disalbe Right click

Monday, April 27, 2015

ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்ய

சென்னை புறநகர் ரயில்களில் மொபைல் மூலம் டிக்கெட் புக் செய்வது எப்படி?

கா
கிதமில்லாமல்,மொபைல் மூலம் புறநகர் ரயில்  டிக்கெட் பெறும் அப்ளிகேஷனை ஏப்ரல் 22 அன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டெல்லியில்   அறிமுகப்படுத்தினார் -

செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் ‘GOOGLE பிளேஸ்டோரில்‘ ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதனுள்ளே சென்று, செல்போன் எண் மூலம் இவ்வசதிக்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

அந்த செயலியில்  மொபைல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், பாஸ்வேர்டு எண் கிடைக்கும்.
அதைத் தொடர்ந்து, டிக்கெட் புக்கிங் பகுதி தேர்வு செய்து, அதில் புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை பதிவு செய்து, டிக்கெட்டை பெற முடியும்,

UTS WALLET க்கு பணம் மாறுதல்(money transfer) செய்து balance amount குறைந்த பட்சம் 50 அல்லது 100 ரூ வைத்து கொள்ள வேண்டும் 


ரயில் நிலையத்தில் இருக்கும்போது அந்த ரயிலுக்கு நாம் டிக்கெட் புக் செய்ய முடியாது. ரயில்வே வழித்தடத்தில் இருந்து, 15 மீட்டர் தூரத்திற்கு அப்பால், 5 கி.மீ., தொலைவிற்குள், டிக்கெட்டை முன் பதிவு செய்ய முடியும்
இந்த அப்ளிகேசனை இதுவரை 70,000-க்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். அம்பத்தூர் ,கும்மிடி பூண்டி ,வேளச்சேரி போன்ற ரயில் நிலையபகுதிகளுக்கும், பீச் முதல் தெற்கே கிண்டி உள்பட பெருங்களத்தூர் வரை இப்போது இந்த மொபைல் டிக்கெட் வசதி உள்ளது. ஊரப்பாக்கம்  முதல் செங்கல்பட்டு வரை உள்ள  பகுதிகளுக்கு இந்த வசதி இப்போதைக்கு  இல்லை

- ஷான்
நன்றி : விகடன் செய்திகள் 27.04.2015

Sunday, April 26, 2015

கல்விக்கடன்


கல்விக்கடன் பெறுவது எப்ப‍டி?

கிடைக்குமா என்கிற கவலை ஒரு பக்கம்… அப்படி கிடைத்து விட்டால் படிப்புச்செலவுக்கான பணத்துக்கு எங்கே போவது என் கிற கவலை இன்னொரு பக்கம் … மகன்/மகளின் கல்லூரிப் படி ப்புக்கென கொஞ்சம் பணம் சேர் த்தவர்களை விட்டு விடலாம். அப்படி எதுவும் சேர்க்காதவர்க ளுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது வங்கிகள் தரும் கல்விக் கடன் தான். இந்த கல்விக்கடனை எப்படி பெறுவது? எந்த வங்கிகளை அணுகலாம்?, யார் யாருக்கு இந்த கடன் கிடைக்கும், யார் யாருக்கு கிடைக்காது, எந்தெந்த கல்விக்கு கிடைக்கும், எதன் அடிப்படையி ல் கல்விக் கடன் தருவார்கள்? கல்விக் கடன் வாங்க வங்கியில் என்னென்ன சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்?
அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுத் துறை/தேசிய அல் லது தனியார் வங்கியில் கல்விக் கடன் பெறலாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான, எதிர் காலத்தில் வேலை வாய்ப்பு ள்ள கல்விப் பிரிவை தேர்வு செய் வது கல்விக் கடனை பெறுவதற்கு அடிப்படையான விஷயம்.
பிரிவைத் தேர்வு செய்வது போல, சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்வதிலும் கவனம் அவசியம். கல்லூரியில் சேர்ந்த பின்னர் அருகில் இருக்கும் வங்கி மேலாள ரை அணுகி கல்விக் கடன் பெறு வதற்கான விதி முறைகள் என்னெ ன்ன என்று தெரிந்து கொண்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பின்னர் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க, கல்வி பயில சேர்ந்திருக்கும் கல்லூரியிருந்து போனோஃபைட் என்று சொல்லப் படுகிற சேர்க்கைக் கான ரசீதையு ம், ஃபீஸ் ஸ்ட்ரக்சர் என்று சொல் லப்படுகிற முழுப் படிப் புக்குமான செலவு விவரம் அடங்கிய சான்றிதழ்களையும் வாங்கி வங்கி யிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றுக் காக ரேஷன் கார்டு அட்டையின் அட்டஸ்டேட் நகல், வருமானச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பி க்கப்பட வேண்டும். கல்விக் கடன் பெற விரும்பு ம் மாணவர்கள் முடிந்த மட்டும் பிளஸ்டூ படித்து விடு முறையில் இருக்கும்போதே தங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் வங்கிகளு க்கு பெற்றோ ருடன் சென்று கல்விக் கடன் குறித்து விசாரித்து விடுவது நல்லது. ”கல்விக் கடன் பெற நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்தி ருக்கும் வங்கிகளையே முதலில் அணு கலாம். சேமிப்புக் கணக்கு இல்லாத வங்கிகளையோ, அறிமுகமே இல்லாத வங்கி களையோ நாடும் போது கல்விக் கடன் கிடைக்க, நேரம் நிறைய விரயமாகலாம். சிறிய ஊர்களில் இருப்பவர்கள் லீட் வங்கிகளை அணுகி கல்விக் கடன் பெற லாம்.
கல்விக்கடன்: யார் யாருக்கு கிடைக்கும்?
  
இந்திய அரசாங்கம் கல்விக் கடன் பெற தகுதி உள்ள அனைத்து மாண வர்களுக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்கிற உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் பிறப்பி த்திருக்கிறது. ஏழை மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள் ளவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர் வாங்கிய மதிப்பெண்க ளுக்கு ஏற்ப கல்விக் கடன் கிடைக்கும்.அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுத் தரப்படும் அனைத்து படிப்புகளுக்கும் கல் விக் கடன் கிடைக்கு ம்.எதிர்காலத்தில் வேலை வாய்ப்புள்ள இளங் கலை படிப்புகள் (பி.காம்., பி.எஸ்.சி., பி.ஏ., பி.சி.ஏ. போன்ற படிப்பு கள்), முதுகலை படிப்புகள் (எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகள்) மற்றும் தொழிற் கல்விகள் (பொறியியல், மருத்துவம், விவசாய ம், சட்டம், மேலா ண்மை போன்ற படிப்புகள்), ஐ.ஐ.டி., என்.ஐ.எஃப். டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு கல்வி நிறுவனங்களில் இருக்கும் படிப்புக ள் மற்றும் சி.ஏ., சி.எஃப்.ஏ., ஐ.சி. டபிள்யூ.ஏ. போன்ற படிப்புகளுக்கு ம், டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் கிடைக்கும்.
ஆனால், வேலை வாய்ப்பில்லாத படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங் க வங்கிகள் தயங்கவே செய்யும். அது மாதிரி தரப்படும் கடன்கள் திரும்ப வருமா என வங்கிகள் அஞ் சுவதே இதற்கு காரணம். தவிர, அங்கீகாரம் இல்லாத கல்வி நிறு வனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கண்டிப்பாக கிடைக்காது.
கல்விக்கடன் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் அவசியமாக இருக்க வேண்டும்.
* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
* வேலை வாய்ப்பு அதி கம் உள்ள படிப்புகளாக கருதப்படும் கல்விகளைத் தேர்வு செய்தி ருக்க வேண்டும்.
* அரசின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி களில் மாணவர்கள் சேர்ந் திருக்க வே ண்டும்.
* பிளஸ்டூ மதிப்பெண்கள் கூட்டு சத விகிதத்தின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தால் 50%-ம், மற்ற பிரிவினரு க்கு 60%-மாகவும் இருத்தல் அவசியம்.
கல்விக் கடன்:
உத்தரவாதம் தேவையில்லை!
  
கல்விக் கடன் நான்கு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் எந்தவொரு உத்தரவாதமும் தேவையில்லை. இன்றைய தேதியில் தமிழகத் தில் பல மாணவ, மாணவிகளின் தேவை இதற்குள் அடங்கிவிடும்என்பதால் கல்விக் கடன் வாங்கு கிற பெற்றோர்கள் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தரவேண்டிய தில்லை.நான்கு லட்சத்திலிரு ந்து 7.5 லட்சம்வரை கல்விக் கடன் என்கிறபோது பெற்றோரில் ஒருவ ரோ அல்லது மூன்றாம் நபரோ தனிநபர் உத்தரவாதம் தர வேண்டி வரும். ஏழு லட்சத்துக்கு அதிகம் என்கிற போது தன் வசம் இருக்கும் சொத்துக்களில் ஏதாவது ஒன்றை பிணையமாக வைக்க வேண்டும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர் கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
எந்த செலவு அடங்கும்?
வங்கிகள் வழங்கும் கடன் தொகையில் கீழ்க்கண்ட செலவினங்கள்முழுமையாக அடங்கும்.
* கல்லூரியில் கட்ட வேண்டிய கல்வித் தொகை.
* தேர்வுக் கட்டணம், புத்தகம் மற் றும் ஆய்வகக் கட்டணம்.
* விடுதி மற்றும் சாப்பாட்டுச் செல வுகள்.
* மாணவர்களின் கல்விச் சாதனங் கள் மற்றும் சீருடைகள்.
* படிப்பிற்கான கம்யூட்டர் வசதி மற்றும் புராஜெக்ட் செலவினங்க ள்.
படிப்பில் கவனம் தேவை!
கல்விக் கடன் வாங்கி படிக்கும் மாணவர்கள் படிப்பில் முழுக் கவ னம் செலுத்துவது அவசியம். ஏனெ னில், செமஸ்டர்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு இடையே வங்கி மேலாளரிடம் காட்ட வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் போனால், மேற்கொண்டு தர வேண்டிய கடன் தொகை நிறுத் தப்படலாம். மீண்டும் அந்த பாடத்தி ல் தேர்ச்சி பெற்ற பிறகே வங்கியி டமிருந்து கல்விக் கடனை எதிர் பார்க்க முடியும்.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத் தினாலோ, ஒழுங்கீனமாக நடந்து கொள்வதன் மூலம் கல்லூரியிலி ருந்து விலக்கப்பட்டாலோ கல்விக் கடன் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் அதுவரை வாங்கிய கடனை வட்டியோடு திரும் பச் செலுத்த வேண்டியிருக் கும்.
கல்விக் கடன்: எப்படி திரும்பக் கட்டுவது?
கல்விக் கடனுக்கான அசலையோ அல்லது வட்டியையோ படிக்கிறகாலத்திலேயே கட்ட வேண்டும் என எந்த வங்கியும் சொல்வதில் லை. படித்து முடித்து ஓராண்டு ஆனதும் அல்லது வேலை கிடைத் து ஆறு மாதம் கழித்தே வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செ லுத்த ஆரம்பித்தால் போதும். முழுக் கடனையும் திருப்பிச்செலு த்த குறைந்தது ஐந்து ஆண்டுக ள் அவகாசம் தரப்படும். படித்து முடித்த பிறகு வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு, வாங்கும் சம்பளம் அடிப்படையில் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை அவகாசம் தரப்படும். இந்த முடிவு வங்கிக்கு வங்கி மாறுபடும்.
படிக்கும்போது வட்டி கட்ட தேவையில்லை!
கல்விக் கடன் வாங்கும் மாணவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தா ல் அவர் களின் வருமான சான்றிதழை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். வருமான சான்றிதழை ஆரம்பத்தில் சம ர்ப்பித்தால் போதுமானது. ஆண்டுக்கொ ருமுறை சமர்ப்பிக்க வேண்டிய அவசிய ம் கிடையாது. இதனால் படிக்கும் காலத் தில் வாங்கும் கடனுக்கான வட்டியை பெற்றோர்கள் கட்ட வேண்டிய அவசிய ம் கிடையாது.
அந்த கடனுக்கான வட்டியை மத்திய அரசாங்கம் வங்கிகளுக்கு செலுத்திவிடும். படிப்பு முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு வட்டியுடன் அசலையும் சேர்த்து கட்ட ஆர ம்பிக்க வேண்டும். இந்த சலுகை வெ ளிநாடுகளில் படிக்கும் மாணவர்களு க்கு கிடையாது.
கடனை சீராக கட்டினால் சலுகை!
இடைவிடாமல் சரியாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவ, மாண விகளுக்கு ஒரு சதவிகித வட்டி சலு கை தரப்படும். பொது வாகவே கல் விக் கடனுக்கான வட்டி விகிதத்தில் மாணவிகளுக்கு 0.5 சதவிகிதம் சிற ப்பு சலுகை வழங்கப்படுகிறது. பெரும் பாலானவர்கள் கல்விக் கட னை மாதத் தவணை யாகத்தான் கட்டி வருகிறார்கள். விரைவில் கடனை அடைக்க நினைப்பவர்கள் வேலையின் மூலம் எப்போதெ ல்லாம் பணம் கைக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடனை அடைக்கலாம்.
வரிச் சலுகை என்ன?
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனுக்கு வட் டிக்கு மட்டும் 80-இ பிரிவின் கீழ் வரிச் சலு கை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு கிடையாது. யாருக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குத்தான் வரிச்சலுகை கிடைக்கும். கடனை திரும்பச் செலுத்த ஆரம்பித்து எட்டு ஆண் டுகள் வரை கல்விக்கடனுக்கான வட்டிக்கு வரிச்சலுகை பெறலாம்.
கல்விக் கடன்:
கட்டாமல் போனால்..?!
மற்ற கடன்களை திருப்பிச் செலுத்தாதவர் கள் மீது என்னென்ன நட வடிக்கைகள் மேற் கொள்ளப்படுமோ, அதே நடவடிக்கைகள் கல் விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக் கும் பொருந்தும். காவல் துறை நடவடிக்கை, கோர்ட் நடவடிக்கை, பாஸ்போர்ட் முடக்கம் என்று எல்லா நடவடிக்கைகளையும் வங்கி எடுக்க முடியும். அவ்வளவு ஏன், கடன் திருப்பிக் கட்ட மறுப் பவர் பணி செய்யும் நிறுவ னத்தைகூட வங்கி அணுகி, கடனை கட் டச் சொல்லலாம்.
வேலை கிடைக்காவிட்டால்..!
கல்விக் கடன் வாங்கி படித்த மாணவர், படித்து முடித்தபின் வே லை கிடைக்காவிட்டால், அது தொ டர்பான விவரத்தை சம்பந்தப் பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனை திருப்பிச் செலுத்துவதற் கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் படும். எனவே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி கடனை கட்டாமல் விட லாம் என்று நினைக்க வேண்டாம்.
முதுகலைக்கும் கடன்!
இளநிலை படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முது நிலைப் படி ப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா எனில், நிச்சய ம் கிடைக்கும். இது அனைத்து கல்விக்கும் பொருந் தும்.
இன்ஷூரன்ஸ் அவசியம்!
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக் கும் மாணவர்கள் இன்ஷூரன்ஸ் இல்லாமல் இருந்தால், வங்கி முத லில் அவர்களை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி அறிவுறு த்தும்.
ஏனெனில், மாணவருக்கு திடீரென் று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந் தால் அவர்கள் வாங்கியிருக்கும் கடன் தொகையை இன்ஷூ ரன்ஸ் இழப்பீட்டுத் தொகையிலிருந்து வங்கி எடுத்துக் கொள்ளும்.
கல்விக் கடன்: மறுக்க என்ன காரணம்?
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கி யில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலு த்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப் பட வாய்ப்பு அதிகம். மேலும், மாணவரின் குடும்பத்தில் ஏற் கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலு த்தாமல் இருந்தாலோ, குறை வான மதிப்பெண் எடுத்திருந்தா லோ, அங்கீகரிக்கப்படாத கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்திருந்தாலோ கல்விக் கடன் மறுக்க ப்படலாம்.
எல்லா சான்றிதழ்களையும் தந்த பிறகும் கல்விக் கடன் நிராகரிக் கப்பட்டால், அதற்கான காரணத்தை எழுத்து மூலமாக தரும்படி வங்கி அதிகாரிகளிடம் கேளுங்கள். அந் த காரணம் நியாயமானதாக இல்லை எனில், உங்களுக்கு கல்விக் கடன் கிடை க்க நிறைய வாய்ப்புண்டு.
யாரிடம் புகார் செய்வது?
”அதிக மார்க்குகளை எடுத்திருக்கிறேன். வங்கிகள் கேட்கும் எல்லா சான்றிதழை யும் தந்துவிட்டேன். ஆனாலும், கல்விக் கடன் தர மறுக்கிறார்கள்” என்கிறவர்க ள், முதலில் அந்த வங்கியின் மண்டல மேலாளரை அணுகி பிரச் னையை எடுத்துச் சொல்லலாம். உங் கள் பிரச்னைக்கு உரிய பதி லை அவர் சொல்லவில்லை எனில், வங்கித் தலைமைக்கு மின்ன ஞ்சல், அல்லது தபால் மூலம் உங்கள் பிரச்னையை தெரியப்படுத்த லாம். அப் போதும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் முறையிடலாம் .
எளிதில் கடன் கிடைக்க..!
கல்விக் கடன் கேட்டு தாங்கள் குடியிரு க்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கிக ளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் கிடைக்கலாம். அதேபோல் தாங்கள் வரவு – செலவு கணக்கு வைத்திருக் கும் வங்கிகளில் கல்விக் கடன் கேட்டு விண் ணப்பித்தால் சீக்கிரம் கல்விக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கல்விக் கடன் அடைபடுவதற்கு உத்தரவாதம் இல்லை என்பதா லேயே பெரும்பாலும் தனியார் வங்கிகள் கல்விக் கடனுக்கு முக்கி யத்துவம் கொடுப்பதில்லை. கல்விக் கடன் என்பது நம்முடைய பிறப்புரிமை! அந்த உரிமையை பறிக்கவோ, பறிகொடுக்கவோ வே ண்டாம்!
நன்றி :  நாணயம் விகடன்

Saturday, April 25, 2015

வாகனங்கள் மூலம் விபத்து நடந்தால் இழப்பீடு


வாகனங்கள் மூலம் விபத்து நடந்தால் இழப்பீடு பெற 
என்ன செய்ய வேண்டும்?
************************************************************
சட்டம் உன் கையில்: வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி


நிறைவான ஒரு வாழ்வை எண்ணி இருக்கும் பலரின் கனவுகளை, வாழ நினைத்த வாழ்வை, எதிர்காலத்தை சிதைக்க வல்லது எதிர்பாராமல் நடைபெறும் விபத்து. அதுவும் மோட்டார் வாகனங்களினால் ஏற்படும் விபத்து களால் ஏற்படக்கூடிய இழப்பு பல நேரங்களில் ஈடு செய்ய முடியாதது. இன்று உலக அளவில் சாலைகளின் தரமும் போக்குவரத்தின் தரமும் உயர்ந்துள்ளது. அது உலகின் பொருளாதார வளர்ச்சியை பறை சாற்று கிறது. ஆனால், இந்த பொருளாதார வளர்ச்சி வாகன நெரிசலை ஏற்படுத்துவதுடன் பல விபத்து களுக்கும் வழிவகை செய்கிறது.

WHO  (World Health Organisation) வின் கணிப்புப்படி கிட்டத்தட்ட உலகில் ஓர் ஆண்டில் சுமார் 1 கோடி மக்களுக்கு மோட்டார் வாகன விபத்துகளால் பலவிதமான உடல் காயங்கள், ஊனங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 6 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள் என்றும் கூறுகிறது. இது பொருளாதார வளர்ச்சி யின் விளைவா அல்லது மனித இனத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமா? இந்தியாவை பொறுத்தவரை வாகன விபத்தினால் ஏற்படக்கூடிய உயிர் இழப்பும், விபத்து களை சந்தித்தவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் காயங்களும், நிரந்தர ஊனங்களும், பலரின் வாழ்வின் தரத்தில் பெரும் அளவில் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. இவ்வாறான விபத்துகளில் மாட்டிக் கொள்பவர்களுக்கு இன்று பெரிதும் கை கொடுப்பது ‘MOTOR VEHICLES ACT   1988’

‘மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988’

இந்த சட்டம் ஜூலை 1989ம் ஆண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் இதற்கு முன் இருந்த 1939ம் ஆண்டு சட்டத்துக்கு மாற்றாக இயற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்துக்கான விதிகளும் 1989ம் ஆண்டே வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் முன் இழப்பீடு யாரெல்லாம் கேட்க முடியும்?

- விபத்தில் காயம் அடைந்தவர்கள்.
- சேதமடைந்த சொத்தின் உரிமையாளர்கள்.
- மோட்டார் வாகன விபத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகள் அல்லது சட்டமுறை பிரதிநிதிகள்.
- வாரிசு அல்லது சட்டமுறை பிரதிநிதிகளின் சார்பாக ஒருவர்... ஆகியோர் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யலாம். 

மனுவை எங்கே தாக்கல் செய்யலாம்?

1. விபத்து நடைபெற்ற இடத்தில் இருக்கும் தீர்ப்பாயம்.
2. இழப்பு நேர்கிறவர் வசிக்கும் அல்லது தொழில் நடத்தும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம்.
3. எதிர்மனுதாரர் வசிக்கும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம் ( Tribunal). 

மேலும் விபத்து பற்றி அறிவிப்பு எட்டியவுடன் தீர்ப்பாயமே தானே முன்வந்து (Suomotto) வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது. விபத்து நடந்தவுடன் அதன் எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க, காப்பாற்ற துரித நடவடிக்கை எடுப்பதுடன் விபத்து பற்றி முதல் தகவல் அறிக்கை தயாரித்து, அது தயாரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அதிகார வரம்புக்குட்பட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது. தீர்ப்பாயத்துக்கு முன் இருக்கும் மனுவினை இயற்கை நீதிக்கு உட்பட்டும், சட்டத்துக்கு உட்பட்டும் தகுந்த விசாரணை மேற்கொண்ட பின்னர் தீர்ப்பாயம் நிர்ணயிக்கும் இழப்பீட்டு தொகையை 

- விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரோ,
- வாகன ஓட்டுநரோ,
- மோட்டார் வாகனம் காப்பீடு செய்யப்பட்டுள்ள காப்பீடு கழகமோ அல்லது மேற்குறிப்பிட்ட மூவரும் கூட்டாக கொடுக்க கடமைப் பட்டவர் ஆவர். இழப்பீட்டு தொகையை நீதிமன்ற நடவடிக்கையின் மூலமாகவோ அல்லது மக்கள் நீதிமன்றத்தின் ( Lok adalath  ) மூலமாகவோ பெறுவதற்கு சட்டம் வழிவகை செய்துள்ளது.

மோட்டார் வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்படும் இழப்பீடு கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கான அதிகாரம் இதற்கு அமைக்கப்பட்ட மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயத்துக்கு (Motor Accidents Claims Tribunal) தான் உள்ளது. அது ஓர் உரிமையியல் நீதிமன்றத்தின் ( Civil Court  ) அதிகாரத்தை பெற்றுள்ளது. இழப்பீடு உத்தரவுக்கு எதிராக எதிர்தரப்பினர் மேல்முறையீடு, தீர்ப்பு தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் செய்யலாம். அவ்வாறு மேல்முறையீடு செய்யும் பொழுது ரூபாய் 20,000 அல்லது தீர்ப்பளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் 50%, அதில் எது குறைவோ, வைப்பீடு செய்தால் மட்டுமே மேல் முறையீடு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் ஓட்டுநரின் மேல் தவறே இல்லாமல் விபத்து நடந்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்த சட்டத்தின் சிறப்பம்சம். விபத்து ஏற்படுத்திய வாகனம் அடையாளம் தெரியாத நிலையிலும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு ஓர் ஆதரவு நிதி ஏற்படுத்தி உள்ளது. அதன் மூலம் ஒரு தொகையை இழப்பீடாக பெறலாம்.

ஒரு விபத்து நேரிடும் போது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்:

- விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி.
- விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண்.
- ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி 
சேகரித்தல்.
- காவல்துறையினர் வரும் வரை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல்.
- காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கை தயாரிக்க உதவுதல்.
- சாட்சிகளை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டுதல்.
- மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக செய்தல்.

இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது மக்கள் நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கனரக வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் விபத்துகளை அதிக அளவில் சந்திக்கிறார்கள். அது போல பல புள்ளி விவரங்களை பார்க்கும்போது பெண்களை விடவும் ஆண்கள் பலர் வாகன விபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.மேலும்,

- குடித்து விட்டோ, போதை வஸ்துகளை பயன்படுத்தி விட்டோ ஓட்டுபவர்கள்,
- அதிவேகத்துடன் ஓட்டுபவர்கள்,
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வயது 
வரம்பில்லாமல் ஓட்டுபவர்கள்,
-  சரிவர பயிற்சி இல்லாமல் ஓட்டுபவர்,
என்று விபத்துகளுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

 National Insurance Co. Ltd Vs Minor Deepika என்ற வழக்கின் தீர்ப்பு,  பெண்கள் பலரால் வரவேற்கப்பட்டு ஊடகங்களால் பாராட்டப்பட்ட. பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஒரு தீர்ப்பு. இந்த தீர்ப்பினை வழங்கியது முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசி திருமதி பிரபா ஸ்ரீதேவன் அவர்கள். ஒரு மைனர் குழந்தை விபத்தில் தன் பெற்றோர் இருவரையும் இழந்து விட்ட நிலையில் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தந்தையின் வயது, வருமான இழப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு ஒரு தொகை நிர்ணயிக்கப்படுகிறது. தாயை பொறுத்தவரை இல்லத்தரசி என்பதால் இழப்பீடு தொகை என்று வரும்போது ஊதியம் ஈட்டாதவர் என்ற நிலைப்பாடு. 

ஆனால், இங்கு ஒரு பெண் அதுவும் ஒரு குடும்பத் தலைவி குடும்பத்துக்காக செய்யும் பணிகள், வீட்டை பராமரிப்பது, குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குடும்ப கணக்கு வரவு செலவு பாரத்தை ஏற்று அவள் செய்யும் பணி ஈடு இணை இல்லாதது என்று கூறி அவளின் பணியை,  பெண்மையை போற்றி எழுதப்பட்ட தீர்ப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.மோட்டார் விபத்துகளை பொறுத்தவரை இயற்கையான விபத்துகள் என்பதை காட்டிலும் செயற்கையாக (man made mistakes) என்று சொல்லக்கூடிய நிகழ்வுகள் தான் அதிகம். மனித உயிர் என்பது மதிப்பிட முடியாத ஒன்று. மேலும் ஒரு விபத்து என்பது ஒரு குடும்பத்தின் தலைவனுக்கு ஏற்படும் எனில் அந்த தலைவனை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் ஒரு கடமை உணர்வுடன் செயல்பட்டால் விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.விபத்தை தடுப்போம்.. வாழ்வை நேசிப்போம்!

நன்றி : தினகரன் நாளிதழ் 09.01.2015


நில அளவை தொடர்பான ஆவணங்கள்

நில அளவை தொடர்பான ஆவணங்களும், அலுவலகங்களும்
************************************************************************
              நம் நாட்டில் பிரச்சனை என்று ஆரம்பிப்பது, அதிகபட்சம் நிலங்களை வைத்துத்தான். அந்த நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முன்பு வாங்குவது என்பது மிகுந்த சிரமமானது ஆகும். ஆனால், இப்போது அப்படி அல்ல. ஆன்லைன் மூலமாகவே அனைத்தையும் பெற முடியும். இருந்தாலும், அப்படிப் பெறும் ஆவணங்களை அதிகாரபூர்வமான ஆதாரங்களாக பயன்படுத்த முடிவதில்லை. எனவே, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நில ஆவணங்களை பெற்று அதனை நாம் பயன்படுத்துகிறோம்.
                நில ஆவணங்களில் எந்த வகையான ஆவணங்களை எந்த அலுவலகத்தில் இருந்து எப்படி பெறுவது?, அதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் யாரிடம் நாம் விண்ணப்பிப்பது?  போன்ற சந்தேகங்களுக்கு இந்தப் பதிவு விடை தருகிறது. படித்து பயன் பெறுங்கள்.



****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Friday, April 24, 2015

டின் நம்பர் பெற


டின் நம்பர் பெற என்ன செய்ய வேண்டும்? 
*******************************************************
தமிழ்நாட்டில் தொழில் செய்பவர்கள் அரசுக்கு வரி செலுத்துவதற்காக  உள்ள ஒரு அடையாள எண்ணை டின் (Taxpayer identification number) நம்பர் என்று சொல்கிறோம்.  புதியதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள், தங்கள் தொழில் சம்பந்தமான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து இந்த எண்ணை வாங்க வேண்டும்.

உங்களது தொழில்  எந்த (உற்பத்தி, சேவை ,  வர்த்தகம் அல்லது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி)  ரீதியாக இருந்தாலும் தாங்கள் அதன் சம்பந்தமான அறிக்கையை  தமிழக அரசிடம் சமர்ப்பித்து  டின் நம்பரை கண்டிப்பாக வாங்க வேண்டும்.

இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, “வணிகவரித்துறை” அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்யலாம். 

உங்களது தொழிலை வேறு ஒரு மாநிலத்தில்  தொடங்குவதாக இருந்தால், தாங்கள் அந்த மாநிலத்திடமிருந்தே டின் நம்பரை பெறவேண்டும்.

தங்களது தொழிலானது நமது மாநிலத்தைத் தாண்டி, வேறு மாநிலத்திலும் நடைபெறுகிறது என்றால், அதற்கு மத்திய அரசிடம் விண்ணப்பித்து, மத்திய விற்பனை வரி எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த எண் மொத்தம் 11 இலக்கங்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறியீடு உள்ளது.

இந்த எண்ணானது, மதிப்புக் கூட்டு வரி விதிப்பு (Value added tax)  எனப்படும் வாட் கணக்கோடு தொடர்புடையதாகும். இந்த எண்ணைப் பெற்று தொழில் நடத்தும் ஒருவர், முறையாக அரசுக்கு வரியை செலுத்திவிட்டுத்தான்  தொழில் செய்றார்! என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த எண்ணைப் பெறுவதற்காக Form-F, Form-A விண்ணப்பிக்கும் போது, அதனுடன்
1.   தொழில் செய்பவரது புகைப்படம்  2 
2.  குடும்ப அட்டை நகல்
3.  பான் கார்டு நகல்
4.  சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல்
5.  வாடகை ஒப்பந்த பத்திரத்தின்  நகல்
6. செய்யும் தொழிலுக்கு ஏற்ப வங்கி வரைவோலை (Demand Draft) 
இது வணிக வரித்துறையின் பெயருக்கு எடுக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருக்கும் இருவரது பரிந்துரை கடிதத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஆவணங்களை சரிபார்த்தபின்  விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு வணிகவரித்துறையில் இருந்து, சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

இந்த டின் நம்பரை வைத்து ஒருவர், பல தொழில்களை  தொடங்கிக் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் வணிகவரித்துறை அலுவலகத்தில் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டு  தொடங்க வேண்டும்.

யார் பெயரில் டின் நம்பர் பெறப்பட்டுள்ளதோ, அவர் பெயரில்தான் தொழில்களை தொடங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Wednesday, April 22, 2015

ஃபான் கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா?


ஃபான் கார்டு பற்றி தெரிந்து கொள்வோமா?
******************************************************
 இந்தியாவில் தற்போது ஏராளமானோர் பான் (பெர்மனன்ட் அகௌண்ட் நம்பர்) கார்டு வைத்துள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பான் கார்டின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடும் தெரிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே. எனவே பான் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது நல்லது.

 பான் என்றால் என்ன? 
பான் என்றால் இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்களாகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்த பான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

 பான் கார்டின் முக்கியத்துவம் 
ஒருவரின் வங்கி நடவடிக்கைகளை, அதாவது அவருடைய வரி கட்டுதல், டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் கிரெடிட்டுகள், அவருடைய வரி சேமிப்பு, சொத்து, அன்பளிப்பு மற்றும் எப்பிடி போன்றவற்றை அவர் வைத்திருக்கும் பான் கார்டு வருமான வரித் துறைக்குத் தெரிவித்துவிடும். எனவே இந்த பான் கார்டின் உதவியுடன் வருமானத் துறை ஒரு இந்திய குடிமகனின் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை மிக எளிதாகத் தெரிந்து கொள்ளும். 

பான் எண்களை எளிதாக தெரிந்து கொள்ள:
 எடுத்துக்காட்டாக ஒருவருடைய பான் எண்கள் ஏஎஃப்இசட்பிகே7190கே (AFZPK7190K) என்று வைத்துக் கொள்வோம். இதில் இருக்கும் முதல் மூன்று எண்கள் ஆங்கில எழுத்துக்களான ஏ முதல் இசட் வரையிலான எழுத்துக்களிலிருந்து கொடுக்கப்படும் 3 எழுத்துக்களாகும். நான்காவது எழுத்து எப்போதுமே பான் கார்டை வைத்திருப்பவரின் நிலையைக் குறிக்கும். பி என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அது ஒரு தனி நபரைக் குறிக்கிறது. ஒரு வேளை எஃப் என்று கொடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு ஃபர்மை குறைக்கும். அல்லது சி என்று குறிப்பிட்டிருந்தால் அது ஒரு கம்பெனியைக் குறிக்கும். ஹெச் என்று குறிக்கப்பட்டிருந்தால் அது இந்து கூட்டு குடும்பத்தை குறிக்கும். ஏ என்று இருந்தால் அது ஒரு ஏஓபியைக் குறிக்கும். டி என்று இருந்தால் அது ஒரு ட்ரஸ்டைக் குறிக்கும். ஐந்தாவது எண்ணான கே, பான் அட்டையை வைத்திருப்பவரின் இறுதிப் பெயர் அல்லது அவருடைய பட்டப் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும். அடுத்த நான்கு எண்கள் 0001 முதல் 9999 வரையிலான எண்களுக்குள் இருக்கும் வரிசை எண்களாகும். இறுதி எண்ணான கே, ஆங்கில எழுத்தில் இருக்கிறது. இது ஒரு சோதனை இலக்க எண்ணாகும்.

 பான் கார்டு முக்கியமா? 
ஆம். பான் கார்டு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய எல்லா பொருளாதார வங்கி நடவடிக்கைகளிலும் இந்த பான் எண்களைக் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம் என்று வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது. 

பான் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?
 பான் கார்டைப் பெற படிவம் 49ஐ நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிவம் 49ஐ, வருமான வரித் துறை அல்லது யுடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் ஆகியவற்றின் இணைய தளங்களான www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த படிவம் 49ஐ, ஐடி பான் சேவை மையங்கள் மற்றும் டிஐஎன் பெசிலிடேஷன் மையங்கள் போன்றவற்றிலும் கிடைக்கும். மேலே சொல்லப்பட்ட இணையதளங்களுக்கு சென்று பான் நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்தால் www.https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்திற்கு சென்ற உங்களது பான் கார்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ் 
2. மெட்ரிகுலேஷன் சான்றிதழ் 
3. கல்லூரி சான்றிதழ் 
4. வங்கிக் கணக்கு அறிக்கை 
5. கிரெடிட் கார்ட் அறிக்கை 
6. வங்கி பாஸ்புக் அறிக்கை 
7. தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது 
8. ரேஷன் அட்டை 
9. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை 
10. பாஸ்போர்ட் 
11. வாக்காளர் அடையாள அட்டை 
12. ஓட்டுனர் உரிம அட்டை 
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று. 

வாழ்விடத்திற்கான சான்றுகள் 
1. மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது 
2. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது 
3. வங்கிக் கணக்கு அறிக்கை 
4. கிரெடிட் கார்டு அறிக்கை 
5. வங்கி பாஸ்புக் அறிக்கை 
6. வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீது 
7. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் சான்று 
8. பாஸ்போர்ட் 
9. வாக்காளர் அடையாள அட்டை 
10. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை 
11. ஓட்டுநர் உரிம அட்டை 
12. ரேஷன் அட்டை 
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.

 விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் மேற்கூறிய சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.

நன்றி:Tamil Good Returns




முதியோர் உதவித்தொகை பெற


முதியோர் உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?
*******************************************************************

                       சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகள் கணவரால் கைவிடப்பட்டோமற்றும் விதவைகளுக்கு  மாதாந்திர உதவியாக ரூ.1000/- வீதம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 
                   ஆதரவு ஏதும் இல்லாமல் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசினுடைய  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர். 
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
                  இத் திட்டத்தில் ஆதரவற்ற தகுதியுடைய முதியோர்களான ஆண், பெண்  அனைவரும் சேரலாம்.  இதற்குரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன், குடும்ப அட்டை நகல், அரசு மருத்துவமனை அல்லது அரசு பதிவுபெற்ற டாக்டரால் வழங்கப்பட்ட வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ்  மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
                        வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதன்பிறகு அதனை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்புவார்கள்.
                         கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து அலுவலர்கள் நேரில் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு  வந்து விண்ணப்பத்தில் தெரிவிக்கப் பட்ட தகவல்கள் உண்மைதானா? என்று ஆய்வு செய்வார்கள். உண்மைதான் என்று தெரிந்தால், விண்ணப்பதாரருக்கு உதவித்தொகை வழங்கலாம் என்று வருவாய் வட்டாட்சியருக்கு, கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்வார்.
                             வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பதாரருக்கு  பணவிடை (Money Order)  மூலமாக  மாதந்தோறும் ரூ.1000/- வழங்க உத்தரவிடுவார்கள். விண்ணப்பதாரர் தனது ஆயுட்காலம் முழுவதும் இதனை பெற முடியும்.
                              தற்போது (2015) இந்த திட்டத்தில் சில மாறுதல்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
 * வருமான வரம்பு, 5,000 ரூபாய்க்குள் என்று இருந்ததை, 50 ஆயிரம் ரூபாய்க்குள் என, 10 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தாலும் பயன்பெறலாம்.
* வாரிசுகள் இருந்தாலும், அவர்களால் பயனில்லை என்றால், மாதாந்திர உதவி பெற, முதியோர் தகுதி பெறுவர்.
* எல்லா விதமான உதவித்தொகை திட்டத்திலும், 'ஆதரவற்றோர்' என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கான விதிமுறைகளில், 'வேலை செய்ய முடியாத தன்மை' என்ற பிரிவு நீக்கப்பட்டு உள்ளது. 60 சதவீத பாதிப்பு உள்ள, அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும்.
* உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்டோர் மாதாந்திர உதவி பெற, 'மகன், மகள் ஆதரவு இல்லாமல் இருந்தால்...' என்ற விதிமுறையும் நீக்கப்பட்டு உள்ளது. இதற்கான, அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
                                                                                  நன்றி: தினமலர் நாளிதழ் - 22.04.2015
               

Tuesday, April 21, 2015

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற


அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற என்ன செய்ய வேண்டும்?
*********************************************************************************
          சென்னை உயர்நீதிமன்றப் பேராணை மனு எண்:26722/2013-க்கு 11.08.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி அரசாணை எண்:540 வருவாய் எல் டி 6 (2) துறை நாள்  : 04.12.2014-ல் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்வதற்கு வட்ட/கோட்ட/மாவட்ட அளவில் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 
வட்ட அளவிலான குழு:
                       1.வருவாய் வட்டாட்சியர் 2. காவல் ஆய்வாளர் 3. வட்ட துணை ஆய்வாளர் (நில அளவை) 
கோட்ட அளவிலான மேல் முறையீட்டுக் குழு:
                           1. சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் 3. துணை காவல் கண்காணிப்பாளர் 3. உதவி இயக்குநர் (நில அளவை)
                    ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அவர்களுக்கு மனு அளிக்க வேண்டும்.
      ஷை வட்டாட்சியர் அவர்கள் 60 நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றாலோ அல்லது ஷை வட்டாட்சியர் அவர்களின்  பதில் திருப்திகரமாக இல்லை என்றாலோ , 60 தினங்களுக்குப் பிறகு கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக்குழுத் தலைவரான சார் ஆட்சியர்/ வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம்  மேல்முறையீடு செய்ய வேண்டும். இம் மேல்முறையீட்டு மனு 30 நாட்களுக்குள் விசாரணை செய்து ஆணை வழங்கப்படும். 
       கோட்ட அளவிலான மேல்முறையீட்டுக் குழுவின் ஆணை கிடைக்கப்பெறவில்லை என்றாலோ அல்லது அவர்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்றாலோ, 30 தினங்களுக்குப் பிறகு, மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு தலைவரான மாவட்ட வருவாய் ஆய்வாளர் அவர்களுக்கு ஆய்வு மனு செய்ய வேண்டும். இம்மனுமீது 30 தினங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு ஆணை வழங்கப்படும். 
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது


Sunday, April 19, 2015

கேஸ் சிலிண்டர் மூலம் விபத்து ஏற்பட்டால்?


கேஸ் சிலிண்டர் மூலம் விபத்து ஏற்பட்டால்........? 
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் பேர் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள். தேசிய குற்றப்பதிவகம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி குஜராத் மாநிலத்துக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகளவு காஸ் சிலிண்டர் விபத்துகள் நடைபெறுகின்றன.
இந்த விபத்தினால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.
காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி வருகின்றன. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள் வார்கள். இந்த ஆய்வின்போது விபத்து நடைபெற்றதற்கான காரணங்கள் கண்டறியப்படும். விபத்தின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் காஸ் ஏஜென்சியையோ, சம்பந்தப் பட்ட எண்ணெய் நிறுவனத்தையோ அணுகலாம்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஸ் சிலிண்டர் விபத்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வீட்டில் நடந்திருக்க வேண்டும். வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் வணிக ரீதியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல் கோயில் திருவிழா மற்றும் சுற்றுலா செல்லும் இடங்களுக்கு சிலிண்டர் கொண்டு செல்லப்பட்டு விபத்து ஏற்பட்டிருந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காது. கூரை வீடுகளில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாது. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் தொகை பெறுவது குறித்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் வெடி விபத்துகளை தவிர்க்க செய்ய வேண்டியவை:
டெலிவரி செய்யப்படும் சிலிண்டர் முறையாக சீல் செய்யப் பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் டியூப்பை 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் வரை உழைக்கும் கடினமான டியூப்பை பயன்படுத்த வேண்டும்.
தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ரெகுலேட்டரை 'ஆஃப்' செய்ய வேண்டும்.
மின்சார சுவிட்சை போடும் போது ஏற்படும் சிறிய தீப்பொறியே காஸ் தீப்பிடிக்க போதுமானது. எனவே காஸ் கசிவு ஏற்பட்டிருப்பதை அறிந்தால் மின் சுவிட்சை போடவோ, அணைக்கவோ கூடாது.
கசிந்த காஸ் வெளியேற கதவு, ஜன்னல் ஆகியவற்றை திறக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜன்னல் கொக்கியை நீக்கும்போது ஏற்படும் சிறு உராய்வுகூட தீப்பொறியை உண்டாக்க போதுமானது.
* கசிவு ஏற்பட்டு இருப்பதை அறிந்தால் உராய்வு ஏற்படும் எந்த செயலையும் செய்யாமல் மெதுவாக வீட்டிலிருந்து வெளி யேறி, உடனடியாக தீயணைப்பு துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த முறைகளை பின்பற்றி னாலே 95 சதவீத விபத்துகளை தவிர்க்க முடியும்.

நன்றி: தி இந்து நாளிதழ் 2015

வெறிநாய்க்கடி


வெறிநாய்க்கடி
விலங்குகள் மூலம் நமக்குப் பரவும் நோய்களில் மிக முக்கியமானது ‘ரேபீஸ்’ (Rabies). தெருக்களில் அலையும் வெறிநாய்கள் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது என்பதால், இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம். ரேபீஸ் எனும் வைரஸ் கிருமி, நாய், பூனை, நரி, கீரி, ஓநாய், குரங்கு, குதிரை போன்ற விலங்குகளைத் தாக்கி, அவற்றுக்கு நோயை உண்டாக்கும். இந்த வைரஸ் தாக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களைக் கடிக்கும்போது மனிதர்களுக்கும் ரேபீஸ் நோய் ஏற்படும்.
நோய் வரும் வழி:
ரேபீஸ் நோய் உள்ள நாயின் உமிழ்நீரில் இருந்து ரேபீஸ் கிருமி வெளியேறும். இந்த நாய், மனிதர்களைக் கடிக்கும்போது, அந்தக் காயத்தின் வழியாக, இந்தக் கிருமி உடலுக்குள் புகுந்துகொள்ளும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, அங்குள்ள திசுக்களை அழித்து ரேபீஸ் நோயை உண்டாக்கும். சிறிய அளவில் வெறிநாய் பிறாண்டினாலும், நம் காயங்களில் வெறிநாய், தன்  நாக்கினால் தீண்டினாலும் இந்த நோய் வரலாம்.

அறிகுறிகள்:
வெறிநாய் கடித்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆறு வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தொடங்கலாம். நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படும். காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது. தண்ணீரைப் பார்த்தாலே, தொண்டைத் தசைகள் இறுக்கமடைந்து சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படும்.  ‘எங்கே உயிர் போய்விடுமோ’ என்று பயம் உண்டாகும்.  இவர்கள் தண்ணீரைக்  குடிக்க மாட்டார்கள். அதிக வெளிச்சம் அல்லது காற்று பட்டால் உடல் நடுங்கும். மனம் எந்த நேரமும் அமைதி இன்றி இருக்கும். எதையாவது பார்த்து ஓடப் பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்திக் கடிக்க வருவதுமாகவும் இருப்பார்கள். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழக்க நேரிடும்.
ரேபீஸ் தடுப்பூசிகள்:
தற்போது, ரேபீஸ் நோயைத் தடுக்க நான்கு வகை தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன. அவை, சுத்தப்படுத்தப்பட்ட கோழிக்கரு உயிரணுத் தடுப்பூசி (Purified Chick Embryo Cell Vaccine), மனித இரட்டை உயிரணுத் தடுப்பூசி (Human Diploid Cell Vaccine), சுத்தப்படுத்தப்பட்ட குரங்குச் சிறுநீரக உயிரணுத் தடுப்பூசி (Purified Vero Cell Vaccine), சுத்தப் படுத்தப்பட்ட வாத்துக் கரு உயிரணுத் தடுப்பூசி (Purified Duck Embryo Cell Vaccine). இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி ரேபீஸ் நோயைத் தடுக்கலாம். ஒருமுறை தரப்படும் ஊசிமருந்தின் அளவு 1 மி.லி. இதைப் புஜத்தில் தசை ஊசியாகச் செலுத்த வேண்டும்.
ரேபீஸ் தடுப்புப் புரதம்:
ரேபீஸ் நோயைத் தடுக்க, ‘ரேபீஸ் தடுப்புப் புரதம்’ (Human Rabies immunoglobulin) ஒன்றும் உள்ளது. இது, ரேபீஸ் கிருமிகள் காயத்தில் இருந்து உடலுக்குள் நுழைவதற்கு முன்பே, அவற்றை அழித்துவிடும் தன்மை உடையது. நாய் கடித்தவுடன், கடிபட்ட காயத்திலும், அதைச் சுற்றிலும் இது செலுத்தப்பட வேண்டும். நாய் கடித்த 7 நாட்களுக்குள் இதனைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும் பாதிக்கப்பட்ட வரின் ஒரு கிலோ உடல் எடைக்கு 20 யூனிட் என்ற அளவில் இதைச் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ரேபீஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:
குறைந்தது 10 நிமிடங்களுக்கு காயம்பட்ட இடத்தில், சோப்பு போட்டு, வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். காயத்தின் மீது பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் போன்ற ஏதாவது ஒரு ‘ஆன்டிசெப்டிக்’ மருந்தைத் தடவலாம். முடிந்தவரை, காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடும் அளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருந்தால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் தடுப்புப் புரதம் போட்ட பிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பூசி போட  வேண்டும். எந்த ஒரு காயத்துக்கும் ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ (Tetanus Toxoid) தடுப்பூசி அவசியம். கூடவே, காயம் குணமாக, தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.
தடுப்பூசி போடப்படும் முறை:
நாய் கடித்த நபருக்கு, நாய் கடித்த நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14-வது நாள்,     28-வது நாள் என ஐந்து தவணைகள் (0, 3, 7, 14, 28) ரேபீஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். காயம் கடுமையாக ஏற்பட்டவர்கள் 6-வது ஊசியை 90-வது நாளில் போட்டுக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என்று எவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வீட்டு நாய் கடித்துவிட்டால், என்ன செய்வது?
வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால்கூட, அந்த நாயால் கடிபட்டவரும் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எந்தவித மாறுதலும் தெரியவில்லை எனில், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் (0, 3, 7-வது நாள்) நிறுத்திக்  கொள்ளலாம். நாயிடம் மாறுதல்கள் தெரிந்தால், மீதம் உள்ள தடுப்பூசிகளையும் (14,   28-வது நாள்) போட்டுக் கொள்ள வேண்டும்.
வெறிநாய் என்பதை  எப்படித் தெரிந்துகொள்வது?
ரேபீஸ் கிருமி தாக்கிய நாய் காரணமின்றிக் குரைக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும்; தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு வெளித்தள்ளி இருக்கும். எந்தநேரமும் எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். பொதுவாக, ரேபீஸ் நோய் வந்த நாய், 10 நாட்களுக்குள் இறந்துவிடும்.
முன்னெச்சரிக்கை தடுப்பூசி தேவைப்படுபவர்கள்:
சிலருக்கு நாய் கடிப்பதற்கான வாய்ப்புகள் அல்லது நாயிடமிருந்து ரேபீஸ் கிருமிகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும், இப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
பெரும்பாலும், இந்தியக் குழந்தைகள்தான் பெற்றோர் துணையின்றி  தெருக்களில் விளையாடுகிறார்கள். நாய் பிறாண்டினாலோ, நாக்கினால் தீண்டினாலோ அதன் ஆபத்துகளை அறியாமல், பெற்றோரிடம் கூறாமல் விட்டுவிடுவார்கள்.
அடுத்ததாக, கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், நாய் வளர்ப்போர், நாய் பிடிப்போர், நாயைப் பழக்குவோர், தபால், காவல் துறைப் பணியாளர்கள், ரத்தப் பரிசோதனைக்கூடப் பணியா
ளர்கள், ரேபீஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள், ரேபீஸ் நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், விலங்குகளைப் பதப்படுத்துவோர், வன இலாகாவினர், மிருகக்காட்சி சாலையில் பணிபுரிவோர், தெருநாய்கள் கட்டுப்பாடின்றி அலையும் தெருக்களில் வசிப்போர் மற்றும் அதுபோன்ற ஊர்களுக்கு அடிக்கடி பயணம் செய்வோர், முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது அவசியம்.
முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி தவணை முறைகள்:
ரேபீஸ் தடுப்பூசியின் முதல் ஊசியை ஆரம்ப நாளில் போட்டுக்கொண்டு, இரண்டாவது ஊசியை ஏழாம் நாளிலும், மூன்றாவது ஊசியை 28-வது நாளிலும் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஊக்குவிப்பு ஊசி’யாக (Booster dose) இந்தத் தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை வெறி நாய் கடித்துவிட்டால், நாய்க்கடி காயத்தை நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு, நாய் கடித்த நாளில் ஒரு தடுப்பூசியும், மூன்றாவது நாளில் ஒரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தக் காயத்தில் ரேபீஸ் தடுப்புப் புரதம் போட்டுக்
கொள்ளத் தேவை இல்லை.

நாய்க்கடி ஓலம்!
உலக அளவில், ஆண்டுக்கு சுமார் 55,000 பேர் ரேபீஸ் நோயால் இறக்கின்றனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் ரேபீஸ் நோயால் இறக்கின்றனர். இவர்களில் 35 சதவிகிதத்தினர் 15 வயதுக்குட்பட்டவர்கள்.  தமிழ்நாட்டில், 2011-ம் ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 17,848 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர் என்றால், இதன் கொடூரமான தாக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

வீட்டு நாய்க்கு ரேபீஸ் வராமல் காத்துக் கொள்வது எப்படி?
வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் முடிந்ததும், ஒன்பது மாதம் முடிந்ததும் என  இரண்டு தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை ரேபீஸ் தடுப்பூசியைக் கட்டாயம் போட வேண்டும். தெரு நாய்களுடன் வீட்டு நாய்கள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு நாய் சோர்ந்திருந்தால், சாப்பிடாமல் இருந்தால் அல்லது எல்லோரையும் கடித்துக் கொண்டிருந்தால், நாயைக் கட்டிப்போட வேண்டும். அந்த நாயைக் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

Thanks : vayal 16.03.2015