disalbe Right click

Saturday, June 10, 2017

40 ரூபாய்க்காக 3 ஆண்டுகள் போராடிய 70 வயதுப்போராளி!

40 ரூபாய்க்காக 3 ஆண்டுகள் போராடிய 70 வயதுப்போராளி!
40 ரூபாய்க்காக 3 ஆண்டுகள் போராடி நீதிமன்றத்தால் புகழப்பெற்ற 70 வயதுப்போராளி!
தனக்கு நிகழ்ந்தது அநீதி என நினைக்கும் எந்த ஒரு மனிதனும் கிடைக்கிறதோ இல்லையோ, இறுதிவரை நீதியைத் தேடுவான். இதன் சமீபத்திய உதாரணம் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த லேக்ராஜ். வெறும் 40 ரூபாய் பெனால்டியை எதிர்த்து, இந்த 70 வயது முதியவரின் நெடும்பயணம், தலைநகர் டெல்லியில் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
தேசிய நுகர்வோர் ஆணையத்தில், கடந்த வார இறுதியில் இவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவரிடம் வசூல் செய்யப்பட்ட 40 ரூபாயைத் திரும்ப அளிக்கச் சொன்ன அந்தத் தீர்ப்பின் பின் மூன்றாண்டு நெடிய பயணம் இருக்கிறது.
இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தை லேக்ராஜ், ஓர் எழுத்தாளர். இவர் அந்த மாநில வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டி விற்கப்படும் வீடுகளில் ஒன்றுக்காக விண்ணப்பித்திருந்தார். அதன்படி இவருக்கு வீடும் ஒதுக்கித் தரப்பட்டது. அந்த வீட்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திய பிறகு, இதர செலவுகள் எனக் குறிப்பிட்டு 808 ரூபாய் கட்டச் சொன்னார்கள். அதே கடிதத்தில் 808 ரூபாயை உரிய நேரத்தில் கட்டாத காரணத்தால், 40 ரூபாய் தண்டத்தொகையும் சேர்த்து 848 ரூபாய் கட்டச்சொல்லி லேக்ராஜுக்குத் தகவல் வந்தது.
அந்தத் தொகையைக் கட்டவேண்டிய இறுதி நாள் இன்னும் இருக்கும் நிலையில், `ஏன் 40 ரூபாய் அதிகம் கட்ட வேண்டும்? முடியாது' என்று லேக்ராஜ் மறுத்தார். `உடனடியாகக் கட்டவில்லை என்றால் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் துண்டிக்கப்படும்' என வீட்டுவசதி வாரியத்திடமிருந்து தகவல் வந்தது. இதனால் உடனடியாக 848 ரூபாயைச் செலுத்திய லேக்ராஜ், சட்டரீதியான நடவடிக்கை எடுத்தார்.
`மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தமக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி, 40 ரூபாய் அதிகம் வசூல் செய்துவிட்டனர்' எனப் புகார் அளித்தார். மிக மெதுவாக நடந்த அந்த விசாரணையின் தீர்ப்பு, 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்டது. `லேக்ராஜுக்கு விற்கப்பட்டபோது வழங்கப்பட்ட வீடு ஒதுக்கீடு கடிதத்தில் உள்ள 'விதிகள் மற்றும் நிபந்தனை'களின் அடிப்படையில் தண்டத்தொகை பெறப்பட்டது தவறில்லை' என்று அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பால் லேக்ராஜ் மேலும் மன உளைச்சல் அடைந்தார். காரணம், அப்படி ஒரு 'விதிகள் மற்றும் நிபந்தனைகள்' என்ற ஒன்றுகுறித்துத் தெரிவிக்கப்படவே இல்லை. அதன் பிறகு சிம்லாவில் உள்ள மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கும் கீழ்கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், 1,000 ரூபாய் தண்டமும் கட்டச்சொல்லி உத்தரவிட்டனர். இது அவரின் மன உறுதியைச் சிதைக்கவில்லை. மாறாக அதிகப்படுத்தியது. தனி ஒருவனாக அரசு நிர்வாகத்தின் அநீதியை எதிர்க்க இன்னும் தீவிரமாக முடிவுசெய்தார்.
சிம்லாவைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் ஆணையத்தில் இந்த ஆண்டு முறையீடு செய்தார். ஒருவழியாக டெல்லியில் லேக்ராஜின் போராட்டத்துக்கு முடிவு கிடைத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கே.ஜெயின், எழுத்தாளர் லேக்ராஜை வெகுவாகப் புகழ்ந்தார். ``அவரின் மன உறுதியைப் புகழ சொற்களே இல்லை'' எனத் தெரிவித்த அவர், `இந்த வழக்கின் மூலம் அறிவார்ந்த ஒரு மூத்த குடிமகன் அடையாளம் காணப்பட்டுள்ளார். எவ்வளவு குறைவான பணமாக இருந்தாலும் உயர்ந்த அதிகாரப் பீடங்களுக்கு எதிராக வீடு கொடுக்காமல் அதைப் போராடிப் பெறுவதற்கும் பெரிய போர்க்குணம் வேண்டும். அது லேக்ராஜிடம் இருக்கிறது. மேற்படி தண்டம் செலுத்தவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. காரணம், அவரின் ஒதுக்கீட்டுக் கடிதத்தில் அப்படி ஒன்றைக் குறிப்பிடவே இல்லை. எனவே, அவரின் பணமான 40 ரூபாயையும் இவரின் சட்டப் போராட்டத்துக்கு ஏற்பட்ட செலவுகளுக்காக 5,000 ரூபாயையும் உடனடியாக வழங்க உத்தரவிடுகிறேன்' என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
வரவனை செந்தில்
நன்றி : விகடன் செய்திகள் - 10.06.2017




உச்சவரம்பின்றி ரொக்கமாக வாங்கலாம் பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவு

உச்சவரம்பின்றி ரொக்கமாக வாங்கலாம் பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவு
கறுப்புப் பணம் கை மாற வாய்ப்பு!
கோவை, :வழிகாட்டி மதிப்பு, 33 சதவீதம் குறைக்கப்பட்டது தொடர்பாக, அனைத்து பதிவு மாவட்ட அலுவலர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை, பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில், பத்திரப்பதிவுகள் குறைந்து விட்டதாகவும், இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் காரணம் தெரிவித்து, கடந்த 2012லிருந்து நடைமுறையில் இருந்த வழிகாட்டி மதிப்பை, 33 சதவீதம் வரை குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் சார்பில், அனைத்து பதிவு அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
கடந்த 8ல், அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் (எண்:25735/சி1/2017 நாள்: 08.06.2017), குறைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி நடைமுறைப்படுத்துதல் மற்றும் கிரயம், பரிவர்த்தனை, தானம், குடும்ப நபர் அல்லாதவர்களுக்கு இடையேயான ஏற்பாடு ஆவணங்களுக்கு பதிவுக்கட்டணம் உயர்த்துதல் தொடர்பான நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதிலும் உள்ள, 50 பதிவு மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம புல எண்கள் மற்றும் தெருக்கள், நகர்களுக்கும் பொருந்தும் வகையில், இது நடைமுறை படுத்தப்படுகிறது என்று துவங்கும் இந்த சுற்றறிக்கை, மொத்தம், 14 விஷயங்களைக் குறிப்பிட்டு, தனித்தனியாக விளக்கம் அளிக்கிறது.
சீரமைக்கப்பட்ட சதுர மீட்டர் மதிப்பானது, இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பதைக் கடைபிடிக்க வேண்டும் என, முதலில் கூறியுள்ள பதிவுத்துறை தலைவர், 12 வரையிலான அடுத்தடுத்த வரிசை எண்களில், புதிய வழிகாட்டி மதிப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தெளிவாக விளக்கிஉள்ளார். இவை அனைத்துமே, ஏற்கனவே உள்ள நடைமுறைகளைக் கடைபிடிப்பதற்கான அறிவுறுத்தலாக உள்ளன.
இதிலுள்ள 13வது வரிசை எண், இந்த சுற்றறிக்கையின் 1 முதல் 12 வரையிலான நெறிமுறைகளை பொது மக்கள் அறியும் வண்ணம், பட்டியலிடப்பட்டுள்ளது. இதை தங்களது எல்லைக்குட்பட்ட சார்-பதிவகங்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகம், துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்களில், பிளக்ஸ் போர்டு மூலம் விளம்பரப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டு உள்ளது.
கடைசியாக வரிசை எண் 14ல், 'பதிவு பொது மக்களின் நலனை கருதி, சீரமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு, நடைமுறைக்கு வரும், 9.6.2017 தேதி முதல் 13.6.2017 வரையிலான ஆவணப் பதிவுகளுக்கு, சார்-பதிவாளர்கள் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களை உச்சவரம்பின்றி ரொக்கமாகவும் வசூலிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தான், பதிவுத்துறை அலுவலர்களை மட்டுமின்றி, வருமான வரித் துறையினரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்த மத்திய அரசு, ரொக்கப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது; மக்களும் அதற்கு பழகி விட்டனர்.
வழக்கமாக, ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலுத்தப்படும் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களுக்கு, டி.டி., எனப்படும் வரைவோலைகளே பெறப்படுகின்றன. ஆனால், இப்போது உச்சவரம்பின்றி, ரொக்கமாக வாங்கலாம் என்று பதிவுத்துறை ஐ.ஜி., அறிவித்துள்ளது, கறுப்புப் பணத்தை கை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், வருமான வரித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், எத்தனை லட்ச ரூபாய் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தாலும், அந்த தொகைக்கு நுாறு சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். இதன்படி பார்த்தால், இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்தை செலுத்தினால், அதற்கேற்ப வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.
உதாரணமாக, ஓரிடத்துக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்தும் ஒருவர், எட்டு லட்ச ரூபாய் வருமான வரியாகச் செலுத்த வேண்டும்.இதற்கு, வருமான வரித்துறை ஒப்புக் கொள்ளுமா என்பதும் கேள்விக்குறி. ஒருவேளை, அப்படிச் செலுத்துவதற்கு, யாராவது முயற்சி செய்தால், அவர்கள் வருமான வரித்துறையிடம் சிக்குவது நிச்சயம்.
ஏற்கனவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, கறுப்புப் பணத்தைக் கொண்டு அமைச்சர்கள் போட்ட நில விற்பனை ஒப்பந்தங்களுக்காகவே, வழிகாட்டி மதிப்பு, 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், கறுப்புப் பணம் அனைத்தும் அசையா சொத்துக்களாக மாறுமென்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது; பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை, இதை மேலும் வலுப்படுத்துகிறது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 11.06.2017

மேற்கண்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது
(தினமலர் நாளிதழ் - 13.06.2017 - செய்தி)
Image may contain: text

ஜனாதிபதி தேர்தல் - ஒரு கண்ணோட்டம்

ஜனாதிபதி தேர்தல் - ஒரு கண்ணோட்டம்
இந்தியாவின் 15வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17ல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ல் நடைபெறும். ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள். முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே.
ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகள் குறித்த ஒரு பார்வை.
இந்திய அரசியலமைப்பு விதி 54, ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடுகிறது. இது, மறைமுக தேர்தலாக அமைந்துள்ளது. மக்கள் நேரடியாக வாக்களிக்காமல்
அவர்களது பிரதிநிதிகளான எம்.பி., , எம்.எல்.ஏ,.க்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்களை உள்ளடக்கிய 'எலக்ட்டோரல் காலேஜ்' மூலம் ஒற்றை மாற்று ஓட்டு முறையில் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார்.
ஜனாதிபதி தேர்தலையும் தேர்தல் ஆணையமே நடத்துகிறது. இந்தியாவில்
மொத்தம் (லோக்சபா 543 + ராஜ்யசபா 233) 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். எம்.எல்.ஏ.,க் களில் 29 மாநிலங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே இத்தேர்தலுக்கு
கணக்கில் கொள்ளப் படுகிறது. லோக்சபாவில் இரண்டு, ராஜ்யசபாவில் 12 ஆகிய நியமன எம்.பி.,க்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.
வாக்குப்பதிவு மையம்
ஜனாதிபதி தேர்தல்வாக்குப்பதிவு டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகம் மற்றும் மாநில சட்டசபை வளாகங்களில் நடைபெறும்.
தகுதிகள்
* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
* ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு பணி வகிப்ப வராக இருக்கக் கூடாது.
* லோக்சபா எம்.பி., ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
* துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இத்தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முந்தைய பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.
* டெபாசிட் கட்டணம் 15ஆயிரம் ரூபாய்.
யாருக்கு வாய்ப்பு
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 1804 எம்.எல்.ஏ.,க்கள் மூலம் 2,39,923 வாக்குகளும், 336 லோக்சபா எம்.பி.,க்கள், 70 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மூலம் 2,87,448 வாக்குகளும் மொத்தம் 5,27,371 வாக்குகள் கைவசம் உள்ளன.
இது ஐ.மு. கூட்டணியை விட 1.74 லட்சம் வாக்குகள் அதிகம். இவர்களுடன் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் சேர்ந்தாலும் தே.ஜ., கூட்ட ணியை விட 93 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியே இருக்கும். வெற்றிக்கு 5,49,474 வாக்குகள் தேவை என்பதால், கூடுதலாக சுமார் 22000 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பா.ஜ.,வுக்கு தேவை.
இது நடுநிலை வகிக்கும் சுயேச்சைகள், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் (36,500), தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் டி.ஆர்.எஸ்., ( 23,200 ), அ.தி.மு.க., (59,000) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் எளிதில் பா.ஜ., வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தற்போதைய காலியிடம்
லோக்சபா 2
ராஜ்யசபா 2
சட்டசபைகள் 4


நன்றி : தினமலர் நாளிதழ் - 07.06.2017

Thursday, June 8, 2017

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் - கலெக்டர்

கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் - கலெக்டர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய வட்டங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர்  ராசாமணி அவர்கள் நேற்று திடீரென ஆய்வுசெய்தார். 
அப்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அவர் போட்ட உத்தரவு:
  • கிராம நிர்வாக அலுவலகங்களை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை திறந்து வைத்திருக்க வேண்டும். 
  • பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • கோரிக்கை மனுக்களின் விவரங்களை முறையாக பதிவேட்டில் பதிந்து, தொடர்ந்து பராமரித்து வரவேண்டும்.  
  • சாதிச் சான்று, வருமானச் சான்று, பிறப்பு இறப்புச் சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளுக்காக வரும் விண்ணப்பங்களைப் பதிந்து, உடனடியாக விசாரிக்க வேண்டும். 
  • விண்ணப்பங்களின் தற்போதைய  நிலைகுறித்து அவ்வப்போது பதிவுசெய்ய வேண்டும்.
  • பதிவேடுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி அனைத்து நிலையிலுள்ள அலுவலர்களும் ஆய்வுக்கு வரும்போது அவர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். 
  • பொதுமக்களை அலையவிடாமல், குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உதவுவதே கிராம நிர்வாக அலுவலர்களின் தலையாய கடமை. 
  • கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி மூலம் பெறப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை, உடனுக்குடன் விசாரித்து உரிய பதிலைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
  • பள்ளி செல்லும் குழந்தைகள், உதவித்தொகை கேட்பவர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிப்போடு உதவ வேண்டும். 
  • தேவையற்ற காலதாமதங்களைத் தவிர்த்து, முழு நேரமும் கிராமங்களிலிருந்து பணியாற்ற வேண்டும்' 
 சி.ய.ஆனந்தகுமார்
நன்றி : விகடன் செய்திகள் - 09.06.2017

கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு, நில வழிகாட்டி மதிப்பு குறைப்பு!

கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு, நில வழிகாட்டி மதிப்பு குறைப்பு!
சென்னை: வீடு, காலி மனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்படுகிறது; அதே சமயம், பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்படுகிறது; இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல்வர் எடப்பாடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறைக்கு ஆண்டுக்கு ஆண்டு வருவாய் அதிகரித்து வந்தது. அதாவது 2010-2011ம் ஆண்டு அதிகப்பட்சமாக 8 ஆயிரம் கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியது. இந்நிலையில், 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதை தொடர்ந்து, பத்திரப்பதிவு துறையில் நில வழிகாட்டி மதிப்பு கட்டணத்தை அதிகரித்து ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்ட திட்டமிட்டார்.
அதன்படி, 2012ம் ஆண்டு தமிழகத்தில் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதனால் பல இடங்களில் 100 சதவீதம் முதல் 400 சதவீதம் வரை நிலத்தின் வழிகாட்டி மதிப்பு கட்டணம் உயர்ந்தது. இதனால், புதிதாக வீடு வாங்க நினைத்தவர்கள், நிலம் மற்றும் வீட்டை விற்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
மேலும் பத்திரப்பதிவு துறையில் பல குளறுபடிகளும் ஏற்பட்டது. 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பல மடங்கு கூட்டினாலும் அரசுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. 2012-13ம் ஆண்டு 7,455 கோடியும், 2013-14ம் ஆண்டு 8,055 கோடியும், 2014-15ம் ஆண்டு 8,562 கோடியும், 2016-17ம் ஆண்டு 7,002 கோடி மட்டுமே அரசுக்கு வருவாய் கிடைத்தது. வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு முன்பாக தமிழக அரசுக்கு பதிவுத்துறை மூலம் ஆண்டுக்கு 35 லட்சம் பத்திரங்களின் பதிவு நடைபெற்று வந்தது. அரசு திடீரென 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தியதால் பத்திரப்பதிவு ஆண்டுக்கு 25 லட்சமாக குறைந்தது. இதனால் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள், நில தரகர்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வழியுறுத்தி வந்தனர். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது; இதை சரி செய்ய தமிழக அரசு தீவிரமாக யோசித்து சில முடிவுகளை எடுக்க முன்வந்தது.
இந்தநிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வரின் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் 30 நிமிடம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் கோவை சென்று இருந்தார். நேற்று மதியம் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார். விமானம் தாமதமாக சென்னை வந்ததால் அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவு குறித்து தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மதிப்பீட்டு குழு பரிந்துரை படி, தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 (இன்று) முதல் 33 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியினை குறைப்பதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை ஈடுசெய்ய விற்பனை, பரிமாற்றம், தானம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்காக எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு போன்ற ஆவணங்களுக்கான பதிவு கட்டணத்தினை 4 சதவீதமாக நிர்ணயிக்கவும், இப்பதிவு கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யாருக்கு லாபம்: 
நில வழிகாட்டி மதிப்பை தமிழக அரசு குறைத்தாலும், பத்திர பதிவு கட்டணத்தை 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் நில தரகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் அறிவிப்பால் பெரிய அளவில் நன்மை கிடைக்காது என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
தமிழ்நாடு வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மணிசங்கர் கூறியதாவது: 
கடந்த 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதை குறைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். இதை ஏற்று அரசு 33 சதவீதம் வழிகாட்டி மதிப்பை குறைத்திருக்கிறது. ஆனால் ஸ்டாம்ப் டியூட்டி(பதிவுக் கட்டணம்) 7+1 சதவீதமாக இருந்தது. இதை 7+4 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். ஒருபக்கம் மதிப்பை குறைப்பதாக காட்டிவிட்டு, மறுபக்கம் ஸ்டாம்ப் கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாம்ப் டியூட்டி கட்டணம் 14 சதவீதமாக இருந்தது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதன்படி 7+1 சதவீதமாக குறைத்தார்கள். தற்போது மீண்டும் 7+4 சதவீத கட்டணத்தை உயர்த்திவிட்டனர். 2012ம் ஆண்டுக்கு முன்னர் ஒரு சதுர அடி நிலம் 400 ஆக இருந்தது, வழிகாட்டி மதிப்பீடு குளறுபடியால் 1,200க்கு உயர்ந்தது. 8 சதவீத கட்டணம் சேர்த்து ஒரு சதுர அடி நிலத்தின் விலை 1,296 ஆக இருந்தது. தற்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை 33 சதவீதம் குறைத்ததால் ஒரு சதுர அடி 804 ஆக இருந்தாலும், அதற்கான கட்டணம் 11 சதவீத சேர்த்து 892 ஆக இருக்கும். வழிகாட்டி மதிப்பீடு தாறுமாறாக இருக்கும் நிலையில், இது பொதுமக்களுக்கு பயன்தராது. இதனால் எங்களுக்கு பெரிய அளவில் பயன் ஏற்படப்போவதில்லை. இதன்மூலம் அரசாங்கத்துக்கு வேண்டுமானால், கூடுதல் வருமானம் வரும். ஒரு கையில் கொடுப்பதை போன்று கொடுத்துவிட்டு மறுபக்கம் தட்டி பறித்துவிட்டனர்.
நன்றி : தினகரன் நாளிதழ் - 09.06.2017
Image may contain: text
Image may contain: text

Image may contain: text
நன்றி : முகநூல் நண்பர் 
தொழிலாளர்களின் தோழன் 


Wednesday, June 7, 2017

நமது நாட்டு ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

நமது நாட்டு ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
ஜனாதிபதியை நாடாளுமன்ற இரு அவை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா என்று, எம்.பி.க்கள் மொத்தம் 776 பேர் உள்ளனர். நாடெங்கும் 4120 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் ஓட்டுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அதன்படி ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும்.
No automatic alt text available.
No. State/UT         MLAs    Population   Vote value  Total vote value 
1 Andhra Pradesh     175     43,502,708    248        43,400 
2 Arunachal Pradesh   60        467,511      8          480 
3 Assam             126     14,625,152    116        14,616 
4 Bihar              243     42,126,236    173        42,039 
5 Chattisgarh          90     11,637,494    129        11,610 
6 Delhi               70      4,065,698     58         4,060 
7 Goa                40       795,120     20           800 
8 Gujarat            182     26,697,475    147        26,754 
9 Haryana            90     10,036,808    112        10,080 
10 Himachal Pradesh  68      3,460,434     51         3,468 
11 Jammu & Kashmir  87      6,300,000     72         6,264 
12 Jharkhand         81     14,227,133    176        14,256 
13 Karnataka        224    29,299,014     131        29,344 
14 Kerala           140    21,347,375     152        21,280 
15 Madhya Pradesh  230    30,016,625     131        30,130 
16 Maharashtra      288    50,412,235     175        50,400 
17 Manipur           60     1,072,753      18         1,080 
18 Meghalaya         60     1,011,699      17         1,020 
19 Mizoram           40      332,390       8           320 
20 Nagaland          60      516,499       9           540 
21 Odisha           147    21,944,615     149        21,903 
22 Puducherry        30      471,707       16          480 
23 Punjab           117    3,551,060      116        13,572 
24 Rajasthan        200   25,765,806      129        25,800 
25 Sikkim            32     209,843        7           224 
26 Tamil Nadu      234   41,199,168      176         41,184 
27 Telangana       119   43,502,708      148         17,612 
28 Tripura           60    1,556,342       26          1,560 
29 Uttar Pradesh    403   83,849,905      208         83,824 
30 Uttarakhand      70     4,491,239       64          4,480 
31 West Bengal     294   44,312,011      151         44,394  
            Total 4,120  549,302,055                 549,474 

Parliament     Seats   Vote Value  Total vote value 
Lok Sabha     543       708         3,84,444 
Rajya Sabha   233       708         1,64,964 
       Total   776      1416         5,49,408 

Combined            Total voters    Total vote 
value MLA (elected)     4,120         5,49,474 
MP        (elected)      776         5,49,408 
                 Total 4,896        10,98,882 
எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படும். 
ஒட்டு மொத்தமாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். 
இதில் பாதிக்கு மேல் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும்.
Veera Kumar
நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  - 07.06.2017