.Arukutty, AIADMK - 98422 07679
mlakavundampalayam@tn.gov.in

118. Coimbatore (North)
Thiru P.R.G. Arunkumar, AIADMK - 94431 69634
mlacoimbatorenorth@tn.gov.in

119. Thondamuthur
Thiru S.P. Velumani, (Hon. Minister) AIADMK - 89730 35555
Phone : 0422-2622728 & 044-24938566
mlathondamuthur@tn.gov.in

120. Coimbatore (South)
Thiru Amman K.Arjunan - AIADMK - 98941 68104
mlacoimbatoresouth@tn.gov.in

121. Singanallur
Thiru N. Karthik, DMK - 94438 19231
mlasinganallur@tn.gov.in

122. Kinathukadavu
Thiru A. Shanmugam, AIADMK - 99430 17789
mlakinathukadavu@tn.gov.in

123. Pollachi
Dr. Pollachi V. Jayaraman - (Hon. Deputy Speaker)- AIADMK - 94430 37044
mlapollachi@tn.gov.in

124. Valparai (SC)
Tmt. V. Kasthuri Vasu, AIADMK - 98426 13222
Phone : 04259-286797
mlavalparai@tn.gov.in

125. Udumalaipettai
Thiru K. Radhakrishnan (Hon. Minister) AIADMK - 95247 77501
mlaudumalaipettai@tn.gov.in

126. Madathukulam
Thiru R. Jayaramakrishnan, DMK - 94430 50235
mlamadathukulam@tn.gov.in

127. Palani
Thiru I.P. Senthil Kumar, DMK - 91761 33333 & 94431 74488
mlapalani@tn.gov.in

128. Oddanchatram
Thiru R. Sakkarapani, DMK - 94422 07777
mlaoddanchatram@tn.gov.in

129. Athoor
Thiru I. Periyasamy, DMK - 95853 66666
mlaathoor@tn.gov.in

130. Nilakkottai (SC)
Thiru R. Thangathurai - AIADMK - 94430 21310
mlanilakkottai@tn.gov.in

131. Natham
Thiru M.A. Andiambalam M.A. - DMK - 94439 17272
mlanatham@tn.gov.in

132.Dindigul
Thiru C. Sreenivasan, (Hon. Minister) AIADMK - 94861 33333
mladindigul@tn.gov.in

133. Vedasandur
Dr. V.P.B. Paramasivam, AIADMK - 98421 51160
mlavedasandur@tn.gov.in

134. Aravakurichi
Thiru V.Senthil Balaji - ADMK -
mlaaravakurichi@tn.gov.in

135. Karur
Thiru M.R. Vijayabhaskar, (Hon. Minister) AIADMK - 98946 62211
mlakarur@tn.gov.in

136. Krishnarayapuram (SC)
Tmt. M. Geetha, AIADMK - 91592 44777  & 90476 44777
mlakrishnarayapuram@tn.gov.in

137. Kulithalai
Thiru E. Ramar, DMK - 94421 52245
mlakulithalai@tn.gov.in

138. Manapparai, 
Thiru R. Chandrasekar, AIADMK - 94431 68475
mlamanapparai@tn.gov.in

139. Srirangam
Tmt. S. Valarmathi, (Hon. Minister) - AIADMK - 98424 70989
mlasrirangam@tn.gov.in

140 . Tiruchirappalli (West)
Thiru K.N. Nehru - DMK - 98424 66666 & 0431-2740095
mlatiruchirappalliwest@tn.gov.in

141. Tiruchirappalli (East)
Thiru N. Natarajan (Hon. Minister) AIADMK - 98424 05000
mlatiruchirappallieast@tn.gov.in

142. Thiruverumbur
Thiru Anbil Mahesh Poyyamozhi - DMK - 98407 02222
mlathiruverumbur@tn.gov.in

143. Lalgudi
Thiru A. Soundarapandian - DMK - 99422 35277
mlalalgudi@tn.gov.in

144. Manachanallur
Tmt. M. Parameswari - AIADMK - 86754 46056
mlamarnachanallur@tn.gov.in

145. Musiri
Thiru M. Selvarasu - AIADMK - 97905 36949
mlamusiri@tn.gov.in

146. Thuraiyur (SC)
Thiru S. Stalin Kumar, DMK - 97878 15511 
mlathuraiyur@tn.gov.in

147. Perambalur (SC)
Thiru R. Thamizhselvan R.- AIADMK - 98422 44917
mlaperambalur@tn.gov.in

148. Kunnam
Thiru R.T. Ramachandran - AIADMK - 98945 70008
mlakunnam@tn.gov.in

149. Ariyalur
Thiru S. Rajendiran (Chief Govt. Whip) AIADMK - 94423 58989
mlaariyalur@tn.gov.in

150. Jayankondam
Thiru J.K.N. Ramajeyalingam, AIADMK
99658 85157,  90033 85467 & 88835 77504
mlajayankondam@tn.gov.in

151. Tittagudi (SC)
Thiru V. Ganesan DMK - 94434 45168
mlatittagudi@tn.gov.in

152. Vridhachalam
Thiru V.T. Kalaiselvan - AIADMK - 94432 10657
mlavriddhachalam@tn.gov.in

153. Neyveli
Thiru Saba. Rajendran - DMK - 94432 53251
mlaneyveli@tn.gov.in

154. Panruti
Tmt. P. Sathya - AIADMK - 98423 22552  & 98423 11811
mlapanruti@tn.gov.in

155. Cuddalore
Thiru M.C. Sampath (Hon. Minister) AIADMK - 94431 36395
mlacuddalore@tn.gov.in

156. Kurinjipadi
Thiru M.R.K. Panneer Selvam - DMK - 94433 71590
mlakurinjipadi@tn.gov.in

157. Bhuvanagiri
Thiru Durai K. Saravanan - DMK - 94432 48220
mlabhuvanagiri@tn.gov.in

158. Chidambaram
Thiru K.A. Pandian, AIADMK - 94431 51922
mlachidambaram@tn.gov.in

159. Kattumannarkoil (SC)
Thiru N. Murugumaran - AIADMK - 94436 65991
Phone : 04144-261991
mlakattumannarkoil@tn.gov.in

160. Sirkalli (SC)
Thiru P.V. Bharathi, AIADMK - 99655 60025
mlasirkazhi@tn.gov.in

161. Mayiladuthurai
Thiru V. Rathakrishnan - AIADMK - 94436 06873
mlamayiladuthurai@tn.gov.in

162. Poompuhar
Thiru S. Pavunraj - AIADMK - 94435 74056
mlapoompuhar@tn.gov.in

163. Nagapattinam
Thiru M. Thamimun Ansari - AIADMK - 95000 62792
mlanagapattinam@tn.gov.in

164. Kilvelur (SC)
Thiru U. Mathivanan - DMK - 94424 47622
mlakilvelur@tn.gov.in

165. Vedaranyam
Thiru O.S. Manian (Hon. Minister) AIADMK - 94440 78111
Phone : 04369-234567
mlavedaranyam@tn.gov.in

166. Thiruthuraipoondi (SC)
Thiru P. Adalarasan - DMK - 80568 14947
mlathiruthuraipoondi@tn.gov.in

167. Mannargudi
Thiru T.R.B. Rajaa, DMK - 98408 45678
mlamannargudi@tn.gov.in

168. Thiruvarur
Thiru M. Karunanidhi - DMK - Phone : 044-28115225
mlathiruvarur@tn.gov.in

169. Nannilam
Thiru R. Kamaraj (Hon. Minister) AIADMK - 98424 13434
mlanannilam@tn.gov.in

170. Thiruvidaimarudur (SC)
Dr. Govi. Chezhiaan - DMK - 94441 62050
mlathiruvidaimarudur@tn.gov.in

171. Kumbakonam
Thiru G. Anbalagan - DMK - 94433 83283, Phone :0435-2414838
mlakumbakonam@tn.gov.in

172. Papanasam
Thiru. R. Doraikkannu (Hon. Minister) AIADMK - 94435 27180
mlapapanasam@tn.gov.in

173. Thiruvaiyaru
Thiru Durai. Chandrasekaran - DMK - 94433 25777
mlathiruvaiyaru@tn.gov.in

174. Thanjavur 
Thiru M.Rengasamy.- AIADMK
mlathanjavur@tn.gov.in

175. Orathanadu
Thiru M. Rama chandran - DMK - 99449 71366
mlaorathanadu@tn.gov.in

176. Pattukkottai
Thiru V. Sekar - AIADMK - 98432 39090
mlapattukkottai@tn.gov.in

177. Peravurani
Thiru M. Govindarasu - AIADMK - 94437 15231
mlaperavurani@tn.gov.in

178. Gandarvakottai (SC)
Thiru B. Arumugam - AIADMK - 97511 14233
mlagandarvakottai@tn.gov.in

179. Viralimalai
Dr. C. Vijaya Baskar (Hon. Minister) AIADMK - 94433 88155 & 97509 66601
Phone : 04339-212145
mlaviralimalai@tn.gov.in

180. Pudukkottai
Thiru Periyannan Arassu - DMK - 76396 62233
Phone : 04322-221929
mlapudukkottai@tn.gov.in

181. Thirumayam
Thiru S. Regupathy - DMK - 99431 36888
Phone : 04322-222221
mlathirumayam@tn.gov.in

182. Alangudi
Thiru Siva V. Meyyanathan - DMK - 98426 25119
mlaalangudi@tn.gov.in

183. Aranthangi
Thiru E. Rathinasabapathy - AIADMK - 94432 20942
mlaaranthangi@tn.gov.in

184. Karaikudi
Thiru KR. Ramasamy - INC - 94433 74221
mlakaraikudi@tn.gov.in

185. Thiruppattur
Thiru KR Periakaruppan - DMK - 94433 68479, Phone : 04577-267322
mlatiruppattur@tn.gov.in

186. Sivaganga
Thiru G. Baskaran (Hon. Minister) AIADMK - 94865 45109
mlasivaganga@tn.gov.in

187. Manamadurai (SC)
Thiru S. Mariappan Kennady - AIADMK - 95662 94549
mlamanamadurai@tn.gov.in

188. Melur
Thiru P. Periyapullan @ Selvam - AIADMK  - 98432 70541
mlamelur@tn.gov.in

189. Madurai (East)
Thiru P. Moorthy - DMK - 98421 22446
mlamaduraieast@tn.gov.in

190. Sholavandan (SC)
Thiru K. Manickam - AIADMK - 94430 56394 & 96296 24331
mlasholavandan@tn.gov.in

191. Madurai North
Thiru V.V. Rajan Chellappa - AIADMK - 94442 34620 & 95976 58715
Phone : 0452-2370789
mlamadurainorth@tn.gov.in

192. Madurai (South)
Thiru S.S. Saravanan, AIADMK - 99424 17649
mlamaduraisouth@tn.gov.in

193. Madurai (Central)
Thiru Palanivel Thiaga rajan - DMK - 94423 27251
mlamaduraicentral@tn.gov.in

194. Madurai (West)
Thiru K. Raju - (Hon. Minister) - AIADMK - 94449 67431 & 94439 27555
Phone : 0452-2536559 & 0452- 2539755
mlamaduraiwest@tn.gov.in

195. Thiruparankundram 
Thiru S.M.Seenivel 
mlathirupparankundram@tn.gov.in

196. Thirumangalam
Thiru R.B. Udhayakumar (Hon. Minister) AIADMK - 99439 11167
mlathirumangalam@tn.gov.in

197. Usilampatti
Thiru P. Neethipathi - AIADMK - 94433 70871
mlausilampatti@tn.gov.in

198. Andipatti
Thiru Thangatamilselvan - AIADMK - 98421 27696
Phone : 04554-27666
mlaandipatti@tn.gov.in

199. Periyakulam (SC)
Thiru Dr. K. Kathirkamu - AIADMK - 98421 75055
mlaperiyakulam@tn.gov.in

200. Bodinayakanur
Thiru O. Panneerselvam (Hon. Minister) AIADMK - 95662 13535 & 99942 88595
mlabodinayakanur@tn.gov.in

201. Cumbum
Thiru S.T.K. Jakkaiyan.- AIADMK - 94443 66663, Phone : 0452-2683693
mlacumbum@tn.gov.in

202. Rajapalayam
Thiru S. Thangappandian - DMK - 93645 44107
mlarajapalayam@tn.gov.in

203. Srivilliputhur (SC)
Tmt. M. Chandraprabha.- AIADMK - 93674 10981 & 96556 58203
mlasrivilliputhur@tn.gov.in

204. Sattur
Thiru S.G. Subramanian - AIADMK - 99430 27281
mlasattur@tn.gov.in

205. Sivakasi
Thiru K.T. Rajenthra Bhalaji. (Hon. Minister) AIADMK - 94433 43799
Phone :04562-232799
mlasivakasi@tn.gov.in

206. Virudhunagar
Thiru A.R.R. Seenivasan. - DMK - 98430 52844
mlavirudhunagar@tn.gov.in

207. Aruppukottai
Thiru K.K.S.S.R. Ramachandran.- DMK -98424 45899 Phone : 04562-43299
mlaaruppukottai@tn.gov.in

208. Tiruchuli
Thiru Thangam Thenarasu - DMK - 93622 01622 
Phone : 04566-288205 & 04566-292333
mlathiruchuli@tn.gov.in

209. Paramakudi (SC)
Dr. S. Muthiah, AIADMK - 94434 66699 - Phone : 04564-229990
mlaparamakudi@tn.gov.in

210. Tiruvadanai
Thiru S. Karunaas - AIADMK - 88707 08333 , Phone : 044-23766222
mlatiruvadanai@tn.gov.in

211. Ramanathapuram
Dr. M. Manikandan (Hon. Minister) AIADMK - 98409 47777
mlaramanathapuram@tn.gov.in

212. Mudukulathur
Thiru S. Pandi - INC - 94431 61004
mlamudukulathur@tn.gov.in

213. Vilathikulam
Tmt. K. Uma Maheswari.- AIADMK - 98429 81512
mlavilathikulam@tn.gov.in

214. Thoothukudi
Tmt. P. Geetha Jeevan - DMK - 94424 45210 & 94436 57799(PA)
mlathoothukudi@tn.gov.in

215. Tiruchendur
Thiru Anitha R. Radhakrishnan - DMK - 94886 36363 Phone : 04639-251113
mlatiruchendur@tn.gov.in

216. Srivaikundam
Thiru S.P. Shunmuganathan (Hon. Minister) AIADMK - 94887 33338
mlasrivaikuntam@tn.gov.in

217. Ottapidaram (SC) 
Thiru R. Sundararaj - AIADMK - 77080 84096 &  89034 62751
mlaottapidaram@tn.gov.in

218. Kovilpatti
Thiru Kadambur Raju (Hon. Minister) AIADMK - 94422 05002
mlakovilpatti@tn.gov.in

219. Sankarankovil (SC)
Tmt. M. Rajalakshmi (Hon. Minister) AIADMK - 97915 61576
mlasankarankovil@tn.gov.in

220. Vasudevanallur (SC)
Thiru A. Manoharan - AIADMK - 94431 34143
mlavasudevanallur@tn.gov.in

221. Kadayanallur
Thiru Muhammed Abubacker. K.A.M. - Indian Union Muslim League
95000 35786
mlakadayanallur@tn.gov.in

222. Tenkasi
Thiru S. Selvamohandos Pandian - AIADMK - 89035 71888
mlatenkasi@tn.gov.in

223. Alangulam
Dr. (Tmt) Poongothai - DMK - 73737 87333
mlaalangulam@tn.gov.in

224 . Tirunelveli
Thiru A.L.S. Lakshmanan - DMK - 94865 90666 Phone : 0462-2576966
mlatirunelveli@tn.gov.in

225. Ambasamudram
Thiru R. Murugaiah Pandian - AIADMK - 94433 70312 Phone : 04634-251466
mlaambasamudram@tn.gov.in

226. Palayamkottai
Thiru T.P.M. Mohideen Khan - DMK - 94431 41771 Phone : 0462-2322475
mlapalayamkottai@tn.gov.in

227. Nanguneri
Thiru H. Vasantha Kumar - INC - 98400 33350
mlananguneri@tn.gov.in

228. Radhapuram
Thiru I.S. Inbadurai - AIADMK - 98411 54054
mlaradhapuram@tn.gov.in

229. Kanniyakumari
Thiru S. Austin - DMK - 96771 48888
mlakanniyakumari@tn.gov.in

230 Nagercoil
Thiru N. Suresh Rajan - DMK - 97907 66663 Phone : 04652-232110
mlanagercoil@tn.gov.in

231 Colachel
Thiru J.G. Prince - INC - 94426 29700
mlacolachel@tn.gov.in

232 Padmanabhapuram
Thiru T. Mano Thangaraj - DMK - 94443 50150
mlapadmanabhapuram@tn.gov.in

233. Vilavancode
Tmt. S. Vijayadharani - INC - 93613 21204
mlavilavancode@tn.gov.in

234 - Killiyoor
Thiru S. Rajesh Kumar - INC - 94431 03539 Phone : 04651-267999
mlakilliyoor@tn.gov.in

235 Nominated (Anglo-Indian) 
Dr. (Tmt.) Nancy Ann Cynthia Francis Nominated 944347227 mlanominated@tn.gov.in


ஜிமெயிலில் அனுப்ப முடியாத பைல்கள்


ஜிமெயிலில் அனுப்ப முடியாத பைல்கள்


நாளை முதல் இந்த ஃபைல்களை ஜி மெயில் மூலம் அனுப்ப முடியாது! 
ஜி-மெயிலில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? நாளை முதல் ஒரு சில ஃபைல்களை உங்களால் ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என்று கூகுள் அறிவித்துள்ளது. இந்த ஃபைல்கள் மட்டுமின்றி ஏற்கெனவே சில ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி-மெயில் தற்போது .js என்ற அமைப்பில் உள்ள ஃபைல்களை பிப்ரவரி 13ம் தேதி முதல் அனுப்ப முடியாது என தெரிவித்துள்ளது. இந்த ஃபைல்களை அனுப்ப முயற்சித்தால் அதனை அனுப்ப முடியாது என்ற தகவலையும், ஏன் இந்த மெயில் அனுப்ப இயலவில்லை என்ற செய்தியையும் உங்கள் ஜி-மெயிலுக்கு கூகுள் அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏன் அனுப்ப முடியாது?

இந்த ஃபைலை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஜி-மெயிலில் இருக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக எளிதில் வைரஸ்களை பரப்பக்கூடிய ஃபைல்களின் வரிசையில் இது இருப்பதால் இந்த வகையான ஃபைல்களை ஜி-மெயில் மூலம் அனுப்ப முடியாது என அறிவித்துள்ளது கூகுள்.

இது மட்டுமின்றி சமீபத்தில் கூகுள் .ade, .adp, .bat, .chm, .cmd, .com, .cpl, .exe, .hta, .ins, .isp, .jar, .jse, .lib, .lnk, .mde, .msc, .msp, .mst, .pif, .scr, .sct, .shb, .sys, .vb, .vbe, .vbs, .vxd, .wsc, .wsf  மற்றும் .wsh வகை ஃபைல்களையும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி மெயில் 

இந்த ஃபைல்களை எப்படி அனுப்பலாம்?

இந்த ஃபைல்களை ஒரு தனிப்பட்ட நபருடைய ஜி மெயில் கணக்கிற்கு தான் மெயில் மூலமாக அனுப்ப முடியாது என கூகுள் அறிவித்துள்ளது. ஆனால் ஒருவருக்கு இதே ஃபைல்களை கூகுள் ட்ரைவ் மற்றும் க்ளவுட் ஸ்டோரேஜ் மூலமாக அனுப்ப முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.  

அதனால்  .js  ஃபைல்கள் இருந்தால் அவற்றை  இன்றைக்கே யாருக்காவது அனுப்புங்கள். இல்லையெனில் ட்ரைவ் மூலமாக அனுப்புங்கள். 

இது தவிர ஜி-மெயிலில் சில சுவாரஸ்யமான விஷயங்களும் உள்ளன.

1. உங்கள் மெயில் ஐடிக்கு யார் வேண்டுமானாலும் டாட் வைத்தோ அல்லது வைக்காமலோ அல்லது வேறு ஒரு இடத்தில் டாட் வைத்தோ அனுப்ப முடியும். இதில் எப்படி அனுப்பினாலும் உங்கள் மெயிலுக்கு மெயில் வரும் என்பது தான் ஜி மெயிலின் ட்ரிக்.

2. நீங்கள் அனுப்பிய மெயில் ஏதோ தவறுதலாக இருக்கிறது என்றால் அதனை திரும்ப பெறும் வசதியும் ஜி-மெயிலில் உள்ளது. இதற்கு ஒருவர் தனது ஜி-மெயில் செட்டிங்கில் உள்ள அன்டூ ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

3. கூகுளின் பூமராங் எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை ஸ்கெட்யூல் செய்துகொள்ள முடியும்

4. Checker Plus for Gmail என்ற எக்ஸ்டென்ஷன் மூலம் ஜி-மெயில்களை திறக்காமலேயே படிக்க முடியும்.  சில சமயம் மாஸ் மெயில் அனுப்பும் நிறுவனங்கள் எத்தனை பேர் இந்த மெயிலை திறந்துள்ளார்கள் என்ற டேட்டாவையெல்லாம் எடுக்கும்.

5. உங்கள் ஜி-மெயில் ஓப்பன் செய்து வலது கை ஓரத்தில் இருக்கும் கமென்ட்டை கவனியுங்கள். கடைசியாக எப்போது உங்கள் கணக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விவரம் இருக்கும் அதன் மூலம் உங்கள் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதையும் ஆராய முடியும்.

ச.ஸ்ரீராம்

நன்றி : விகடன் செய்திகள் - 12.02.2017

Saturday, February 11, 2017

அமெரிக்காவில் படிக்க வேண்டுமா?

No automatic alt text available.

அமெரிக்காவில் படிக்க வேண்டுமா?

அமெரிக்க கல்வி பெறுவது எப்படி?

சென்னை:அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க துாதரக அதிகாரிகள் கூறியதாவது:

அமெரிக்காவில் கல்வி பெற விரும்புவோர், எப் 1 விசா பெற வேண்டும். அது தொடர்பான நடைமுறைகளை அறிந்து கொள்ள, மே, 13ல், சென்னை, அமெரிக்க துாதரகத்தில் உள்ள நுாலகத்தில், மதியம், 2:30 மணி முதல், மாலை, 4:00 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

அதற்காக, http:/bit.ly/EducationUSAChennaiPDO என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்யவேண்டும். 

மேலும், ஜூன், 3 மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை, bit.ly/educationusawebinarஎன்ற இணையதளத்தில், ஆன்லைன் வகுப்பு நடைபெற உள்ளது. 

மாணவர்கள், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற புகைப்படத்துடன் கூடிய ஆவணங்கள் அல்லது பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்.

நேர்காணலுக்கு அழைக்கப்படுவோர், அழைக்கப்பட்ட நேரத்துக்கு, 15 நிமிடங்களுக்கு முன்னதாக வரக்கூடாது. 

எந்தெந்த பொருட்களை, சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்துக்கு கொண்டு வரக்கூடாது என்பதை,www.ustraveldocs.com/in/innivsecurityinfo.aspஅல்லது goo.gl/piYcPP என்ற இணையதளத்தில் பார்த்து அறியலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர்-கல்விமலர்-23.04.2016

பெண் - தன் மதிப்பு அறியாதவள்

Image may contain: 1 person, text

பெண் - தன் மதிப்பு அறியாதவள்

குட்டிக் கதைபெண்... கல் தோன்றி மண் தோன்றாத காலத்தில் இருந்து கவிஞர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களின் சிந்தனைக்கு வற்றாத அட்சயப்பத்திரமாக விளங்கி வரும் கருப்பொருள். பெண்களைப் போற்றியும், தூற்றியும், கிண்டலடித்தும் எழுதப்பட்ட கருத்துகள், கவிதைகள், கதைகள்... எண்ணில் அடங்காதவை!

சமீபத்தில் ‘வாட்ஸ்அப்’பில் உலாவரும், பெண்ணின் சிருஷ்டி பற்றிய, உள்ளத்தைத் தொடும் ஒரு கதை இங்கே... 

ஆண் உட்பட எல்லா உயிரினங்களை யும் படைத்து முடித்த கடவுள், இறுதியாகப் பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல... தொடர்ந்து ஆறு நாட்களாகப் பெண்ணைப் படைத்துக்கொண்டிருந்தார். அனைத்தை யும் கவனித்துக்கொண்டிருந்த தேவதை ஒன்று, `‘ஏன் இந்தப் படைப்புக்கு மட்டும் இவ்வளவு நாட்கள்?’’ என்று கேட்டது.

அதற்குக் கடவுள், `‘இந்தப் படைப்புக் குள் நான் நிறைய விஷயங்களை உள்ளடக்க வேண்டும். இந்தப் பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதைச் சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்னக் காயத்திலிருந்து உடைந்துபோன மனது வரை எல்லா வற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில் லாதபோதும் அவளே அவளைக் குணப் படுத்திக்கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும்தான் இருக்கும்’’ என்று விளக்கமாகச் சொன்னார்.

`‘இது அத்தனைக்கும் இரண்டே கைகளா?!’’ என்று ஆச்சர்யப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாகப் பெண்ணைத் தொட்டுப்பார்த்துவிட்டு, `‘ஆனால், இவளை மென்மையாகப் படைத்திருக்கிறீர்களே?’’ என்று கேட்டது.

`‘இவள் உடலளவில் மென்மை யானவள். ஆனால், மனதளவில் மிகவும் பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்துவிடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக்கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதைப் புன்னகை மீறாமலே வெளிப்படுத்தும் தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப்படுகிற விஷயத்துக்காகப் போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர் பார்க்காமல் அன்பை மட்டுமே அளவில்லாமல் தருவாள்’’ என்றார்.
``ஓ... இந்தளவுக்குப் பெண்ணால் யோசிக்க முடியுமா?!’’ என்றது தேவதை ஆச்சர்யம் விலகாமல்.

`‘எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல, அவற்றுக்குத் தீர்வையும் அவளால் சொல்ல முடியும்’’ என்றார் கடவுள்.

தேவதை, பெண்ணின் கன்னங்களைத் தொட்டுப்பார்த்துவிட்டு, `‘இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?’’ என்றது.

‘`அது கண்ணீர். அவளுடைய கவலை, துக்கம், துயரம், ஏமாற்றம், புறக்கணிப்பு, நிராகரிப்பு என்று எல்லா வலிகளுக்கும் அவளின் ஒரே எதிர்வினை அது மட்டும்தான்’’ என்றார் கடவுள்.

ஆச்சர்யமான தேவதை, `‘உங்கள் படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்தப் படைப்பில் எந்தக் குறையுமே கிடையாதா..?’’ என்று கேட்டது.

`‘தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது!’’ - குற்ற உணர்வுடன் பதிலளித்தார் கடவுள்.

நன்றி : அவள்விகடன் - 09.02.2016

கடன் வாங்கியவரின் உரிமைகள்

Image may contain: 1 person, text

கடன் வாங்கியவரின் உரிமைகள் 

கவலைப்படாதீர்கள் கடனாளிகளே! உங்களுக்கான 10 உரிமைகள்!

கடன் வாங்கியவர்கள் அதை சரியாகக் கட்டமுடியாத நிலை ஏற்படும் பட்சத்தில், அவர்களைக் கேவலமாகப் பேசும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

அதிலும் விஜய் மல்லையா வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திரும்பத் தராமலே வெளிநாடு ஓடியபின்பு, கடன்காரர்கள் நிலைமை படுமோசமாக மாறியிருக்கிறது. ஆனால், எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் சிக்கி, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் கடனாளிகளுக்கு சில உரிமைகளை வழங்கி இருக்கிறது நம் அரசாங்கம். அந்த உரிமைகள் என்ன என்று விளக்குகிறார் கடனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர் எம்.எம்.கினி.

‘‘ஒரு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வருபவரைவிட, கடன் வாங்க வருபவரைத்தான் கூடுதலாக மதிக்க வேண்டும். அவர் தரும் வட்டியும் கட்டணமும்தான் வங்கிக்குக் கிடைக்கும் முக்கிய வருமானம் ஆகும். ஆகவே, கடனாளிதான் வங்கியின் ஒரு முக்கியமான கூட்டாளி என்பதை நாம் உணர வேண்டும்’’ என்றபடி கடன் வாங்கியவருக்கு உள்ள உரிமைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

1. வங்கித் திட்டங்கள்!
வங்கியில் கடன் வாங்க வருகிறவருக்கு வங்கி தரும் கடன் திட்டங்களைப் பற்றி முழுமை யாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. கடன் தொகையை எப்படிக் கட்டினால் எளிதில் கடனைக் கட்டி முடிக்கலாம், எந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்கி னால் வட்டி குறையும் என்று முழு விவரத்தையும் கடன் வாங்கு பவருக்கு வங்கியாளர்கள் கட்டாயம் விளக்க வேண்டும்.

2. தகுதி!
ஒருவருக்கு கடன் கிடைக்குமா என்பதை வங்கியாளர் உடனடியாக அல்லது எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்ல வேண்டும். தேவை இல்லாமல் கடன் வாங்க வருபவரை இழுத்தடிக்கக் கூடாது.

3. திட்டத்தைப் பின்பற்றச் சொல்வது!
உதாரணமாக முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை எந்தப் பிணையமும் இன்றி முழுமையாக வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை 7 வருடம் வரை கட்டலாம். இது போன்ற உரிமைகளை கடன் வாங்குபவர் வங்கியாளர்களிடம் இருந்து கட்டாயம் கேட்டு தெரிந்து கொண்டு கடன் வாங்கலாம். இதற்கு பிணையம் தரச் சொல்லி, கடனாளியை வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது.

4. கூடுதல் கடன்! 
ஒரு நிறுவனம் அல்லது தனிநபர், கடன் வாங்கி தன் நிறுவனத்தை நிறுவி சரியாக நடத்திக் கொண்டிருக்கும்போது, குறிப்பாக வங்கியில் வாங்கியக் கடனை சரியாக காலம் தவறாமல் செலுத்தி, நல்ல லாபம் ஈட்டி தொழில் முன்னேறும் சமயத்தில் கூடுதல் கடன் கேட்டால் வங்கி கள் தேவையான மதிப்பீடுகளை செய்து கடனை வழங்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் நன்றாக செயல்பட்டு வரும் நிறுவனத்துக்கு கூடுதல் கடன் வழங்க முடியாது என்று சொல்லக்கூடாது.

5. அவமானப்படுத்தினால் இழப்பீடு!
ஒருவர் தன் சொந்தத் தேவைக்காகவோ அல்லது தன் நிறுவனத்தின் சார்பாகவோ மற்றொருவருக்கு காசோலையை கொடுக்கிறார். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகை, காசோலை வழங்கிய வங்கிக் கணக்கில் இருந்து, ஏதோ ஒரு காரணத்துக்காக காசோலையில் பணம் இல்லை என வங்கியானது அதை திருப்பி அனுப்பிவிட்டால், அதனால் ஏற்பட்ட அவமானத் துக்கு வங்கியிடம் நஷ்டஈடு கேட்கலாம்.

6. நோட்டீஸுக்கு 60-வது நாள்!
ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை 90 நாட்களுக்கு மேல் தன் தவணைகளை செலுத்த வில்லை என்றாலோ அல்லது வாராக் கடனாக வங்கியில் தீர்மானிக்கப்பட்டாலோ, கடன் வாங்கியவரின் சொத்தை விற்றுக் கடனை மீட்க வங்கிக்கு உரிமை இருக்கிறது. ஆனால், சொத்தை கையகப்படுத்தி விற்பதற்குமுன், கடனாளிக்கு தன் கடனை திருப்பிச் செலுத்த ஒரு நோட்டீஸ் அனுப்பி 60 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அப்படி 60 நாட்களில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால்தான் சொத்தை கையகப்படுத்தி விற்று கடனை மீட்டுக் கொள்ளலாம்.

7. மதிப்பீடு எவ்வளவு
கடன் வாங்கியவரால் 60 நாட்களுக்குள் பணத்தைக் கட்ட முடியவில்லை எனில், கடனாளியின் சொத்து எவ்வளவு தொகைக்கு வங்கி மதிப்பீட்டாள ரால் மதிப்பிடப்பட்டிருக்கிறது, எங்கு, எப்போது ஏலம் விடப் போகிறார்கள் என்கிற தகவல் களை கடன் வாங்கியவருக்கு தகவல் சொல்ல வேண்டும்.

8. கடன் வாங்கியவரே தன் சொத்தை விற்கலாம்!
ஒருவேளை வங்கி மதிப்பீட் டாளர் மதிப்பிட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகைக்கு கடனாளியின் சொத்து இருக்கும் என்றால் தாராளமாக வங்கியிடம் புகார் தெரிவித்து, மறு மதிப்பீடு செய்யச் சொல்லலாம். கடன் வாங்கியவரே கூட வங்கி மதிப்பீட்டைவிட கூடுதல் விலைக்கு சொத்தை வாங்கும் ஆட்களை வங்கிக்கு அறிமுகப்படுத்தலாம்.

9. கடன் போக உள்ள தொகை!
சொத்தை விற்றுவரும் பணம், வங்கியில் வாங்கிய கடன் மற்றும் ஏலம் நடத்தியதற்கான செலவுகள் போக மீதம் இருந்தால், அந்தப் பணத்தை வங்கியிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். வங்கியாளர் வழங்கும் எந்த நோட்டீஸாக இருந்தாலும், அதற்கு கடனாளி ஏதாவது மறுப்பு தெரிவித்தால், அடுத்த 7 நாட்களுக்குள் வங்கியாளர் கடனாளிக்கு பதில் சொல்ல வேண்டும்.

10. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை!
ஒரு கடனாளியை, வங்கி அதிகாரிகள் அல்லது ஏஜென்ட்டுகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே சந்தித்து கடனைப் பற்றி விசாரிக்கலாம். வங்கி அதிகாரிகளோ அல்லது ஏஜென்ட்டோ சந்திக்க வேண்டிய இடத்தை தீர்மானிக்க வில்லை என்றால் கடனாளியின் வீட்டுக்கோ அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கோ சென்று சந்திக்கலாம். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடனாளியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் வரும் வகையில் வங்கியாளர்கள் நடந்து கொள்ளக்கூடாது. கடனாளியின் குடும்ப உறுப்பினர்களை கிண்டலாகவோ, அவமரியாதை யாகவோ நடத்தக் கூடாது.

இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் முதலில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் புகார் கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் அடுத்து பிராந்திய மேலாளரிடம் புகார் தரவேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் மத்திய ரிசர்வ் வங்கியிட மும், பேங்கிங் ஆம்்புட்ஸ் மேனிடமும் புகார் தெரிவிக்க லாம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றங்களை படிப்படியாக அணுகலாம்’’ என கடன் வாங்கியவர்களுக்கு உள்ள உரிமைகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஆனால், இத்தனை உரிமைகள் இருக்கிறதே என்று வாங்கியக் கடனை மட்டும் திரும்பக் கட்டாமல் கம்பி நீட்டிவிடா தீர்கள். நாம் கட்டத் தவறும் ஒவ்வொரு ரூபாயும், வங்கி களுக்கும், அதில் டெபாசிட் செய்தவர்களுக்கும் மட்டுமல்ல, நம் நாட்டுக்கும் நாம் செய்யும் துரோகம் ஆகும்.

நன்றி : நாணயம் விகடன் - 01.05.2016

மனைவி

Image may contain: text

மனைவி

இதுதான்... இவ்வளவுதான் அவள் உங்களிடம் எதிர்பார்ப்பது!

ஆண் - பெண் உறவில், பெண் தன் நேசத்தில் நிறைந்து தளும்புகிறவளாக இருக்கிறாள். அவள் காதலை மட்டும் கடலெனப் பருகிவிட்டு, அவன் அவளுக்கு பதிலுக்குக் கொடுப்பது, காகம் கல்லைப்போட்டுக் குடித்த தண்ணீரைப்போல தூரில் கிடக்கும் பிரியம் மட்டுமே. நியாயம்தானா இது? 

‘நான் என்னதான் செய்யணும்... அப்படி அவளுக்கு என்னதான் வேணும்?’ என்ற ஆண்களின் கேள்விகள் வேண்டுமானால், அதை ஒரு சிக்கலான விஷயம்போல சித்தரிக்கலாம். ஆனால் அதற்கான பதிலும், அவள் எதிர்பார்ப்பும் மிகவும் எளிமையானவை. உங்கள் காதலி, மனைவி உங்களிடம் வேண்டுவது, ஏங்குவது, அன்பின் பரிமாற்றமே! 

உங்களுடன் பேச வேண்டும்!
அவளுக்கு உங்களுடன் பேச வேண்டும். எவ்வளவு பரிதாபமான கோரிக்கை இது? ஆனால் அதுதான் அவள் நிலை. அவள் சந்தோஷங்களை, துக்கங்களை, அச்சங்களை, கேளிக்கைகளை அவள் உங்களிடம் பேச வேண்டும், பகிர வேண்டும். யோசித்துப் பாருங்கள்... சமையல் குறித்த கட்டளைகள், பள்ளி, ட்யூஷன், ஃபீஸ் என்று குழந்தைகள் குறித்த விசாரிப்புகள், அலுவலகம், தொழிலில் நீங்கள் பெற்று வரும் அழுத்தங்களை வெளிப்படுத்தும் கோபங்கள், தலைவலி, கால்வலி என்று உங்கள் உடல் நோவைச் சரிசெய்யச் சொல்லும் ஏற்பாடுகள்... இதுதான் உங்களுக்கும் அவளுக்குமான உரையாடலாக இருக்கிறது. 

என்றாவது அவளிடம், உங்கள் தொழிலின் வெற்றித் தருணங்களை, அலுவலகத்தில் அன்று பெற்ற பாராட்டை, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் ரசித்த ஒரு பதிவை அவளுடன் பகிர்ந்திருக்கிறீர்களா? அல்லது, அவளது செடி பூத்த முதல் மலரை, அவள் ரசித்த பாடலை, அவள் ஊரின் கதைகளைப் பற்றி அவள் உங்களுடன் பேசி மகிழும் மணித்துளிகளை அவளுக்குத் தந்திருக்கிறீர்களா? அதைவிட மேலான வேலைகள் உங்களுக்கு இருப்பதாக இப்போதும் நீங்கள் நினைத்தால், ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் வெட்டியாகக் கழிக்கும் பொழுதுகளைச் சுட்டிக்காட்டட்டும் உங்கள் மனசாட்சி உங்களுக்கு! 

சின்னச் சின்ன அக்கறை வேண்டும்!
சமையல் அறையில் குக்கர்பட்ட சூடு, காய் நறுக்கும்போது கத்தி அறுத்த வெட்டு, வழுக்கி விழுந்த ரத்தக்கட்டு, வேலைக்கு விரைந்து ஓடுகையில் எங்கோ இடித்து கன்னிப்போயிருக்கும் வலிகளில் இருந்து பிரசவத் தையல்கள் வரை... அவளின் எந்தக் காயங்களும் உங்களுக்குப் பதறாதுதான். அதனால் இப்போதெல்லாம் அவளுக்கு எல்லாக் காயங்களும் ஊமைக்காயங்களே. ஆனால், இத்தனை வலிகளையும் அவள் உங்களுக்காக, உங்களாலேயே அனுபவிக்கிறாள் என்ற உண்மையும் உங்களால் உணரப்படாமல் ஊமையாகிக்கிடப்பதுதான் வேதனை. 

ஒரு காய்ச்சல் என்றால்கூட அம்மாவையோ, மனைவியையோ படுத்தியெடுக்கும் ஆண்களின் சௌகரியம் எல்லாம் அறியாதவள் அவள். ஒருவேளை அவளது தலைவலியை அவள் வாய்விட்டுச் சொன்னால், முதுகு வலிப்பதாகச் சொன்னால், பித்தவெடிப்பில் ரத்தம் கசிவதாகச் சொன்னால், சொன்னதில் இருந்து மறுமுறை, ஒரே ஒருமுறை, ‘சரியாயிடுச்சா?’ என்று மனதிலிருந்து கேளுங்கள். காலையில் சொன்ன அவளின் வலியை, அந்த நாளின் முடிவில் நீங்கள் நினைவுவைத்துக் கேட்பதிலேயே பாதி நோவு பறந்துவிடும் அவளுக்கு!

அவள் சுமை உணர வேண்டும்! 
வீடு, வேலை என்று இரட்டைச் சுமையில் தள்ளாடும் பெண்களைப் பற்றி பேசினாலே பிடிப்பதில்லை உங்களுக்கு. உங்களின் தேவைகள், உங்கள் வீட்டின் ஒழுங்கு, உங்கள் பிள்ளைகளின் பொறுப்புகள் இவற்றில் எல்லாம் எந்தக் குறையும் இல்லாதவாறு, அவள் பணிக்குச் செல்ல ஆட்சேபம் சொல்லாத மகத்தான சுதந்திரம் நீங்கள் அவளுக்குக் கொடுத்திருப்பது. ஆம், அவள் தலையணை உறை மாற்றி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டதுதான். ஆம், அவள் இந்த வீட்டை இன்னும் நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும்தான். ஆம், நீங்கள் மெத்தைமீது வீசிவிட்டுப் போகும் ஈரத்துண்டை அப்புறப்படுத்துவதைத் தவிர அவளுக்கு வேறு முக்கிய வேலைகள் இல்லைதான். செய்கிறாள். சிணுங்கிக்கொண்டோ, முணங்கிக்கொண்டோ, விம்மிக்கொண்டே அவள் இதையெல்லாம் செய்கிறாள். 

அலுவலகத்தின் திறன் ஓட்டத்தில், முதுகில் உங்கள் வீட்டைச் சுமந்தபடியே ஓடும் அவளை, கால்கள் இரண்டையும், கைகள் இரண்டையும் காற்றின் விசையில் வீசி ஓடும் அவளின் சக ஆண் போட்டியாளர் கடந்துசென்று எக்களிக்கும்போதும், அவள் துவண்டுபோய்விடுவதில்லை. ஏனெனில், தன் வீட்டை விலையாகக்கொடுத்து ஈட்டும் எந்த வெற்றியும் வெற்றியல்ல என்பதை அவள் அறிவாள்.

அப்படியிருந்தும், ‘வீட்டை ஒழுங்காவே பார்க்கிறதில்ல’ என்ற உங்களின் நன்றியில்லாத பேச்சுதான் அவளைத் துண்டு துண்டாக்கிவிடுகிறது. பெரிதாக அடுக்குவதால், பெரிதாக எதுவும் கேட்கவரவில்லை. அவள் தன் இரட்டைச் சுமை பற்றிப் புலம்பும்போது, அதை நம்புங்கள். அவள் சிரமங்களை ஒப்புக்கொள்ளுங்கள். ‘ரொம்ப வேலையா... ரெஸ்ட் எடுத்துக்கோ’ என்ற உங்களின் வார்த்தைகளே, அவள் இயக்குத்துக்கான எரிபொருள்! 

சிரிப்பில் கரைய வேண்டும்! 
அவளை நீங்கள் கடைசியாக சிரிக்கவைத்தது எப்போது? மிகக் கடினமான கேள்வி இது. சரி, அவளிடம் நீங்கள் கடைசியாக சிரித்துப் பேசியது எப்போது? அதனினும் கடினமான கேள்வியாக இருக்கக்கூடும். அலுவலகம், முகநூல், வாட்ஸ்அப் குரூப்கள் என்று எங்கும் பொங்கிப் பிரவாகமெடுக்கும் உங்கள் நகைச்சுவை உணர்வால், உலகத்தையே சிரிக்கவைக்க மெனக்கெடுகிறீர்கள். உங்கள் அலைபேசியில் உள்ள பெண் கான்டாக்ட்களுக்கு செய்தி அனுப்பும்போது, அது அலுவல் செய்தியாக இருந்தாலும்கூட குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலி இல்லாமல் அனுப்புவதில்லை. 

ஆனால், அவளிடம் நீங்கள் சிரித்துப் பேசவும், அவளை நீங்கள் சிரிக்கவைக்கவுமான தகுதியற்றவளாக அவள் ஆகிப்போனது துயரம். ஓர் உண்மை என்னவெனில், நீங்கள் சிரிக்கப் பேசும்போது மற்றவர்கள் எல்லாம் நீங்கள் உதிர்க்கும் சிரிப்புத் துணுக்குகளை ரசிப்பவர்கள். அவள், அந்தச் சிரிப்பில் பூக்கும் உங்களை ரசிப்பவள். மகிழ்ந்து, லயித்து நீங்கள் அவளிடம் ஒரு நகைச்சுவையை பகிரும்போது, மின்னும் உங்கள் கண்களில் காதல் கொள்பவள். யார் யாருக்கோ விதவிதமான ஸ்மைலிங் எமோஜிகளை தேடித் தேடித் தட்டும் நீங்கள், சின்ன ஸ்பரிசம் தரும் அருகாமையில் அவளிடம் அமர்ந்து சிரித்துப் பேசினால்போதும், அருவி அன்பு அது அவளுக்கு. நனைந்து கரைந்துபோவாள்! 

காற்றலையில் அனுப்பும் காதல் வேண்டும்!
வீட்டைவிட்டு வெளியேறும்போது அவளை மறந்துபோகிறீர்கள். மீண்டும் வீட்டுக்குள் நுழையும்போதே உங்கள் உலகில் அவள் நுழைகிறாள். ஆனால் அவளால் அவ்வாறு உங்கள் நினைவின்றி இருக்க முடியாது. அந்தத் தனிமையை துரத்தத்தான் டிவியில் இருந்து இணையம்வரை தன்னை ஒப்படைக்கிறாள். அந்தப் பகல்களில் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி, ஓர் அலைபேசி அழைப்பு உங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றால், அவளின் அந்த நாள் அத்தனை அழகாகிவிடும். 

சப்பாத்திக்கு மாவு பிசைந்துவைப்பதில் இருந்து, பிள்ளைகள் இரைத்துவிட்டிருந்த பொருட்களை எடுத்து வைப்பதுவரை, பின் இரவு நீங்கள் வீடு திரும்பும் சூழலை சுகமாக்குவதற்கான வேலைகளை முன் இரவே முடித்துவைப்பவள் அவள். காலணி கழட்டும்போது அவளைக் கண்டுகொள்ளாமல் கவிழ்ந்துகொண்டாலும்கூட, உங்கள் கண்களை விடாமல் துரத்தி அசதியா, அழுத்தமா, சந்தோஷமா, கோபமா என்று உங்கள் முகத்தில் மனதைத் தேடி நிற்பவள் அவள். அவள் பகல்களை மலரச் செய்யும் பிரியத்தை காற்றலையில் அனுப்பலாம்தானே?! 

அவள் புரிந்துகொள்ளப்படப் பிறந்தவள் அல்ல. நேசிக்கப்படப் பிறந்தவள். அவள் தன்னைப்பற்றி விளக்கத் தேவையில்லாத அளவுக்கு நீங்கள் அவளுக்குக் கிடைத்துவிட்டால், அவள்தான் இந்த உலகின் மிக சந்தோஷமான, ஆசிர்வதிக்கப்பட்ட பெண்!

உங்கள் வீட்டில் அப்படி ஒருத்தி இருக்கிறாளா?!

- தீபிகா (விகடன் செய்திகள் - 10.05.2016)
Image may contain: text

முருத் ஜைஞ்சிரா கோட்டை
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கடற்கரை கிராமமான முருத்தில் இருந்து சற்று தொலைவில் அரபிக்கடலுக்குள் இருக்கும் சிறிய தனித்தீவு ஒன்றில் மேல் கட்டப்பட்டிருக்கும் 'முருத்-ஜைஞ்சிரா' கோட்டையானது இந்தியாவிலிருக்கும் மிகவலிமையான கடல் கோட்டைகளுள் ஒன்றாகும்.
அக்காலத்தில் உலகின் மிக வலிமையான கடற்படைகளை கொண்டிருந்த போர்த்துகீசியர்களுக்கும், பிரிட்டிஷ் படைகளுக்கும் மராத்தியர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய இக்கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். 

தீவுக்கோட்டை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையிலிருந்து 165கி.மீ தெற்கே ரைகாத் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான முருத்தில் இருந்து சற்றே தொலைவில் அரபிக்கடலுள் முட்டை வடிவ பாறையின் மேல் கட்டப்பட்டிருக்கிறது 'முருத் ஜைஞ்சிரா' என்னும் தீவுக்கோட்டை. 

தீவுக்கோட்டை - பெயர் காரணம்:
அரபி மொழியில் தீவு என்று பொருள்படும் 'ஜசேரா' மற்றும் இக்கோட்டையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களான சித்திக்களை குறிக்கும் 'முருத்' என்ற மராத்திய சொல்லின் கலவையே 'முருத் ஜைஞ்சிரா' ஆகும். 

முருத் ஜைஞ்சிராவின் அமைப்பு :
முருத் ஜைஞ்சிரா கோட்டையின் முக்கிய வாயில் கரையிலிருக்கும் ராஜாபுரியை நோக்கியபடி அமைந்துள்ளது. இந்த நுழைவுவாயிலின் சிறப்பம்சமே கரையிலிருந்து வருகையில் இவ்வாயிலுக்கு 12.மீ அருகில் வருகையில் தான் தெளிவாக புலப்படும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. 
எதிரிப்படைகள் கோட்டை வாயிலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கவே இந்த ஏற்பாடாகும்.

மேலும் இக்கோட்டையை சுற்றிலும் 21கோட்டை கொத்தளங்கள் இருக்கின்றன. இன்றும் உறுதியாக நிற்கும் இக்கொத்தளங்களின் மேல் இந்தியாவிலும், ஐரோப்பாவிலும் தயாரிக்கப்பட்ட நெருப்பை உமிழும் மிகப்பெரிய பீரங்கிகள் நிறுவப்பட்டிருக்கின்றது.

முருத் ஜைஞ்சிராவினுள் இயங்கிய குட்டி நகரம்:
தனித்தீவாக அமைந்திருக்கும் இந்த கோட்டையினுள் கிட்டத்தட்ட ஒரு குட்டி நகரமே இயங்கிவந்திருக்கிறது. மாளிகைகள், அரசு அலுவலர்கள் தங்குவதற்கான விடுதிகள், மசூதி, 60அடி ஆழமுடைய இரண்டு நன்நீர் குளங்கள் போன்றவை இருந்திருகின்றன.

இக்கோட்டையினுள் சித்தி நவாப்புகள் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகைகள் இன்றும் பொலிவுடன் இருக்கின்றன. இக்கோட்டையில் இருக்கும் சவ்ரி, லண்ட கசம், கலால் பங்க்டி என்ற பெயர்கொண்ட மூன்று பீரங்கிகள் நெடுந்தொலைவில் இருக்கும் இலக்குகளையும் கூட துல்லியமாக தாக்கும் வல்லமையுடன் இருந்திருக்கின்றன. 

முருத் ஜைஞ்சிராவின் வரலாறு:

முதன்முதலில் 15ஆம் நூற்றாண்டில் மராத்திய மீனவ தலைவராக இருந்த ராஜாராம் பாட்டில் என்பவரால் இக்கோட்டை சிறிய அளவில் கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் 17ஆம் நூற்றாண்டில் அஹமத் நகர் சுல்தானிடம் அமைச்சராக இருந்த சித்தி இனத்தவரான மாலிக் அம்பர் என்பவரின் கட்டுப்பாட்டில் இக்கோட்டை வந்திருக்கிறது. 
இவரைத்தொடர்ந்து வந்த புர்ஹன் கான் என்பவர் இக்கோட்டையை மிகப்பெரியதாகவும், தகர்க்கமுடியாத வலிமை கொண்டதாகவும் மாற்றியிருக்கிறார்.

கைப்பற்றமுடியாத இரும்புக்கோட்டை :

கடந்த 350 ஆண்டுகளாக யாராலும் கைப்பற்ற முடியாத கோட்டை என்ற சிறப்பை முருத் ஜைஞ்சிரா பெற்றுள்ளது. மாராத்திய மன்னன் சிவாஜி பலமுறை இக்கோட்டையை கைப்பற்ற முனைந்து தோல்வியடைந்திருக்கிறார். 
சிவாஜியின் மகனான மன்னன் ஷாம்பாஜியும், போர்த்துகீசியர்களும், பிரிட்டிஷ் படைகளும் கூட இக்கோட்டையை கைப்பற்ற முடியாமல் தோல்வியடைந்திருக்கின்றன. 

இன்றைய நிலை:

இந்தியாவில் இருக்கும் அரிய வரலாற்று சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழும் இக்கோட்டையை சுற்றிப்பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
முருட் ஜஞ்சிரா கடல் கோட்டையை ராஜபுரி ஜெட்டியிலிருந்து அடையலாம்.

தொன்மை வாய்ந்த கோட்டையை தவிர இந்த முருட் நகரம் அற்புதமான விடுமுறை ஸ்தலமாகவும் உள்ளது. இங்குள்ள கடற்கரை தூய்மையான வெண்ணிற மணலுடன் வரிசையாக பாக்கு மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் அணிவகுத்திருக்க இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது. சுற்றிலும் பசுமையுடன் ஸ்படிகம் போல் சூரிய வெளிச்சத்தில் மின்னும் கடல்நீர் சுற்றுலா பயணிகளை காந்தம் போன்று வெகுவாக கவர்ந்து ஈர்க்கிறது. 

நன்றி : Nativeplanet » Tamil » Travel Guide - 29.02.2016

போதைக்கு அடிமையான அப்பாவிற்கு

Image may contain: text

போதைக்கு அடிமையான அப்பாவிற்கு .....

அந்த பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த கடிதத்தை எழுதும் அவசியம் இருந்திருக்காது அப்பா...!'

அன்புள்ள அப்பா,

காலம் எவ்வளவு வேகமாக உருண்டோடிவிட்டது....?! ஆனால், எல்லாமே நேற்று நடந்தது போல உள்ளது... இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன. என்னால் நம்ப முடியவில்லை. 

10 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய தினம்தான் என்னிடம் இருந்து, இல்லை எங்களிடம் இருந்து பிரியா விடை பெற்றீர்கள் அப்பா! நினைக்கும்போதே என்னவோ செய்கிறது.

அப்பா, இப்போது எனக்கு 24 வயதாகிறது. என்னைச் சுற்றி என் வயதுடையவர்கள் படித்து முடித்து விட்டார்கள். சிலருக்கு திருமணமும் முடிந்து விட்டது. ஆனால், நான் நீங்கள் பாதியில் விட்டுச் சென்ற பயணத்தைத் தொடர, இப்போது ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறேன். 10 வருடங்களாக பல வேலைகளைச் செய்து வருகிறேன். 

ஆம் அப்பா, நீங்கள் சென்றதில் இருந்து நான் பள்ளிக்குச் செல்லவே இல்லை. மூத்த பெண் குழந்தையைச் செல்லமாக வளர்த்தீர்கள். தம்பிகள் இருவரும் உங்களைப் பார்த்தே வளர்ந்தார்கள். உங்களைப் பற்றியே கேட்டு கேட்டு, இன்று அவர்களின் நிலையைக் காண நீங்கள் இல்லை. அது ஒருபுறம் இருக்க, 'அவர்களையாவது படிக்க வைக்க வேண்டும்' என்ற மிகப் பெரிய பொறுப்பு என்மீது இருந்தது.

நீங்கள் தொடர்ந்து புகையிலையைப் பயன்படுத்தியதால் அம்மாவிற்கு காச நோய் வந்துவிட்டது. நீங்கள் இறந்துபோனதும், அம்மாவை வேலைக்கு அனுப்பினாலும், அதிகமாக வேலை செய்ய முடிந்ததில்லை. அதனால், அப்போது நான் செங்கல் செய்யும் வேலைக்குச் சென்றேன். இது அனைத்தையும் நீங்கள் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் என நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டேன். அங்கு இரவு 12 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார்கள். 

உங்கள் அருகில் உறங்கியது போல நிம்மதியாக என்னால் உறங்க முடிந்ததே இல்லை. அங்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், யாரிடமும் கூறிக் கொள்ளவில்லை. என் படிப்பு போனதுதான் மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனால், தம்பிகள் படிக்க வேண்டும் அல்லவா? அவர்கள் நிச்சயம் பெரிய ஆளாக வருவார்கள் என, கேட்டதை எல்லாம் செய்தேன். ஆனால், அவர்கள் அருகில் இருந்து என்னால் கண்டித்து வளர்க்க முடியவில்லை. அது எவ்வளவு பெரிய தவறு என இப்போது தெரிகிறது!

செங்கல் சூளையில் தரும் 300 ரூபாயில் அம்மாவின் மருந்து செலவு, தம்பிகளின் படிப்பு, சாப்பாடு என அனைத்தையும் பார்க்க மிகவும் கஷ்டப்பட்டேன். அதனால், துணி மில்லுக்கு வேலைக்குச் சென்றேன். அங்கு இதைவிட வலி அதிகம் அப்பா. நான் அழாத நாட்களே இல்லை. நான் பெண் என்பதால் ஒரு தந்தையிடம் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்தேன். 

ஆனால், தம்பிகளின் படிப்பிற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். அவர்களுடைய அனைத்து தேவைகளுக்கும் பணம் கொடுத்த நான், அந்தப் பணத்தை என்ன செய்கிறார்கள் எனக் கவனிக்கத் தவறினேன். நீங்கள் இருந்து இருந்தால் நிச்சயம் இப்படி நடந்திருக்காது, என நினைக்கிறேன்!

அம்மாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டு இருக்கிறது. அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதால் வேலையை விட்டு வந்தேன். இங்கு துணிக் கடையில் மாதம் ரூ.3,000 த்திற்கு வேலை செய்கிறேன். உங்களிடம் சிலவற்றை கேட்க வேண்டும் என்ற எண்ணம், என்னை இப்போது அதிகளவு தொற்றிக் கொண்டுள்ளது. அதனால்தான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

ஒரு அப்பாவின் அரவணைப்பில் நான் இருந்த காலம் மிகவும் குறைவு. உங்களின் சிரிப்பு மட்டுமே என் நினைவில் உள்ளது. நான் உங்களிடம் ஆறாவது பிறந்தநாள் அன்று பரிசாக ஒரு வரம்... ஆம் வரம் என்றே கூறலாம். வரம் கேட்டேன். "அப்பா புகையிலை பழக்கத்தை விட்டு விடுங்கள்" என்று. 

ஆனால், அதை ஏனோ எனக்குத் தர மறுத்து விட்டீர்கள். அதனால், நாங்கள் அனாதையாக மாறினோம். அன்று நாங்கள் ஆதரவின்றி போனோம் என்று மட்டும்தான் எண்ணினேன். ஆனால் இப்பொழுதுதான் தெரிகிறது உங்கள் இருப்பின் தாக்கமும், இறப்பின் தாக்கமும் எந்தளவு தொக்கி நிற்கிறது என்று. உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால், இதுநாள் வரை எனக்கு உங்கள் மீது கோபம் வந்ததே இல்லை. 

இப்போது வருகிறது அப்பா. அதிகமாக வருகிறது. நீங்கள் எங்களைப் பார்த்துக் கொண்டுதானே, உங்களின் இன்பத்திற்காக, சுயநலத்திற்காக புகையிலை உபயோகித்தீர்கள். எங்கள் மீது நீங்கள் வைத்திருந்த அன்பைக் காட்டிலும் புகையிலை முக்கியமாகப் போனது. அதனால்தான் நான் இன்று கண்ணீரால் இக்கடிதத்தை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இன்று நான் இந்த கடிதத்தை எழுதும் அவசியம் இருந்திருக்காது அப்பா...!

புற்றுநோயினால் நீங்கள் அவதிப்பட்டு, இறந்து போன நொடிகளில் என் பாதி உயிர் போனது. என் மீதி உயிரைக் கொடுத்து படிக்க வைத்த என் தம்பிகள், இன்று புகையிலைக்கு அடிமையாகி விட்டார்கள். எப்படி என்று தெரியவில்லை. அம்மாவின் இயலாமையைப் பயன்படுத்தி இப்படி செய்துள்ளார்கள் அப்பா.

பீடியோ, சிகரெட்டோ, பொடியோ ஏதாவது ஒரு வழியில் அவர்களுக்கு போதை தேவைப்படுகிறது. நான் என்ன செய்ய முடியும்...? நீங்கள் அம்மாவை அடித்து காசு வாங்கிச் செல்வது போல, அவனும் வாங்குகிறான். சிறு வயதில், உங்கள் செயல்கள் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன. ஒரு அப்பாதான் தன் பிள்ளைகளின் ஹீரோ. 

ஆனால் ஏனோ உங்கள் செயலால்தான் இன்று தம்பிகள் மெல்ல மெல்ல புகையிலைக்கு அடிமையாகி விட்டார்கள். பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டார்கள். பயமாக உள்ளது. இவர்களின் இந்த பழக்கத்தால், நாளை மீண்டும் என்னைப் போல ஒரு மகனோ, மகளோ இதுபோல அவனுக்குக் கடிதம் எழுதும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. 

அப்பா, இன்று இரண்டாம் முறையாக உங்களிடம் ஒரு வரம் கேட்கிறேன். அவர்களைத் எப்படித் திருத்துவது என ஒரு வழி கூறுங்கள் அப்பா. என் கண்ணீர் நிச்சயமாக உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு கடிதத்தை முடிக்கிறேன் அப்பா.

இப்படிக்கு உங்கள் செல்ல மகள்......
(புகையிலை போதைக்கு அடிமையான அனைத்து அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்)
நன்றி : விகடன் செய்திகள் - 31.05.2016



அப்பா

Image may contain: one or more people and text

அப்பா

'அப்பாக்களின் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணங்கள்'

வாழ்வில், ஆணானாலும் பெண்ணானாலும் பல பரிணாமங்களைக் கடக்கின்றனர். ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக, தோழியாக எனப் பலவற்றைக் கூறலாம். ஆனால், நாம் யாரும் அநேகமாக பெண்ணுக்கு நிகரான ஆணின் பங்கைப் பற்றி பேசுவதில்லை. அதுவும் முக்கியமாக ஓர் ஆண் 'அப்பா'வாக மாறுவதைப் பற்றி யாரும் உரையாடுவது இல்லை. தாய்மை பற்றியும், குழந்தைப் பேறு பற்றியும் கவிதைகள் எழுதி எழுதி, அப்பாவைப் பற்றி சற்று யோசிக்க மறந்து விட்டோம். எந்த அளவுக்கு எனில் 'தாய்மை' என்ற சொல்லுக்கு இணையான ஆண்பால் சொல்லே நமக்குத் தெரியாதே! 

தாயின் மனநிலையை பலமுறை, பல கோணங்களில் கேள்விப்பட்ட நாம் இன்று, சில நொடிகள் நம் தந்தையைப் பற்றிச் சிந்திக்கலாம். சில நேரங்களில் செல்லமாகவும், அநேகமாக கறாராகவும் இருக்கும் நம் அப்பாக்களின் வாழ்வில், அவர்கள் ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் மறக்க முடியாத தருணங்கள் பற்பல.

1. முதல் முத்தம்!
முதன்முதலில், தன் குழந்தையின் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட அந்த நொடி! அந்த உணர்ச்சியை எந்த கவிஞனாலும், எழுத்தாளனாலும் இன்று வரை கூற முடிந்ததே இல்லை. தன் ரத்தம், தன் வாரிசு, தன் குழந்தை, அடுத்த சில வருடங்களில் தன்னைத் தாங்கப் போகும் தூணான, அக்குழந்தையை முதன்முதலில் கையில் ஏந்தி, முத்தம் கொடுத்த அந்த நொடியை எந்த ஒரு அப்பாவாலும் மறக்கவோ, விளக்கவோ முடியாது.

2. ஆள்காட்டி விரல்!
குழந்தை தன் பிஞ்சு கைகளால், அந்த மெல்லிய விரல்களால், முழு கையையும் வைத்து அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பிடிக்கும். அந்த அழகை ரசிக்கவே அப்பாவிற்கு ஆயிரம் கண்கள் வேண்டுமே! என்ன செய்வார் அவர்? நேரம் கிடைக்கும் போது எல்லாம் தன் விரலை குழந்தையிடம் நீட்டி நீட்டி விளையாடும் அப்பாக்களை தினமும் பார்க்கலாம். அதன் பின்னால், எவ்வளவு பேரானந்தம் ஒளிந்து இருக்கிறது என்பதை நம்மால் ஒருகாலமும் உணர முடியாது.

3. ராஜகுமாரியின் சேட்டைகள்!
ஒரு அப்பாவுக்குப் பெண் குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அந்த குட்டி தேவதையை தன் மடியைவிட்டு இறக்கவே மாட்டார். தன் மார்பில் அவள் எட்டி உதைக்கும் சுகமும், அவளின் அழகிய கொஞ்சல் சிரிப்பும் அப்பாவை வீழ்த்தும் அஸ்திரங்கள். ராஜகுமாரியை கொஞ்சி கொஞ்சி நாட்களைக் கழிக்கும் அப்பாவின் மனதில் இருக்கும் ஒருவித உணர்ச்சி... அதை குறிக்க சொற்களை கண்டுபிடிக்கத்தான் வேண்டும்!

4. அப்பா...!
'ங', 'க', 'ஆ', 'ஊ' என தன் குழந்தையின் ஓசைகளையும், அழுகுரலையும் கேட்டு கேட்டு திருப்தி அடைவதற்குள் 'அப்பா' என ஒரு குரல் கேட்கும்! கட்டுக்கடங்காத காட்டாறு போன்ற மகிழ்ச்சிதான் அங்கு பாயும். ஆனால், நம் அப்பாக்களுக்குத்தான் அம்மாவைப் போல மகிழ்ச்சியை வெளிப்படுத்த தெரியாதே, அதனால் வாயெல்லாம் பல்லாக, 'அப்பா சொல்லு, அப்பா சொல்லு' எனக் கூறிக் கொண்டே இருப்பார்கள்!

5. முதல் அடி!
தன் மார்பிலும், முதுகிலும், தோளிலும் தவழ்ந்த அந்த பிஞ்சு பாதங்கள் முதல் அடியை எடுத்து வைத்ததும், அம்மாவின் சிரித்த முகம்தான் அநேகமாக முதலில் தெரியும். ஆனால், அப்பாவின் ஆனந்தக் கண்ணீரும், மகிழ்ச்சியும் நமக்கு அவ்வளவாக தெரிவதில்லை. காரணம், அவர்கள் நாம் விழாமல் இருக்க நமக்குப் பின்னால் நம்மைத் தாங்கிக் கொண்டு இருப்பார்கள்.

6. வெற்றி இல்லை சாதனை!
மெல்ல அப்பாவின் சுண்டு விரலை பிடித்து நடை பயின்ற தன் கண்மணியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அப்பாவின் வெளிப்படுத்தப்படாத குதூகலம் ஒளிந்து இருக்கும். நம்முடைய ஒவ்வொரு சிறு வெற்றியைக் கூட மிகப் பெரிய சாதனையாக எண்ணி நம் அப்பா கர்வப்படுவார். நம்முடைய ஒவ்வொரு செயலையும் சாதனையாக மாற்றுவதில் அப்பாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது! ஆனால், நம் அப்பா எதையும் வெளிக்காட்டுவதில்லை, கண்டிப்பைத் தவிர! ஆனால், அதே கண்டிப்புதான் நம்மை ஒரு சிறந்த ஆளுமையாக மாற்றுகிறது என்பதை காலம்தாதான் நமக்கு உணர்த்தும்.

7. குட்டிதேவதை வளர்ந்த நொடி!
தன் விரல் பிடித்து நடந்த தன் குட்டி தேவதை பருவ வயதில், பூப்பெய்தியதும், தன்னை அறியாமல் ஒரு ஆனந்தமும், பயமும் அப்பாவின் உடல் எங்கும் பரவும். அந்த உணர்வை எப்படி சொல்லலாம்? தன் பெண்ணைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும், அவளுக்குத் தேவையானதைச் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பும், இன்னும் வெகுசில வருடங்களில் அவள் இன்னொருவனின் மனைவி என்கிற எண்ணத்தின் தாக்கமும், பேரானந்தமும் ஒருசேர ஒருவித உணர்ச்சியை அப்பாவின் மனதில் உருவாக்கும். அதைப் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களால் மட்டுமே உணர முடியும்.

8. திருமணம்!
காலங்கள் உருண்டோட 'நேற்று பிறந்த குழந்தை போல' தோன்றும் தன் பிள்ளைக்கு திருமண நாள் குறிக்கப்படும். மகனாக இருந்தால், அவனை நல்ல ஒரு ஆண்மகனாக வளர்த்து, தன்னை நம்பி வரும் பெண்ணை தன் தாய்க்கு நிகராக நடத்துபவனாக மாற்றி இருக்க வேண்டும். மகளாக இருந்தால், அவளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். தன் மகளின் கைகளை தன்னைவிட பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் ஓர் ஆடவனிடம் ஒப்படைக்கும் நொடி... நம் மகளின் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒருபுறமும், இனி இவள் மீது இவள் கணவனுக்கே முதல் உரிமை என்ற நிதர்சனமான உண்மை மறுபுறமும் மாறி மாறி அலைக்கழிக்கும். ஆனாலும், உதட்டில் புன்னகையுடனும், கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணீருடனும் தன் மகளை, மருமகளாக இன்னொரு வீட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் அப்பாவின் மனதில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்!

இப்படி ஒரு அப்பாவின் வாழ்வு முழுவதுமே சிறு சிறு நெகிழ்ச்சியுறும் தருணங்களால் நிறைந்தவையே. ஆனால், நம் கண்களுக்குத்தான் அது தெரிவதில்லை. நாம் நம் அப்பாவிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அவரிடம் எவ்வளவு கோபப்பட்டாலும், அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பும் காதல் என்றும் குறையாது. சின்னச் சின்ன தருணங்களிலேயே மனநிறைவு அடையும்.

அப்பாக்களுக்கு நிகர் அப்பாக்கள் மட்டுமே!

-ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)


நன்றி : விகடன் செய்திகள் - 18.06.2016