disalbe Right click

Showing posts with label உத்தரவு. Show all posts
Showing posts with label உத்தரவு. Show all posts

Saturday, September 16, 2017

768 மாணவர்களை நீக்குமாறு மருத்துவ கவுன்சில் உத்தரவு!

768 மாணவர்களை நீக்குமாறு மருத்துவ கவுன்சில் உத்தரவு!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஏழு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் முறைகேடாக சேர்த்த 768 மாணவர்களை கல்லுாரியில் இருந்து நீக்க வேண்டும்என, இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவக் கல்லுாரி, மூன்று சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள், நான்கு நிகர் நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.
சுயநிதி கல்லுாரிகளான வெங்கடேஸ்வரா -150, மணக்குள விநாயகர் -150, பிம்ஸ்-150 மற்றும் லட்சுமிநாராயணா, மகாத்மா காந்தி, அறுபடை வீடு, விநாயகா மிஷன் ஆகிய 4 நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ கல்லுாரிகளில் 600 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு, தனியார் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 1050 எம்.பி.பி.எஸ்., இடங்களில், 282 இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டது. இந்த 282 இடங்கள் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள 150 இடங்களுக்கு, 2016-17ம் கல்வியாண்டில், சென்டாக் கவுன்சிலிங் மூலம், பிளஸ் 2 மதிப்பெண் மெரிட் ரேங்க் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நிகர்நிலை மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் மீதமுள்ள 768 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, ’நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதற்காக, சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சித்ராவெங்கட்ராமன், நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கை கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார்.
நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்தவர்களில், ’நீட்மதிப்பெண் அடிப்படையில் 768 பேர் கொண்ட பட்டியலை, சேர்க்கை கமிட்டி தயாரித்து, தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு வழங்கியது. ஆனால், சேர்க்கை கமிட்டி அளித்த பட்டியலில் உள்ள மாணவர்களை, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் சேர்க்காமல், ’நீட்தேர்வு எழுதாத, வெளிமாநில மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துக் கொண்டு, எம்.பி.பி.எஸ்., சேர்க்கையை நடத்திக் கொண்டன.
மருத்துவ கவுன்சிலில் புகார்
இது தொடர்பாக பெற்றோர் - மாணவர் சங்கங்கள், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் புதுச்சேரி அரசிடம் புகார் தெரிவித்தன. மேலும், சேர்க்கை கமிட்டி தலைவர் சித்ரா வெங்கட்ராமன், கட்டண குழு தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர், ஏழு தனியார் மருத்துவக் கல்லுாரிகளும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., இடங்களை முறைகேடாக சேர்க்கை நடத்திக் கொண்டதாக, புதுச்சேரி அரசுக்கும், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் புகார் அனுப்பினர்.
இந்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து, இந்திய மருத்துவக் கவுன்சில் புதுச்சேரி அரசிடம் கேள்வி எழுப்பியபோது, ”சட்டசபையில் விவாதித்து தனியார் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என புதுச்சேரி அரசு பதில் அளித்தது.
தேர்வு எழுத அனுமதி மறுப்பு
சுய அதிகாரம் கொண்ட நிகர்நிலை பல்கலை கழகங்கள், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு தேர்வை நடத்தி முடித்தன. ஆனால், புதுச்சேரி பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் வரும், மூன்று சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் கொல்லைப்புறமாக சேர்க்கை நடத்தியதால், ’நீட்ரேங்க் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர் பட்டியலை, பல்கலை கழகத்திற்கு வழங்கவில்லை.
இடைக்கால உத்தரவு
இதனால், கடந்த ஜூன் மாதம் நடந்த முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., தேர்வை, மூன்று சுயநிதி மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்ட 304 மாணவர்கள் எழுத அனுமதிக்கப்படவில்லை. அதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இடைக்கால உத்தரவுப்படி, 304 மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டனர்.
மருத்துவ கவுன்சில் அதிரடி
இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில் கூட்டம், கடந்த மாத இறுதியில் நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த சேர்க்கை கமிட்டியின் பரிந்துரையை மீறி, புதுச்சேரியில் உள்ள ஏழு சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரிகளில் முறைகேடாக, மாணவர் சேர்க்கை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி, ’நீட்ரேங்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தனர்.
அதையடுத்து, தனியார் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., இடங்களில், சேர்க்கை இறுதி நாளான 30.09.2016ம் தேதிக்கு பிறகு, கொல்லைப்புறமாக சேர்க்கப்பட்ட 768 மாணவர்களை கல்லுாரியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில், அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் புதுச்சேரி கவர்னரின் தனி செயலர், புதுச்சேரி அரசின் நீட்நோடல் அதிகாரி, சுகாதாரத் துறை செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் அதிரடி உத்தரவால், கடந்த ஆண்டு கல்லுாரியில் சேர்ந்து, தற்போது 2ம் ஆண்டு படித்து வரும் 768 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசுக்கு 283 எம்.பி.பி.எஸ்., இடங்களைப் பெற்றோம். புதுச்சேரி மாநில ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும் தான் அரசுக்கு அதிகாரம் உள்ளது.
கடந்தாண்டு நீட்தேர்விலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்ததன்பேரில், மாநில அரசின் இடங்களை சென்டாக் கவுன்சிலிங் மூலம், வெளிப்படையாகவும், தகுதி அடிப்படையிலும் எவ்வித புகாரும் இல்லாமல், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டது.
நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கை, கல்லுாரி நிர்வாகம், மருத்துவ கவுன்சில் சம்பந்தப்பட்டது. இதனைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சித்ராவெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கையில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மருத்துவ கவுன்சில், கண்காணிப்பு குழுவிற்கு உள்ளது.
மருத்துவ கவுன்சில் கடிதத்தில், ’தனியார் மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டில் வீதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்ட மாணவர்களை நீக்க வேண்டும்என உத்தரவிட்டுள்ளது; மாணவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. இதற்கு, மாநில அரசு பொறுப்பு ஏற்காது. மாணவர்கள் நலன் கருதி, தனியார் மருத்துவ கல்லுாரி நிர்வாகத்தை அழைத்து பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோர்- மாணவர் சங்கத் தலைவர் பாலா கூறியதாவது:
தனியார் மருத்துவ கல்லுாரி நிர்வாக ஒதுக்கீட்டில், ’நீட்தேர்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி மாணவர்கள் சேர தயாராக இருந்தனர்.ஆனால், கல்லுாரிகள் ரூ.12 லட்சம், 18 லட்சம் கட்டணம் கேட்டதால், மாணவர்கள் சேரவில்லை. இதனால், ’நீட்தேர்வு எழுதாத வெளி மாநில மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துக் கொண்டு, எம்.பி.பி.எஸ்., இடங்களை தனியார் கல்லுாரிகள் நிரப்பிக் கொண்டன.
இது தொடர்பாக சேர்க்கை கமிட்டி தலைவர் சித்ராவெங்கட்ராமன், கட்டண குழு தலைவர் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும், புதுச்சேரி அரசுக்கும், உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பினர்.
இந்த புகார் குறித்து, புதுச்சேரி சுகாதாரத் துறைக்கு 13 நினைவூட்டல் கடிதங்களை மருத்துவ கவுன்சில் அனுப்பியது. அதற்கு, புதுச்சேரி சுகாதாரத் துறை சரியான விளக்கம் அளிக்கவில்லை. தற்போது, முறைகேடாக கல்லுாரியில் சேர்த்த மாணவர்களை நீக்குமாறு, மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கல்லுாரி நிர்வாகம், சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி சென்டாக் அனைத்து மாணவர்- பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி கூறியதாவது:
தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். கடந்தாண்டு புதுச்சேரியை சேர்ந்த 96 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர்.
இவர்களை, தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்க மறுத்து, அதிக பணம் பெற்றுக் கொண்டு வெளிமாநில மாணவர்களை முறைகேடாக சேர்த்துக் கொண்டனர்.
இது குறித்து, மருத்துவக் கவுன்சில், புதுச்சேரி அரசு, சேர்க்கை கமிட்டி தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதியிடம் புகார் அளித்தோம். இந்திய மருத்துவ கவுன்சில்,இது தொடர்பாக புதுச்சேரி அரசிடம் 8 முறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
இதுவரை எவ்வித பதிலையும் அரசு தெரிவிக்கவில்லை. தற்போது, இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்து, சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்களை தவிர, மற்ற அனைவரையும் நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இப் பிரச்னையில், கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலம் கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கு காரணமான சுகாதாரத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.09.2017 

Tuesday, September 12, 2017

தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
நவோதயா வித்யாலயா பள்ளிகள்
தமிழகத்தில் துவங்க தமிழகத்தில் மாவட்டந் தோறும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க, அனுமதி வழங்குவது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
குமரி மகாசபா செயலர் ஜெயகுமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:
கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது உண்டு, உறைவிடப் பள்ளி.மும்மொழி கொள்கைஆறாவது வகுப்பு முதல், பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மும்மொழிக் கொள்கையுடையது
தமிழகத்தில் மாவட்டந்தோறும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜெயகுமார் தாமஸ் மனு செய்திருந்தார். 
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,
தமிழ்நாடு தமிழ்வழி கற்பித்தல் - 2006 சட்டத்தின்படி, தமிழ், ஆங்கிலம் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
நவோதயா பள்ளியானது பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்தி மும்மொழிக் கொள்கையுடையது. தமிழுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்என குறிப்பிட்டு இருந்தது.மத்திய அரசு சார்பில் தாக்கலான பதில் மனுவில், ’நவோதயாவில் 6ம் வகுப்புமுதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் கட்டாயப் பாடம். ஆங்கிலம் உட்பட இதர பாடங்கள் உள்ளன.
பிளஸ் 1 முதல், பிளஸ் 2 வரை, தமிழ் கூடுதல் மொழி. நவோதயாவில் தங்குமிடம், உணவு,கட்டணம் இலவசம். கிராமப்புற மாணவர்களுக்கு, 75 சதவீதம் முன்னுரிமை உண்டு. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் நவோதயா பள்ளிகள் துவக்கத் தயார்என, தெரிவித்து இருந்தது.
நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், ’இவ்விவகாரம் அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது; அமைச்சரவை கூடித்தான் இறுதி முடிவு எடுக்க முடியும்என்றார்.
மாவட்டத்திற்கு, ரூ.20 கோடி
புதுச்சேரி ஜவஹர் நவோதயா வித்யாலயா முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆஜராகி விளக்கமளிக்கையில்
மாவட்டந்தோறும் நவோதயா வித்யாலயாக்கள் அமைக்கதலா, 30 ஏக்கர் நிலம் தேவை. கட்டுமானத்திற்கு ஒரு மாவட்டத்திற்கு, 20 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும். கட்டுமானம் முடியும் வரை, முதல் மூன்று ஆண்டுகளில் தற்காலிக இடத்தில் பள்ளிகள் இயங்கும்.
முதற்கட்டமாக, 6ம் வகுப்பில், 240 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் பிளஸ் 2 வரை படிப்பை தொடர்வர்.நவோதயா வித்யாலயாவில், 2018 - 19 கல்வியாண்டில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, 2018 ஜனவரியில் நடக்கிறது. அதற்கேற்ப தமிழகத்தில், நவோதயா வித்யாலயாக்களை துவங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.இவ்வாறு விவாதம் நடந்தது.
30ஆண்டு நடைமறை சிக்கல்
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
நவோதயாவில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதுஎன, மத்திய அரசு கூறுகிறது. நவோதயாவை தமிழகத்தில் துவங்க அனுமதிப்பதன் பயனாக, இவ்விவகாரத்தில், 30 ஆண்டுகளாக இருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும். இதில் மத்திய, மாநில அரசுகள் இடையே தகவல் தொடர்பில் இடைவெளி இருந்துள்ளது.
இப்பள்ளிகளை அனுமதிப்பது, கட்டமைப்பு மற்றும் தடையில்லாச் சான்று வழங்குவது குறித்து, தமிழக அரசு, எட்டு வாரங்களில் தகுந்த முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினர்.
நன்றி : தினமலர் - கல்விமலர் - 12.09.2017 

Saturday, August 26, 2017

விதிமீறல், ஆக்கிரமிப்புகள் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை

விதிமீறல், ஆக்கிரமிப்புகள் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை
சென்னை, : விதிமீறல், ஆக்கிரமிப்புகள் குறித்த புகார்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, அரசு அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராமச்சந்திரன் என்பவர், மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
ஆவணங்களை பரிசீலிக்கும்போது, சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிகிறது. விதிமீறல், ஆக்கிரமிப்புகள் இருந்தால், சட்ட வழிமுறைகளை பின்பற்றி, அதை இடிக்க, அரசுக்கு உரிமை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 
சென்னை நகருக்குள் இருந்தால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புறநகராக இருந்தால், சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி மற்றும் நகரமைப்பு அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதற்கு முன், சம்பந்தப் பட்ட வர்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுக்க வேண்டும். 
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விண்ணப்பங்கள் மற்றும் புகார்கள் வந்தால், அரசு தரப்பில் உடனடியாக முடிவு எடுப்பதில்லை என, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. 
குறிப்பிட்ட அவகாசத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோத கட்டுமானம், ஆக்கிரமிப்புகள், விதிமீறல்கள் தொடர்பான புகார்களை விசாரித்து முடிவெடுக்கும் முன், தேவைக்கேற்ப, வேறு யாரிடமும் விசாரிக்கலாம். அனுமதிக்கப்பட்ட திட்டப்படி கட்டப்பட்டதா என்பது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்தை கேட்டு முடிவெடுக்கலாம். 
எனவே, அரசின் அனைத்து செயலர்களுக்கும், நீதிமன்றம் தெரிவித்த கருத்தை, தலைமை செயலர் தெரியப்படுத்த வேண்டும். இதனை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய, உத்தரவின் நகலை, தமிழக அரசின் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், புதுச்சேரி அரசு மற்றும் பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.08.2017

Monday, August 14, 2017

கீழ் கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கீழ் கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில்குற்றஞ்சாட்டப் பட்டோருக்குஜாமின் வழங்கும் நடைமுறையை கைவிடும்படிகீழ் கோர்ட்டுகளுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்ஜாமின் : 
ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில்தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தஉச்ச நீதிமன்ற நீதிபதிகள்ரஞ்சன் கோகோய்நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஜார்க்கண்டை சேர்ந்த ஒருவர்தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளபோதுஉச்ச நீதிமன்றத்தில்முன்ஜாமின் பெற்றுள்ளார். இருப்பினும்ஜார்க்கண்டில் உள்ளகீழ் கோர்ட்டில் மீண்டும் ஆஜராகிவழக்கமான ஜாமின் பெற்றுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடக்கின்றன.உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில்வழக்கு நிலுவையில் இருக்கும்போதுகுற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவருக்குகீழ் கோர்ட்டுகள்வழக்கமான ஜாமின் அளிக்கும் நடைமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றம்உச்ச நீதிமன்றம் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில்முன் ஜாமின் அளித்துள்ள பட்சத்தில்குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கீழ் கோர்ட்டில் சரண் அடைந்துவழக்கமான ஜாமின் கோரக் கூடாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்சரண் அடைவதும்வழக்கமான ஜாமின் கோருவதும்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக கருதப்படும்.
அர்த்தமற்றது : 
கீழ் கோர்ட்டில் ஜாமின் பெற்ற பின்மேல் நீதிமன்றங்களில்சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை முழுமை அடைந்துகுற்றஞ்சாட்டப்பட்ட நபருக்குஜாமின் நிராகரிக்கப்படும்போதுஅதுஅர்த்தமற்றதாகி விடும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.08.2017


Friday, August 11, 2017

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனுமதி பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை:'அரசு அனுமதி பெறாத பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் போது, அதிகாரிகள் விரைந்து ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில், அரசு அனுமதியின்றி துவங்கப்பட்ட பள்ளியில், 200 மாணவர்கள் படித்து வந்தனர். அந்த மாணவர்களை, வேறு பள்ளிகளில் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
தஞ்சையில் உள்ள, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'அனுமதி கேட்டு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது; ஆனால், ஒப்புதல் பெறவில்லை. அதனால் தான், வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கபட்டது' என,கூறப்பட்டது.
நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
ஒரு பகுதியில், அரசு அனுமதியுடன் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன என்பது, கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரியும். அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்தால், அதிகாரிகள் உடனுக்குடன் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி பள்ளிகள் திறக்கப்பட்டு, அனுமதி கோரிய பள்ளியின் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னே, கல்வித்துறை அதிகாரிகள் துாக்கத்தில் இருந்து விழித்து, மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள், சரியாக செயல்படாததால், இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் எதிர்காலம் பாழடிக்கப்படுகிறது. எனவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு,பதிலளிக்க வேண்டும்.
➤ பள்ளிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வரும் போது, அதிகாரிகள் ஏன் முறையாக செயல்பட வில்லை.
 மாணவர்கள் சேர்க்கையை அந்த பள்ளிகள் துவங்கி விட்டதா, இல்லையா என்பதை ஏன் சரிபார்க்கவில்லை?
 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களின் நலன் கருதி, துவக்கத்திலேயே அதிகாரிகள் ஏன் விரைந்து செயல்படவில்லை?
 அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்த பள்ளிகள் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
 அனுமதி பெறாமல், ரகசியமாக மாணவர் களை சேர்க்கும் பள்ளிகளை தடுக்க, சட்டத்தின் கீழ் எந்தெந்த வழிகள் உள்ளன?
➤ தமிழகம் முழுவதும், அரசின் அனுமதியின்றி எவ்வளவு பள்ளிகள் இயங்குகின்றன?
மேற்கூறிய விபரங்களை, வரும், 16க்குள் வழங்க வேண்டும். அரசின் அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகளில், மாணவர்களை சேர்ப்பதை தடுக்க, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -11.08.2017

Saturday, July 29, 2017

'வரதட்சணை கொடுமை வழக்கில் விசாரிக்காமல் கைது செய்யாதீங்க!'

'வரதட்சணை கொடுமை வழக்கில் விசாரிக்காமல் கைது செய்யாதீங்க!'
புதுடில்லி:''வரதட்சணை தடுப்பு சட்டம், தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது; வரதட்சணை வழக்கில், விசாரணை நடத்தாமல், உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது,'' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
வரதட்சணை தடுப்பு சட்டத்தை, சிலர் தவறாக பயன்படுத்துவதாக, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. 
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள்,ஆதர்ஷ் குமார் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு .முன் நடந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வரதட்சணை தடுப்பு சட்டம், தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. 
வரதட்சணை புகார் கொடுக்கப்பட்டால், உடனடியாக யாரையும் கைது செய்யக் கூடாது
குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்த பின்தான், கைது நடவடிக்கையைபோலீசார் மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக, மாவட்டந்தோறும், ஒன்று அல்லது இரண்டு குடும்பநல கமிட்டிகளை,  “மாவட்ட சட்ட சேவை ஆணையம்”  அமைக்க வேண்டும்.
வரதட்சணை தொடர்பாக புகார்களை பெறும் போலீசார், துணை கலெக்டர்கள்  அதை, மாவட்ட குடும்ப நல கமிட்டியிடம், அனுப்ப வேண்டும்.
இந்த புகார்களை, மாவட்ட குடும்பநல கமிட்டி விசாரித்து, ஒரு மாதத்தில், புகாரை அனுப்பிய அதிகாரியிடம்அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பநல கமிட்டியில், மூன்று உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இதை, ஆண்டுக்கு ஒரு முறை, மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து, மாற்றி அமைக்க வேண்டும்.
இந்த கமிட்டியில், சட்ட ஆலோசகர்கள், சமூக சேவகர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், அதிகாரிகளின் மனைவியரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.
ஆனால், வழக்கில் சாட்சிகளாக,கமிட்டி உறுப்பினர்களை சேர்க்க கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.07.2017