disalbe Right click

Sunday, January 28, 2018

பாகப்பிரிவினை

பாகப்பிரிவினை செய்வது எப்படி?
இந்தக் காலத்தில் சொத்தை பிரித்துக் கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், ஒரு வீட்டில் ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகள்தான் இருக்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் ஒரு வீட்டில் பல பிள்ளைகள் இருந்தார்கள். முன்னோர்கள் சொத்தை எப்படி பிரித்துக் கொள்வது என்ற குழப்பமும் அந்தப் பிள்ளைகளுக்குள் இருந்தது. அனுபவிப்பதாக இருந்தாலும், விற்பதாக இருந்தாலும், (1) அதிக விலை போகின்ற, (2) பாதை பிரச்சனையும் இல்லாத சொத்தின் முன்பகுதியைத்தான் அனைவருமே விரும்புவார்கள். அனைவருக்கும் நிலத்தின் முன்பகுதியை வழங்க வேண்டும், இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அதற்கு என்னதான் வழி?
முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ள வழி
சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளும்போது,  மூத்தவர், இளையவர் என்ற வித்தியாசம் இல்லை. ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற பேதம் இல்லை.  அனைவருக்கும் சமபங்கு என்ற நிலையை சட்டம் தற்போது  ஏற்படுத்தியுள்ளது. இருக்கின்ற மனையில் எந்தப் பங்கு யாருக்கு கொடுக்க வேண்டும்? என்பதற்கு திசைகளை வைத்து நமது முன்னோர்கள் ஒரு சுமூகமான  வழியை ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்..
இரண்டு வழிகள்
ஒரு சொத்தை  அல்லது நிலத்தை இரண்டு முறையில் சமமான துண்டுகளாக்கி உரிமையுள்ளவர்களுக்கு பங்கு பிரிக்கலாம். அதில் ஒன்று கிழக்கிலிருந்து மேற்காக சமமான பங்காக ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுக்கலாம்; அல்லது வடக்கிலிருந்து தெற்காக சமமான பங்காக ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுக்கலாம். இந்த இரண்டு வழிகளைத் தவிர, வேறு வழிகள் ஏதும் இல்லை. இதற்கு பங்குதாரர்கள் ஒத்துவரவில்லை என்றால்  மொத்த சொத்தையும் விற்று, இலகுவாக பணத்தை பிரித்துக் கொள்ளலாம். இதுவே கடைசி வழியாகும்.
யாருக்கு எந்தப் பங்கு?
சொத்தை ஒரு திசையிலிருந்து மறு திசைக்கு பிரித்துக் கொண்டு வரும்போது, எந்தப்பங்கை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் வரலாம். இதற்கு நமது முன்னோர்கள் ஒரு சரியான யோசனை சொல்லி இருக்கிறார்கள். அதன்படி பிரித்துக் கொண்டால் சண்டை வராது. எனக்கு இந்த சொத்துத்தான் வேண்டும் என்று யாரும் கூறவும் முடியாது.. ஏனென்றால் சட்டமும், மக்களும் ஏற்றுக் கொண்ட  வழிமுறை இது
கிழக்கிலிருந்து மேற்காக பிரித்துக் கொண்டால்
ஒரு சொத்தை கிழக்கிலிருந்து மேற்காக பல பங்குகளாக பிரிக்கும்போது, மேற்கு திசையில் முதலில் இருக்கும் பங்கை  வீட்டின் மூத்த பிள்ளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு அடுத்ததாக பிறந்த தம்பியோ, தங்கையோ அதற்கு அடுத்து இருக்கும் பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், கிழக்கு திசையில் உள்ள கடைசி (பாகத்தை) சொத்தை வீட்டில் கடைசியாக பிறந்த  தம்பியோ, தங்கையோ  எடுத்துக் கொள்வார்கள்
வடக்கிலிருந்து தெற்காக பிரித்துக் கொண்டால்
ஒரு சொத்தை, வடக்கிலிருந்து தெற்காக பல பங்குகளாக பிரிக்கும்போது, தெற்கு திசையில் முதலில் இருக்கும் பங்கை  வீட்டின் மூத்த பிள்ளை எடுத்துக் கொள்ள வேண்டும்அவருக்கு அடுத்ததாக பிறந்த தம்பியோ, தங்கையோ அதற்கு அடுத்து இருக்கும் பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், வடக்கு திசையில் உள்ள கடைசி (பாகத்தை) சொத்தை வீட்டில் கடைசியாக பிறந்த தம்பியோ, தங்கையோ   எடுத்துக் கொள்வார்கள்..
****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 28.01.2018 

Saturday, January 27, 2018

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இனி ‘யுவின்’ அட்டை மூலமாக பி.எப்., – .எஸ்.., பணிக்கொடை போன்ற எல்லாம் கிடைக்கும்
மத்­திய தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­­கம் ஏற்பாடு
அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் பெற்று வருகின்ற சமூக பாது­காப்பு பயன்­கள் அனைத்­தும்அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­தில், ‘யுவின்’ 
அடை­யாள அட்டை திட்­டத்தைமத்­திய தொழி­லா­ளர் நலத்­துறை அமைச்­­கம் அறி­மு­கப்­­டுத்தியுள்ளதுஇதன் மூலம்சைக்­கிள் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி முதல்கூலித்­தொ­ழி­லா­ளர்­கள் வரைபல்­வேறு துறை­­ளைச் சேர்ந்த, 47 கோடி தொழிலாளர்கள் பயன் பெறு­வர்.
யுவின் அடையாள அட்டை
மத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­­கம்அனைத்து பணி­யா­ளர்­களின் சமூக பாது­காப்பு மற்­றும் நல்­வாழ்­விற்கு உறுதி அளிக்­கும் மசோ­தா ஒன்றை உரு­வாக்கி உள்­ளதுஅதன்­படி, நமது நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழி­லா­ளர்­களின் சமூக பாது­காப்பை உறுதி செய்­யும், ‘யுவின்’ திட்­டம்நடை­மு­றைக்கு வர உள்­ளது.
நமது நாடு முழு­­தும், ‘அமைப்பு சாரா தொழி­லா­ளர் குறி­யீட்டு எண்’ கொண்ட, ‘யுவின்’ 
அட்­டைக்­கான பதிவு01.04.2018 முதல் துவங்க உள்­ளதுஇதை­­டுத்து2019 மார்ச் மாதத்திற்குள் அமைப்பு சாரா துறை­யைச் சேர்ந்த அனைத்து தொழி­லா­ளர்­­ளுக்­கும், ‘யுவின்’ அட்டை வழங்குவதற்குமத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­­கம் திட்­­மிட்டு உள்­ளது
ஏற்­­னவேசோதனை அடிப்­­டை­யில்வெற்­றி­­­மாக மேற்­கொள்­ளப்­பட்ட இத்­திட்­டம்நாடு முழு­­தும் பர­­லாக்­கப்­படும் போதுஅமைப்பு சாரா துறை­யைச் சேர்ந்த, 47 கோடி தொழிலாளர்கள் பயன் பெறு­வார்கள்.
பி.எப்.,  .எஸ்..,
அமைப்பு சார்ந்த துறை­யி­­ருக்கு நிக­ரானபி.எப்., – .எஸ்.., உள்­ளிட்டஅனைத்து பயன்­களும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த அட்டை மூலம் கிடைக்­கும்இதில்பி.எப்., எனப்­படும்வருங்­கால சேம­நல நிதி­யம்.எஸ்.., எனப்­படும்தொழி­லா­ளர் மருத்­துவ ஈட்­டு­றுதி கழ­கம் ஆகி­­வற்­றுக்­கான பங்­­ளிப்புத் தொகையை யார் செலுத்­து­வது? என்­பது குறித்து தீவி­­மாக ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­­கிறதுஇந்த நிதி­ அமைப்புகளுக்கு அமைப்பு சார்ந்த துறை­யில்பணி­யா­ளர்­­ளு­டன் சேர்ந்துநிறு­­னங்­களும் குறிப்­பிட்ட தொகையைஅவற்­றின் பங்­காக வழங்­கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமைப்பு சாரா துறை­யில்நிறு­­னங்­களின் கீழ் வரா­மல்தனித்து செயல்­படும்தொழிலாளர்களுக்குயார் தவணைத் தொகைகளை செலுத்­து­வது என்­­தில் தான்இன்­னும் முடிவு எட்­டப்­­டா­மல் உள்­ளது
தொழி­லா­ளர் சமூக பாது­காப்பு மசோ­தா­வில், ‘நிறு­­னம் இல்­லாத பட்­சத்­தில்தனி­­பரேமுதன்மை நிறு­­­ராக கரு­தப்­­டு­வார்’ என்ற விதி­முறை இருக்கிறது. அத­னால்இந்த சட்­டம் அம­லுக்கு வரும் போதுமுதன்மை நிறு­­னக்கான பங்­­ளிப்­பில்எந்த சிக்­­லும் இருக்­காது என்றும் அமைப்பு சாரா துறை­யி­­ரின் சமூக பாது­காப்பு அர­ணாக, ‘யுவின்’ திட்­டம் விளங்­கும் என்று நம்புவோம். 
தொழி­லா­ளர் சமூக பாதுகாப்பு:
தொழி­லா­ளர்­­ளுக்­கானவருங்­கால சேம­நல நிதிமருத்­துவ ஈட்­டு­றுதிபிர­சவ கால பயன்பணிக்­கொடைஇழப்­பீடுசமூக பாது­காப்பு என்பது உள்ளிட்ட 15 சட்­டங்­களின் தொகுப்­பாகதொழி­லா­ளர் சமூக பாது­காப்பு மசோ­தாவைமத்­திய தொழி­லா­ளர் நல அமைச்­­கம் உரு­வாக்கி உள்­ளது. இருகரம் கூப்பி அதனை வரவேற்போம்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 27.01.2018