disalbe Right click

Monday, March 20, 2017

ரத்தசோகையை ஏற்படுத்தும் உதிரப்போக்கு


ரத்தசோகையை ஏற்படுத்தும் உதிரப்போக்கு
வயதிற்கேற்ப மாதவிடாய் பிரச்னை மாறுபடும். பெண்களின் பருவத்தை பதின்பருவம், நடுத்தர வயது, மாதவிடாய் நிற்கும் பருவம் என பிரிக்கலாம்.
பூப்பெய்தியவுடன் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் என எதிர்பார்க்க முடியாது.

இரண்டு மாதங்கள் முதல் ஓராண்டு கழித்துகூட வரலாம்.
கருப்பை மற்றும் சினைப்பை சரியாக முதிர்ச்சி அடையாமல் இருப்பதே இதற்கு காரணம்.
பதின்பருவ பெண்கள் சிலருக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு ரத்தசோகையில் முடியலாம்.
ஹார்மோன் மாற்றங்களினால் அதிகமான உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதை மாத்திரைகளால் சரிசெய்ய முடியும். பதின்பருவ பெண்கள் சினைப்பை நீர்கட்டி நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உடற்பயிற்சி, சரிவிகித உணவின் மூலம் உடல்பருமனை குறைத்து இந்நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம். மிகவும் அரிதாக ரத்தம் உறைதலில் குறைபாடுள்ள பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
நடுத்தர வயது பிரச்னை நடுத்தர வயதுகளில் 22 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வருவதும், 4 - 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருப்பதும் இயல்பானது.
சில பெண்கள் எவ்வளவு அதிகமாக உதிரம் வெளியேறினாலும், நான்கு நாட்கள் தானே என நினைக்கின்றனர்.
இரண்டு நாட்களுக்கு மிக அதிகமாக உதிரப்போக்கு என்றாலும், அது பிரச்னைக்குரியது. மாதவிடாய் சம்பந்தமாக எந்த சந்தேகத்தையும் நாமாக அனுமானிக்காமல் மகளிர் மருத்துவரை அணுகுவதே நல்லது.
சிலபெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையாக உள்ளது என்பதே அவர்களது ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருப்பதை வைத்து தான் கண்டுபிடிக்க முடியும்.
சுழற்சி காலம் 20 நாட்களுக்குள் இருந்தாலோ, 35 நாட்களுக்கு மேல் வந்தாலோ, ஐந்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்பட்டாலோ மருத்துவரை அணுக வேண்டும்.
காரணங்கள் என்ன?
மாதவிடாய் தள்ளி போவதற்காக அடிக்கடி உட்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகள்; காப்பர் டி எனப்படும் கருத்தடை சாதனம்; கர்ப்பப்பையின் உட்புறசுவரில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள்; கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் புண், கட்டிகள்; கருப்பையில் ஏற்படும் கட்டிகள் ஆகியவையே மாதவிடாய் பிரச்னைக்கான காரணங்கள்.
கர்ப்பப்பையின் வாய் பகுதியில் நாள்பட்ட புண் இருந்தாலோ 'பாலிப்' எனப்படும் சிறுகட்டிகள் இருந்தாலோ உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
மாதவிடாய் நிற்கும் நேரத்தில், அதிக உதிரப்போக்கு ஏற்படுவது இயல்பானதல்ல.
சுழற்சிநாட்கள் மாறலாம். அதிக உதிரப்போக்கால் ரத்தசோகை ஏற்படும். இதனால் உடல் வலுவிழந்து மூச்சுதிணறல், படபடப்பு, நெஞ்சுவலி, தலைசுற்றல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரத்தசோகைக்கு பல காரணங்கள் இருந்தாலும் மாதவிடாய் கோளாறே முக்கிய காரணம்.
பதின்பருவத்தினரோ, பெரியவர்களோ மாதவிடாய் பிரச்னையாக இருக்கிறது எனில், மகளிர் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே நல்லது. ஹார்மோன் மாத்திரைகள் மருத்துவர் கண்காணிப்பின் கீழ் உட்கொள்ள வேண்டும்.
-டாக்டர் சுஜாதா சங்குமணி, மதுரை, 94422 72876
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.03.2016

Sunday, March 19, 2017

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி. பேராசிரியர் வேலை கிடைக்காது!

No automatic alt text available.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி. பேராசிரியர் வேலை கிடைக்காது!

’தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தவர்களை, கல்லுாரி பேராசிரியர்களாக நியமிக்க முடியாது’ என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.

பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு, முதுநிலை கல்வியுடன், பிஎச்.டி., என்ற, ஆராய்ச்சி படிப்பு பட்டம் அல்லது, ’நெட், செட்’ என்ற இரண்டு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், நெட், செட் முடிக்காதோர் மற்றும் பிஎச்.டி., பட்டம் பெறாதோர், ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்யும்படி, யு.ஜி.சி., ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், சில கல்லுாரிகள், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோரை, குறைந்த சம்பளத்தில் பேராசிரியர் பணிக்கு அமர்த்தியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து, யு.ஜி.சி., புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ’கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ, பிஎச்.டி., படித்து பட்டம் பெற்றவர்கள், ’ரெகுலர்’ என்ற வகையில் சேர்க்கப்படுவர். 

’ஆனால், தொலைநிலை கல்வியில், பிஎச்.டி., முடித்தோருக்கு, ரெகுலர் சான்றிதழ் கிடைக்காது. எனவே, அவர்களை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், பேராசிரியர்களாக நியமிப்பதை ஏற்க முடியாது’ என, தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 20.03.2017

செட்டில்மெண்ட் பத்திரமும், தானப் பத்திரமும்

Image may contain: 1 person, sunglasses and text

செட்டில்மெண்ட் பத்திரமும், தானப் பத்திரமும்

செட்டில்மெண்ட் பத்திரத்தை (Settlement Deed) “ஒரு குடும்ப ஏற்பாட்டுப் பத்திரம்” என்கிறார்கள்.

ஒருவர் தனக்குச் சொந்தமான சொத்துக்களை இந்த செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு பிரித்து கொடுக்கும் பத்திரம் இதுவாகும்.

ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அவர் வாழ்நாளிலேயே, தன் குடும்பத்தில் உள்ள மற்ற உறவினர்களுக்கு கொடுப்பதால் செட்டில்மெண்ட் பத்திரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

தன் வாழ்நாளிலேயே, ஒருவர் தன் சொத்துக்களை, தன் உறவுகளுக்கு கொடுக்கும் பத்திரமான இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த சொத்தைப் பெறுபவர் “குடும்ப உறவினராக” இருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்கிறது.

குடும்ப உறவினர்கள் என்றால் யார், யார்?

இந்திய ஸ்டாம்பு சட்டத்தின்படி  தாத்தா, பாட்டி, (தந்தை வழி தாத்தா, பாட்டி, மற்றும் தாய்வழித் தாத்தா, பாட்டி), தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, இவர்கள் மட்டும்தான் “குடும்ப உறுப்பினர்கள்” ஆவார்கள்.

 பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்த “குடும்ப உறுப்பினர்” என்ற உறவுகளை விசாலப்படுத்தி, “அண்ணன், தம்பி, அக்காள், தங்கை” இவர்களையும் அதில் சேர்த்துக் கொண்டது.

இந்த குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும், ஒருவர் தன் சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதை “தானமாகத் தான்” (Gift) கொடுக்க முடியும். 

தானப்பத்திரம் (Gift Deed)

மேலே சொன்ன குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு நபர்களுக்கு, ஒருவர் தன் சொத்துக்களை கொடுக்க நினைத்தால், அதை “தானப்பத்திரம்” என்னும் கிப்ட் பத்திரம் (GiftDeed) மூலமே கொடுக்க வேண்டும்.

இரண்டிற்கும்  என்ன  வித்தியாசம்?

செட்டில்மெண்ட் பத்திரத்துக்கும், தானப் பத்திரத்துக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை; இரண்டுமே ஒருவகையில் “தானம்” தான்.

மேற்சொன்ன குடும்ப உறவினர்களுக்குள் கொடுத்தால் அது செட்டில்மெண்ட் பத்திரம். அதையே வெளி நபர்களுக்குக் கொடுத்தால் தானப் பத்திரம் அவ்வளவுதான்.

ஆனால், இவ்வாறு கொடுக்கும் பத்திரத்துக்கு அரசுக்கு செலுத்தும் ஸ்டாம்ப் கட்டணத்தில்தான் வேறுபாடு. குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கும் செட்டில்மெண்ட் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்பு கட்டணம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000/- மட்டுமே.

அதாவது ரூ.25 லட்சம் வரை மதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களுக்கு 1% கட்டணம்: அதற்கு மேல் எவ்வளவு மதிப்புள்ள சொத்தாக இருந்தாலும் ரூ.25,000 கட்டணம் மட்டுமே.

ஆனால் குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானப் பத்திரத்துக்கு, அந்த சொத்தின் மதிப்புக்கு 7% ஸ்டாம்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி வைப்பதற்கு முன், ஒருசில சட்ட நுணுக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டு எழுதவேண்டும். 

பொதுவாக ஒருவர் தன் சொத்தை, செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தினருக்கு கொடுத்தால், பின்னர் அந்த பத்திரத்தை ரத்து செய்யவே முடியாது.

இது தெரியாமல், ஏதோ ஒரு உந்துதலில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி கொடுக்கின்றனர். பின்னர், ஏதோ ஒரு வருத்தம் ஏற்பட்டு, அதை ரத்து செய்ய முயற்சி செய்கிறார்கள். இப்படிச் செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை. 

ஆனாலும், பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் இவ்வாறு ரத்து செய்யும் பத்திரங்களை ஏற்றுக் கொள்வதால் இவர்களும் அதை ரத்து செய்கிறார்கள். 

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கின்  அடிப்படையில், இப்போதுதான் பத்திரப் பதிவு அலுவலகங்கள், இவ்வாறான செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என அறிவுறுத்தி உள்ளது.

ஒரு சொத்தில், தனக்குள்ள உரிமையை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டால், அந்த சொத்தில் அவருக்கு இருந்துவந்த உரிமை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது. எனவே அவர் அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பின்நாளில் ரத்து செய்ய எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை என்பதுதான் சட்டம்.

ஆனால், சிலர் நினைத்துக் கொள்கிறார்கள், “என் சொத்தை, நான் தானமாகத்தானே கொடுத்தேன். எனக்கு விரும்பம் இல்லை என்பதால், அதை இப்போது ரத்து செய்கிறேன்” என்று நினைக்கிறார்கள். விற்ற சொத்தை எப்படி திரும்ப வாங்க முடியாதோ, அதேபோலத்தான், தானம் கொடுத்த சொத்தையும் திரும்ப வாங்க முடியாது.

இருந்தாலும், ஒருசிலர், இந்த செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைக்கும்போதே, அதை ஒரு உயில் போல எழுதி, அதாவது, தன் வாழ்நாளுக்குப்பின், தன் குடும்ப உறவினர்களுக்கு அந்த சொத்து, போய் சேர வேண்டும் என எழுதுவார்கள். 

அல்லது அவர் வாழ்நாள் வரை அந்த சொத்தில் உரிமையுடன் வாழ்ந்து வருவதாகவும், அதன் பின் அவர் யாருக்கு சொத்துக் கொடுக்கிறாரோ அவர் முழு உரிமையுடன் அடைந்து கொள்ளலாம் என்று எழுதி வைப்பார்கள்; இந்த வகையில் எழுதும் பத்திரங்கள், சில நேரங்களில் சரியாக அமைவதுண்டு. 

பல நேரங்களில் இதில் சட்டக் குழப்பங்கள் வந்து, கோர்ட்டுக்கு சென்று விடுகின்றன. இப்படிப்பட்ட குழப்பமான செட்டில்மெண்ட் பத்திரங்களை எழுதும்போது, அதன் பிற்கால பிரச்சனைகளையும் யோசித்து தீர்க்கமான முடிவுடன், சட்ட ஆலோசனையும் பெற்றுக் கொண்டு எழுதி வைப்பது, கோர்ட்டுக்கு போகும் வேலையை மிச்சமாக்கும்.

சிலர், குடும்ப நெருக்கடியில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவார்கள். பின்னர், அந்த நெருக்கடி தீர்ந்தவுடன், அல்லது வேறு நெருக்கடி, வேறு ரத்த உறவுகளிடமிருந்து வந்தவுடன், ஏற்கனவே எழுதிய செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்வார்கள். இந்த வகை பத்திரங்களும் சட்ட சிக்கலை உண்டாக்கி கோர்ட்டுக்கு அலைய வைக்கும்.

தீர்மானமான முடிவுகள் எடுக்க முடியாதபோது, சொத்தைப் பொருத்து எந்த செட்டில்மெண்டும் எழுதாமல் இருப்பதே நல்லது. அல்லது ஒரு உயில் பத்திரம் மட்டும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இது இல்லாமல், செட்டில்மெண்ட்தான் எழுத வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதிவிட்டால், அத்துடன் அதில் தனக்கு இனி உரிமை ஏதும் இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டும். 

வாழ்நாள் வரை அதில் வசிப்பேன் என்று எழுதி இருக்கும் பத்திரங்களில்கூட, வயதான காலத்தில் அந்த உரிமையை நிலைநாட்ட கோர்ட்டுக்குத்தான் செல்ல வேண்டும்.

 எனவே முடிவு என்பது தீர்க்கமாக இருக்க வேண்டும்! பந்த பாசத்துக்கு அடிமையாகாமல், ரத்த உறவுகளின் மிரட்டலுக்கு பயப்படாமல், ஏமாறுவதற்கு இடம் கொடுக்காமல் முடிவுகள் தீர்க்கமாக இருக்க வேண்டும்! 

ஒருவர் தன் வாரிசுகளுக்கு, ரத்த உறவுகளுக்கு சொத்து வைத்து விட்டுத்தான் போகவேண்டும், ஆனால் அந்த சொத்தை தன் வாழ்நாளில் அனுபவிக்க முடியாமல், பறிகொடுத்து தவிக்கும் நிலைக்கு போக இடம் கொடுக்க கூடாது; தனக்கு தெளிவான சிந்தனை, செயல், அதிகாரம் இருக்கும் காலத்திலேயே அல்லது வயதிலேயே ஒரு தீர்க்கமாக முடிவை எடுத்து செயல் படுத்திவிட வேண்டும். எழுந்து நடக்கவே முடியாத போது, நாம் எடுக்கும் முடிவும் நடைமுறைக்கு வராது.

நன்றி : திரு Advocate Balakrishnan (05.02.2016)
https://gblawfirm.blogspot.in  -ல் இருந்து

Saturday, March 18, 2017

ஜி.மெயிலின் புதிய வசதியை தெரிந்து கொள்ளுங்கள்


ஜி.மெயிலின் புதிய வசதியை தெரிந்து கொள்ளுங்கள்

ஜி.மெயில் மூலம் அனுப்பும் வீடியோக்களை இனிமேல் டவுன்லோடு செய்யாமல் அப்படியே பார்க்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் ஜி.மெயிலும் முக்கியமான ஒரு பயன்பாட்டு இணையமாகவே இருந்து வருகிறது. 

இளைஞர்களுக்கு அலுவலகம், படிப்பு, வேலை முதலான இடங்களில் வீட்டு முகவரி, போன் நம்பரை அடுத்து இணைய முகவரியும் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இணையமுகவரியில் ஜி.மெயில் முகவரிதான் பெரும்பாலானவர்கள் தேர்வாகவும் உள்ளது. 

ஜி.மெயில் மூலம் டாக்குமென்ஸ் எனப்படும் எழுத்து சார்ந்த ஆவணங்கள் அதிகமாக அனுப்பப்பட்டாலும், ஜி.மெயில் மூலமாக போட்டோவும், வீடியோவும் அனுப்பும் தேவையும் உள்ளது. 

இதுவரையில் ஜி.மெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்தால் மட்டுமே அதனைப் பார்க்க முடியும்.

தற்போது, டவுன்லோடு செய்யாமலே பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கணினியின் ஹார்ட் டிஸ்கில் உள்ள மெமரி பாதுகாக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

மேலும், எளிதாகவும் வீடியோவைப் பார்க்க முடியும். டவுன்லோடு ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால் 25 MP-க்கு குறைவான மெமரி கொண்டிருக்கும் வீடியோக்களை மட்டுமே இப்படி பார்க்க முடியும். 

இந்த சேவை 15 நாள்களுக்குள் அறிமுகமாகிவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி : விகடன் செய்திகள் - 18.03.2017

Friday, March 17, 2017

காவல் ஆணையர் மீது அவமதிப்பு வழக்கு


காவல் ஆணையர் மீது அவமதிப்பு வழக்கு!

அவமதிப்பு வழக்கில் 22ல் ஆணையர் ஆஜர் ஆவாரா?
சென்னை, : சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த, பொன்.தங்கவேலு என்பவர், முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

முன்னாள் கவுன்சிலரின் சொத்துகள் குறித்து, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படாததால், மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ்க்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, அவரது வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்தார்.

இம்மனு, நேற்று முன்தினம், நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் ஆஜராகாத, போலீஸ் ஆணையர் ஜார்ஜ்க்கு, நீதிபதி கண்டனம் தெரிவித்தார். 

நீதிமன்ற உத்தரவை ஏன் பின்பற்றவில்லை; நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் எனவும், நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, நீதிபதி கிருபாகரன் முன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, வரும், 22ல், போலீஸ் ஆணையர் ஜார்ஜ் ஆஜராவதாக தெரிவித்தார். 

அதனால், விசாரணையை, 22க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017

புகார் அளித்தவரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி


புகார் அளித்தவரிடமே லஞ்சம் பெற்ற அதிகாரி
தான பத்திரம் மீது விசாரணை கை நீட்டிய 'தங்கம்' கைது!
விருதுநகர், : போலியாக பத்திரம் தயாரித்ததாக அளித்த புகாரை விசாரிக்க 3,000 ரூபாய் வாங்கிய, விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலக டைப்பிஸ்ட் தங்கத்தை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் சாமியார் கிணற்றுதெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது குடும்பத்தினர் பெயரில் பொதுச் சொத்துக்கள் உள்ளன.

'இதை பங்காளிகளில் ஒருவரான வெள்ளைச்சாமி, போலி பத்திரம் தயாரித்து தானம் கொடுத்து விட்டார்' என, சென்னை பத்திரப்பதிவு ஐ.ஜி.,யிடம் பாண்டுரங்கன் புகார் கொடுத்தார்.

லஞ்சம் கொடு: 
இதை விசாரிக்க விருதுநகர் மாவட்ட பதிவாளர் சந்தானத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பதிவாளர் அலுவலக டைப்பிஸ்ட் தங்கம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பாண்டுரங்கன் புகார் அளித்தார். அலுவலகத்தில் நேற்று, டைப்பிஸ்ட் தங்கம் 3,000 ரூபாய் வாங்கியபோது, இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

கேட்டது ரூ.10 ஆயிரம்: 
பாண்டுரங்கன் கூறுகையில், ''எனக்கு சாதகமாக விசாரிக்க தங்கம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். மறுத்ததால், மூன்றா யிரம் ரூபாயாக குறைத்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாமல் புகார் கொடுத்தேன்,'' என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017


வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை


வங்கியில் மோசடி, மேனேஜருக்கு சிறைத்தண்டணை

பாரத ஸ்டேட் வங்கியில் மோசடி: மேலாளருக்கு 7 ஆண்டு சிறை

மதுரை,:புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளையில், ஒரு கோடி 98 லட்சம் ரூபாய் மோசடி தொடர்பாக, மேலாளர் உட்பட ஆறு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கிளை மேலாளராக ராதாகிருஷ்ணன், உதவியாளராக ராஜகோபாலன் பணிபுரிந்தனர். 

இவர்களது நண்பர்கள் புதுக்கோட்டை விஸ்வநாதன், விருதுநகர் சிவாரங்கசாமி, சிவகாசி ராஜ்கபூர், திருநெல்வேலி ஷேக்அமீர். 

இவர்களின் வங்கி கணக்குகளை, அன்னவாசல் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு மாற்றினர்.இக்கணக்குகளுக்கு மும்பை வங்கிகளில் இருந்து காசோலைகள் மூலம் ஒரு கோடியே 98 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் வந்ததாக போலி ஆவணங்கள் தயாரித்தனர். 

காசோலைகளை நான்கு பேரின் கணக்குகள் மூலம் மாற்றி மோசடி செய்ததாக, சி.பி.ஐ., போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கணேசன் விசாரித்தார். 

ராதாகிருஷ்ணன், ராஜகோபாலன், ஷேக் அமீர், ராஜ்கபூர், சிவாரங்கசாமிக்கு தலா ஏழு ஆண்டு, விஸ்வநாதனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.03.2017


தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக எம்.எல்.ஏ!


தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக எம்.எல்.ஏ!

அரசியல் பாதைகள் புதைகுழிகள் நிறைந்தவை’ என சொல்லப்படுவதுண்டு. இந்த புதைகுழிகள் நிறைந்த அரசியல் பாதையில் நீண்ட காலம் தங்கள் பயணத்தை மேற்கொள்வது என்பது நிச்சயம் சவால் மிக்கது.

அப்படி அரசியல் பாதையில் நீண்ட பயணங்களை மேற்கொண்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

90 வயதைக் கடந்தும் இன்னும் அரசியலில் இருந்து முழுமையாய் விட்டு விலகிடாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் வரிசையில் இணைந்துள்ளார் கேரளா காங்கிரஸ் தலைவரான கே.எம்.மானி.

84 வயதான இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் தோல்வியே சந்திக்காத தலைவர்களில் கருணாநிதிக்கு அடுத்த இடம் கே.எம்.மானிக்கு தான். 12 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளார் அதுவும் ஒரே தொகுதியில்.

கரிங்கோழக்கல் மானி மானி என்பது தான் இவருடைய முழு பெயர். வழக்கறிஞரான இவர் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் இவரது நெருங்கிய உறவினருமான பி.டி.சாக்கோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கேரள காங்கிரஸ் என்ற தனி அமைப்பில் இணைந்து முக்கியப் பங்காற்றினார்.

1965ம் ஆண்டு முதன் முதலாக கோட்டயம் மாவட்டம் பாலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் துவங்கி 2016ம் ஆண்டு வரை, அதே பாலா தொகுதியில் 12 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார் கே.எம்.மானி.

கேரள மாநில காங்கிரஸ் கட்சி, இடதுசாரி அமைப்பான மார்க்சிஸ்ட் என இரு பெரிய கட்சிகளுடனும் இவரது கேரள காங்கிரஸ் (மானி) கூட்டணி அமைத்து தேர்தல்களைச் சந்தித்து உள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 6 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றனர். ஆனாலும், இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனாலும், ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்ட போதிலும், ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்காத சரித்திரம் கே.எம்.மானியை மக்கள் தொண்டனாக நிலை நிறுத்துகிறது. அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படக் கூடியவராக கே.எம்.மானி உள்ளார்.

கேரள சட்ட மன்றத்தில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்து இருக்கிறார். கேரள லாட்டரி உதவித் திட்டம் மூலமாக 1,400 கோடியைத் திரட்டி அதன் மூலமாக ஒன்றரை லட்சம் ஏழை நோயாளிகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்தார். அத்துடன், உலகிலேயே முதல் முறையாக விவசாயிகள் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் தான் கேரள மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கேரள சட்ட மன்றத்துக்குள் கே.எம்.மானி நுழைந்து தற்போது 50வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, கேரள சட்ட மன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய சபாநாயகரான ஸ்ரீராமகிருஷ்ணன், "கே.எம்.மானி, எப்போதுமே மானி சார் என்றே எல்லோராலும் அழைக்கப்படக் கூடியவர். அவர் தனது செயல்பாடுகள் மூலமாக சட்டமன்ற வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறார். கடந்த 50 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருப்பதன் மூலமாக சாதனை படைத்த அவர், தன் மீது எழும் விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக் கொள்ளக்கூடியவர்" என்று புகழாரம் சூட்டினார்.

முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "புள்ளி விவரப்படி பார்த்தால், கே.எம்.மானி தனது 50 வருட சட்டமன்ற சாதனையை கடந்த இரு வருடங்களுக்கு முன்பே எட்டி விட்டார். பாலா தொகுதியில் அவர் 1965ம் ஆண்டில் வெற்றி பெற்றார். ஆனால், அந்தத் தேர்தலில் கேரள சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதனால் அந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், அந்தக் கணக்கு இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

அவரது இந்த சாதனை பாராட்டுக்குரியது. இந்தச் சாதனையை இனி யாராலுமே இந்தியாவில் முறியடிக்க முடியாது என்பது நிச்சயம். அவர் பாலா தொகுதியில் போட்டியிடும்போது பல பாரம்பரியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றியை கைப்பற்றி இருப்பது வரலாற்றில் எப்போதும் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

இந்த சாதனைகளுக்கு மத்தியில் அவர் சட்டமன்ற மாண்பையும் மரபுகளையும் கடைப்பிடிப்பதையும் அனைவருமே பின்பற்ற வேண்டும்.

குறித்த நேரத்துக்கு சட்ட மன்றத்துக்கு வருவது மட்டும் அல்லாமல், அவரது வருகைப் பதிவையும் இன்றைய சட்ட மன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும்’’ எனக் குறிப்பிட்டார்.

கேரள சட்ட மன்றத்தில் 1970ம் வருடம் இவருடன் இருந்த ஒரே சமகால அரசியல்வாதி, முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மட்டுமே.

ஆனால், இந்த நிகழ்வின்போது அவர் சட்ட மன்றத்துக்கு வராததால், அவரது கருத்து சட்ட மன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் குறையே.

இந்த நிலையில் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா தனது கருத்தைப் பதிவு செய்கையில், ‘‘இந்திய ஜனநாயக வரலாற்றில் அதிசயக்கத்தக்க ஒரு வரலாறு கே.எம்.மானி. அவர் எப்போதுமே தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையுடன் செயல்படுவது இல்லை.

சட்டமன்ற உரையாக இருந்தாலும் செய்தியாளர் சந்திப்பாக இருந்தாலும், அது குறித்து முதலிலேயே நிறைய தகவல்களைச் சேகரித்த பின்னரே பேசுவார்’’ என்றார்.

கேரள அரசியலில் எதிரும் புதிருமாகச் செயல்படும் இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும் அளவுக்கு கே.எம்.மானியுடன் கருத்து வேறுபாடுகள் நிறைந்து இருப்பவர், பி.சி.ஜார்ஜ். அவர் பேசுகையில், ‘எனக்கு மானி சாருடன் எப்போதும் நல்ல உறவு இருந்தது இல்லை. ஆனாலும், அவரது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மறுக்க முடியாதது’ என்றார்.

இவற்றுக்குப் பதில அளித்துப் பேசிய கே.எம்.மானி, ‘‘என்னை இந்த மன்றத்தில் பேசிய பலரும் பாராட்டியது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. நான் கடந்த காலங்களில் எதிரி என நினைத்த சிலர் எனக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்கள் எனது நண்பர்கள் என்பதை நீங்கள் பேசியதில் இருந்து புரிந்து கொண்டு விட்டேன்.

என்னை இந்த அளவுக்கு உயரத்துக்கு கொண்டு வந்தது எனது பாலா தொகுதி மக்களே. அவர்களுக்கு கூப்பிய கரங்களுடன் மண்டியிட்டு நன்றி தெரிவிக்கிறேன்’’ என்று பேசி நெகிழ்ந்தார்.

வயது 84ஐ கடந்து விட்டது. அவரது உழைப்பு இன்னும் அவரை இளமையாக வைத்திருக்கிறது. வாழ்த்துகள் கே.எம்.மானி சார்...
- ஆண்டனிராஜ்

நன்றி : விகடன் செய்திகள் - 17.03.2017

Wednesday, March 15, 2017

தகவல் அளிக்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது

Image may contain: text

தகவல் அளிக்காமல் நிறுத்தி வைக்கக்கூடாது!



விசாரணையில் இருக்கிறது என்று தகவல் தராமல் தட்டிக் கழிக்கும் பொதுத் தகவல் அலுவலர்களுக்கு எதிரான மிகவும் அருமையான ஆணை !

ஆள் மாறாட்டம், பெண் கைது!


ஆள் மாறாட்டம், பெண் கைது! 

ஜாமீனுக்காக ஆள்மாறாட்டம் செய்ததால் விபரீதம் ரூ.500க்கு ஆசைப்பட்டு சிறைக்கு சென்ற பெண்: ஐகோர்ட்டில் பரபரப்பு

சென்னை : சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சூர்யா. இவர் போதை மருந்து மற்றும் மயக்க மருந்துகளை  சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். 

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு கண்ணகி நகர் போலீசார் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் சூர்யாவின் ஜாமீன் வழக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் உள்ள முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சூர்யா தரப்பில் ரூ.1 லட்சம் ஜாமீனில் விடுவிக்க கோரி சத்தியபாமா என்ற பெண் உரிமை கோரினார். 

 அதற்கான ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நீதிபதி ஆவணங்களை சரிபார்த்த போது சத்தியபாமா அளித்த வாக்காளர் அடையாள அட்டையில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தை பார்த்து சந்தேகம் அடைந்து, சத்தியபாமாவிடம் இது உங்கள் புகைப்படமா என்று கேட்டார். அதற்கு அந்த படம் என்னுடைய படம் தான் என்று கூறியுள்ளார்.

ஆனால், சந்தேகம் தீராததால் நீதிபதி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் பஞ்சவர்ணம் (42) உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் சத்தியபாமா மீது புகார் அளித்தார். 

அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய போது சத்தியபாமா என்ற பெயரில் சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்று தெரியவந்தது. 

இவர் ரூ.500க்கு ஆசைப்பட்டு சத்தியபாமா என்ற பெயரில், ஜாமீனுக்காக ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். ஜாமீனுக்காக நீதிமன்றத்தில் ஆள்மாறட்டம் செய்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி : தினகரன் நாளிதழ் - 16.03.2017

ஃபெரா குற்றவாளி, தேர்தலில் போட்டியிட முடியாது!


ஃபெரா குற்றவாளி, தேர்தலில் போட்டியிட முடியாது!

ஃபெரா குற்றவாளி தினகரன் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவே முடியாது...சட்டம் சொல்வது என்ன?

சென்னை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஃபெரா (Foreign Exchange Regulation Act) வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளியான டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவே முடியாது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஃபெரா வழக்கின் குற்றவாளியான டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதற்கு ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

1995, 1996ம் ஆண்டுகளில் டி.டி.வி. தினகரனின் வங்கிக் கணக்குகளில் பெருமளவு பணம் வெளிநாடுகளில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஹைகோர்ட் தீர்ப்பு 
இவ்வழக்கில் தினகரனுக்கு ரூ31 கோடி அபராதம் விதித்தது ஃபெரா வாரியம். இத்தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் ரூ28 கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டது. 

இதை எதிர்த்து டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் இவ்வழக்கில் டி.டி.வி. தினகரன் குற்றவாளியே என்றும் அவர் அபராதத் தொகை செலுத்தியே ஆக வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

6 ஆண்டுகாலம் போட்டியிட முடியாது 
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபரால் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிடவே முடியாது.

 சரி, ஃபெரா வழக்கில் தினகரன் குற்றவாளி என்று மட்டும்தானே சொல்லியிருக்கிறதே... அவருக்கு எப்படி இது பொருந்தும் என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

சட்டம் என்ன சொல்கிறது?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்தெந்த குற்றங்கள் செய்திருந்தால் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்கிற ஒரு பட்டியல் இடம்பெற்றுள்ளது. 

"Disqualification on conviction for certain offences" என்ற அந்த பிரிவின் (e) the Foreign Exchange (Regulation) Act, 1973 (46 of 1973) 

அதாவது ஃபெரா சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டவர்களும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அபராதம்தானே... 
ஃபெரா வழக்கில் டி.டி.டி.வி. தினகரனுக்கு அபராதம் மட்டும்தானே விதிக்கப்பட்டுள்ளது... அதை செலுத்திவிட்டால் டி.டி.வி. தினகரனால் போட்டியிட முடியுமே என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

அபராதம் விதித்தாலும் போட்டியிட முடியாது 
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் மேலே நாம் குறிப்பிட்டுள்ள,
 "Disqualification on conviction for certain offences" பிரிவில் 

[shall be disqualified, where the convicted person is sentenced to- (i) only fine, for a period of six years from the date of such conviction; (ii) imprisonment, from the date of such conviction and shall continue to be disqualified for a further period of six years since his release.] 

அதாவது குற்ற வழக்குகளில் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்ட நபர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது முதல் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்; சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், தண்டனை பெற்று விடுதலையானது முதல் மேலும் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளது. 

ஆக ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளி டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி போட்டியிடவே தகுதியற்றவரே என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.

நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள் - 16.03.2017

சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது!


சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது!

10-ம் வகுப்பு தேர்வுக்குப் பின் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாது: சென்னை ஹைகோர்ட்

சென்னை: 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய பின், மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்த பி.கருணாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 அந்த மனுவில், நான் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி பிறந்தேன்.ஆனால், சட்டவிவரங்கள் தெரியாத என் பெற்றோர், 1989-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி பிறந்ததாக பள்ளியில் சேர்க்கும்போது குறிப்பிட்டுவிட்டனர். 

நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும்போது, எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாததால், பள்ளி மாற்றுச்சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே குறிப்பிட்டுவிட்டேன். 

அதன்பின்னர் பிளஸ்-2 தேர்விலும் அதேபோல குறிப்பிட்டிருந்தேன். இதன்பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு வானூர் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 

10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றில் 1992-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி நான் பிறந்ததாக பதிவு செய்யவேண்டும் என்ற உத்தரவை பெற்றேன். 

குற்றவியல் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரியிடம், பிறப்பு சான்றிதழ் பெற்றேன். அதன்பின்னர், நான் படித்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து, 1992-ம் ஆண்டு பிறந்தேன் என்று புதிய மாற்றுச்சான்றிதழை பெற்றேன். 

இந்த ஆவணங்களை எல்லாம் வைத்து, என்னுடைய 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றித்தரும்படி தமிழக தேர்வுத்துறை செயலாளரிடம் கடந்த 2014-ம் ஆண்டு மனு செய்தேன். 

பலமுறை நேரில் சென்று முறையிட்டும், பிறந்த தேதியை திருத்தம் செய்து தராமல் உள்ளார். எனவே, என்னுடைய உண்மையான பிறந்த தேதியை குறிப்பிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கும்படி தேர்வுத்துறை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின் படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பின், வயது மற்றும் பெயர்களில் திருத்தங்கள் செய்ய முடியாது. எனவே, மனுதாரரின் 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, தேர்வுத்துறை செயலாளருக்கு அதிகாரமே கிடையாது. 

மேலும், பிறந்த தேதியை மாற்றவேண்டும் என்று தேர்வுத் துறை செயலாளருக்கு உத்தரவிட குற்றவியல் கோர்ட்டுக்கு அதிகாரமே கிடையாது. 

மேலும், எஸ்.எஸ்.எல்.சி. விதிகளின்படி, 10-ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் பிறந்த தேதியை மாற்ற முடியாது. 

எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி :  ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள் - 16.03.2017

கட்சி சின்னங்கள் சர்ச்சை - தேர்தல் ஆணையம் முடிவு

Image may contain: text

கட்சி சின்னங்கள் சர்ச்சை - தேர்தல் ஆணையம் முடிவு

கட்சிச் சின்னம் சர்ச்சைகளில் தேர்தல் ஆணையம் முடிவெடுப்பது எப்படி?- சில விவரங்கள்
பொதுவாக ஒரே கட்சியாக இருந்து பிறகு உடைந்து இரு அணிகள் பிரிந்து அந்தக் கட்சியின் அசல் தேர்தல் சின்னத்துக்கு இருதரப்பினரும் உரிமை கோரும்போது தேர்தல் ஆணையம்தான் எந்த அணிக்கு கட்சியின் அசல் சின்னம் என்பதை முடிவெடுக்கும்.

அது அந்த முடிவை எப்படி எடுக்கிறது என்பது குறித்த சில விவரங்கள் இதோ:

எந்த அதிகாரத்தின் கீழ் தேர்தல் ஆணையம் கட்சிச் சின்ன சர்ச்சைகளில் முடிவெடுக்கிறது?

1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் வழங்கல் உத்தரவு என்பதன்படி தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளை அங்கீகரித்து சின்னங்களை ஒதுக்க வேண்டும். உத்தரவின் 15-ம் பத்தியின் கீழ் தகராறுகள் ஏற்படும் போது தேர்தல் ஆணையமே யாருக்கு கட்சியின் உண்மையான சின்னம் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும்.

பத்தி 15-ன் சட்ட தகுதி என்ன?

கட்சியினுள்ளோ, இரு கட்சிகளோ இணைவது மற்றும் பிரிவதன் அடிப்படையில் கட்சிச் சின்னம் பற்றிய முடிவை எடுக்க அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. 1971-ம் ஆண்டு சாதிக் அலி மற்றும் இன்னொருவருக்கு எதிரான இந்தியத் தேர்தல் ஆணைய வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 

ஒரு குழுவை அதிகாரபூர்வ கட்சியாக அங்கீகரிக்கும் முன் தேர்தல் ஆணையம் யாவற்றை பரிசீலிக்கும்?

அசல் சின்னத்துக்கு உரிமை கோரும் குழுவுக்கு கட்சியில் ஆதரவு எப்படி உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். அதாவது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு மற்றும் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகக்குழு ஆதரவு என்று இருதரப்பு ஆதரவையும் தேர்தல் ஆணையம் கணக்கிலெடுத்துக் கொள்ளும். 

இந்த இருதரப்புகளிடையேயும் தங்களுக்குத்தான் அதிக ஆதரவு என்று கோரும் பிரிவை எப்படி தேர்தல் ஆணையம் நிறுவும்?

அதாவது குறிப்பிட்ட கட்சி இருபிரிவுகளாக உடைவதற்கு முன்பாக சேர்ந்திருந்த போது கட்சியின் விதிமுறைகளையும், நிர்வாகிகள் பட்டியலையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும். கட்சியின் உயர்மட்ட குழுக்களை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு இதில் எத்தனை நிர்வாகிகள், உறுப்பினர்கள் எதிர்கோஷ்டியினரை ஆதரிக்கின்றனர் என்பதை ஆய்வு செய்யும். ஆட்சியமைப்புப் பிரிவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை அவர்களின் வாக்குமூலப் பதிவுகளுடன் அளிப்பது பரிசீலனைக்கு ஏற்று இவர்கள் எந்தப் பிரிவை ஆதரிக்கிறார்கள் என்பது முடிவு செய்யப்படும். 

உறுதியான கண்டுபிடிப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையம் என்ன உத்தரவு பிறப்பிக்கும்?

அதாவது ஒரு குறிப்பிட்டப்பிரிவுக்கு கட்சியின் அமைப்பாக்கப் பிரிவு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிகள் ஆகியோர் ஆதரவு பெரும்பான்மையாக இருக்கிறது என்று அந்தப் பிரிவுக்கே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மற்றொரு பிரிவு தனிக் கட்சியாக பதிவு செய்ய அனுமதி வழங்கும். 

இரு தரப்பினருக்கும் உள்ள ஆதரவில் இழுபறி நிலை ஏற்பட்டால்...

இப்படிப்பட்ட நிலையில் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும். இருபிரிவினரும் புதிய பெயர்களில் அதாவது மூலக் கட்சியின் பெயரில் முன் ஒட்டு அல்லது பின் ஒட்டு சேர்த்து புதிதாக பதிவு செய்ய அனுமதி வழங்கும். 

தேர்தல் காலங்களில் கட்சிச் சின்னம் பற்றிய தகராறுகள் உடனடியாக தீர்க்கப்படுமா?

தேர்தல் ஆணையம் பல்வேறு ஆதாரங்களையும் பரிசீலிக்க காலம் எடுத்து கொள்ளும். உடனடியாக தேர்தல் என்றால் கட்சியின் சின்னத்தை முடக்கி இரு பிரிவினரையும் வெவ்வேறு பெயர்களில், தற்காலிக சின்னங்களில் போட்டியிட அனுமதிக்கும். 

சரி! இருதரப்பினரும் தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒன்று சேர்ந்து விட்டால்..

மறுபடியும் கட்சி இணைந்து ஒன்றாகிவிட்டால், மறுபடியும் தேர்தல் ஆணையத்தை அணுகி ஒருங்கிணைந்த கட்சி என்று அங்கீகரிக்கக் கோர வேண்டும். பிரிவினர்கள் ஒரு கட்சியாக இணைவதை அங்கீகரிக்கும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்திற்குத்தான் உள்ளது. அது கட்சியின் மூலப்பெயர் மற்றும் சின்னத்தை தொடர அனுமதிக்கலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.03.2017

அரசியல் சாசனச் சட்டம், பிரிவு-142.


அரசியல் சாசனச் சட்டம், பிரிவு-142.

நமது நாட்டில் உள்ள மத்திய அரசாங்கமோ அல்லது ஏதாவது ஒரு மாநில அரசாங்கமோ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றமே நேரடியாக  அந்த உத்தரவை நிறைவேற்ற இந்தப் பிரிவு பயன்படுகிறது.
கடந்த 2015-ம் வருடம் லோக் ஆயு்க்தா நீதிபதியை நியமிக்கும் விஷயத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாத, உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு எதிராக, உச்சநீதிமன்றமே நேரடியாக முன்னாள் நீதிபது வீரேந்திர சிங்கை அம்மாநில லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதியாக நியமித்தது. 

***************************இணையத்தில் இருந்து - 15.03.2017

Tuesday, March 14, 2017

என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!


என்ஆர்ஐ-கள் மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
ஒரு இந்திய குடிமகன் அல்லது இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் பொழுது அவர் இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர் (Non-resident Indian -NRI) என்று அழைக்கப்படுகின்றார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act - FEMA) ன் கீழ் பரிந்துரைக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வெளிநாடுகளுக்குத் திரும்ப எடுத்துச் செல்லக்கூடிய அல்லது இயலாத வகைகளில், இந்தியாவில் உள்ள பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. 

 விண்ணப்பப் படிவம் 
என்.ஆர்.ஐக்களால் பூர்த்திச் செய்யப்பட்ட ஒப்பந்த விண்ணப்பப் படிவம் உத்தியோகபூர்வ புள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதோடு அந்தத் திட்டத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட வரையோலை அல்லது வேறு ஏதேனும் உத்யோகப்பூர்வ வடிவத்தில் பணம் செலுத்தப்பட வேண்டும். 

விண்ணப்பதாரர் முதலீடு செய்யும் பொழுது அவர் அந்தத் திட்டத்தின் முதிர்வு தொகையை வெளிநாட்டிற்குத் திரும்ப எடுத்துச் செல்லப் போகின்றாரா அல்லது இந்தியாவிலேயே வைத்திருக்கப்போகின்றாரா என்பதைக் குறிப்பிட வேண்டும். 

KYC  (Know your customer) சார்ந்த ஆவணங்கள் மற்றும் பான் கார்ட் நகல் கொடுக்கப்பட வேண்டும்.   

என்ஆர்ஐ-களுக்குப் பதிலாக வேறு யாராவது முதலீடுகளை நிர்வகிக்க முடியுமா? 

என்ஆர்ஐ-களுக்குப் பதில் அவருடைய பவர் ஆப் அட்டர்னி பெற்ற மற்றொருவர், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். எனினும், பவர் ஆப் அட்டர்னி வைத்திருப்பவர், பரஸ்பர நிதியில் தன்னுடைய விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 

என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
பவர் ஆப் அட்டர்னி வைத்திருப்பவர் அதனுடைய மூலப் பிரதி அல்லது நோட்டரி பப்ளிக்கினால் கையொப்பம் இட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும். பவர் ஆப் அட்டர்னியில், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் அவருடைய இந்தியப் பிரதிநிதி ஆகிய இருவரும் கையொப்பம் இட வேண்டும். அதன் பின்னர் அது முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.  

பணத்தை எப்படித்திரும்பப் பெறுவது? 
ஒரு வேளை வெளிநாடு வாழ் இந்தியர், முதலீட்டைத் திரும்ப வெளிநாட்டிற்கே எடுத்துச் செல்லும் முறையில் முதலீடு செய்திருந்தால், முதலீட்டிற்கான பணம், அவருடைய என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 

அவ்வாறு இல்லாத பட்சத்தில், முதலீட்டாளர், முதலீட்டிற்கான பணத்தைத் தனது NRE / FCNR / NRO கணக்கில் இருந்து செலுத்தலாம்.   

முதிர்வு தொகை எப்படி வழங்கப்படும்? 
முதிர்வு தொகை (வரிப் பிடித்தம் போக) இந்திய ரூபாயாக, முதலீட்டாளர் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கு எண்ணிற்குக் காசோலையாக வழங்கப்படும். சில வங்கிகள் NRE / NRO கணக்கிற்கு நேரிடையாகப் பணத்தைச் செலுத்துகின்றன. 

ஒரு வேளை முதலீட்டாளர், வெளிநாட்டிற்குத் திரும்ப எடுத்துச் செல்ல இயலாத அடிப்படையில் முதலீடு செய்திருந்தால், முதிர்வு தொகை அவருடைய NRO கணக்கில் செலுத்தப்படும்.

வரிப் பிடித்தம் உண்டா? 
வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடுகளுக்கு மூலதன ஆதாயங்கள் மீது வரி பிடிக்கப்படும். ஒருவேளை அவர் பங்கு நிதிகளில் ஒரு ஆண்டிற்கு மேல் முதலீடு செய்திருந்தால் அவருக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய டிடிஎஸ் சான்றிதழ் முதிர்வு தொகையுடன் இணைத்து அனுப்பப்படும்.   

கட்டுப்பாடுகள் 
முதலீட்டாளர் ஒரு என்ஆர்ஐ அக இருக்கும் வரை மட்டுமே அவருடைய மூலதனம், மற்றும் மூலதன மதிப்பு உயர்வு ஆகியவை திரும்ப வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். 
இதற்கான விண்ணப்பப் படிவத்தில் வெளிநாட்டு முகவரி ஒரு கட்டாயமான புலமாகும். 

எனவே ஒரு என்.ஆர்.ஐ பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் பொழுது தன்னுடைய வெளிநாடு முகவரியைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

Written by: Mr. Batri krishnan 

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » செய்திகள் - 14.03.2017


Monday, March 13, 2017

தத்தெடுப்பு வழக்குகள் விசாரிக்கலாம்!


தத்தெடுப்பு வழக்குகள் விசாரிக்கலாம்!

குடும்ப நல நீதிமன்றங்களில் தத்தெடுப்பு வழக்குகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: குடும்ப நல நீதிமன்றங்களில் தத்தெடுப்பு வழக்குகளை விசாரிக்கலாம், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

மதுரை கிரேஸ் கென்னட் பவுண்டேஷன் நிர்வாகம் தாக்கல் செய்த மனு: 

கைவிடப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருகிறோம். அக்குழந்தைகளை தத்து கொடுக்கிறோம். வெளி நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் தத்து கொடுக்கிறோம். இதற்காக மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் மனு செய்தோம். 

அந்நீதிமன்றம்,'இளம் சிறார் நீதிச் (குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் தாக்கலாகும் வழக்குகளை விசாரிக்க, இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. குடும்பநல வழக்குகளில் இருதரப்பினரிடையே சமரசம் செய்யப்படும். இல்லாதபட்சத்தில் வழக்கு விரைந்து முடிக்கப்படும். திருமணம் மற்றும் குடும்ப விவகாரங்களை மட்டுமே விசாரிக்க முடியும். இளம் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தாக்கலாகும் வழக்குகளை விசாரிக்க இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை,' என 2016 நவ.,30ல் நிராகரித்தது. 

இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஜெ.நிஷாபானு கொண்ட அமர்வு உத்தரவு: 

இளம் சிறார் நீதிச் (குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் தாக்கலாகும் மனுக்கள் மீது சட்டத்திற்குட்பட்டு, தகுந்த உத்தரவு பிறப்பிக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம், 
என்றனர். 

நன்றி : தினமலர் நாளிதழ் -14.03.2017

மோசடி வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்


மோசடி வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்

வங்கிகளில் ரூ.17,750 கோடி மோசடி; ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலிடம்

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஏப்.,– டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில், 17,750 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. 

இது, தொடர்பாக, 3,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ; அதில், வங்கி ஊழியர்கள், 450 பேரும் அடங்குவர்.

மோசடியில், பண மதிப்பின் அடிப்படையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவை, முதல் மூன்று இடங்¬களில் உள்ளன. 

இந்த வங்கிகளில், முறையே, 2,237 கோடி ரூபாய், 2,250 கோடி ரூபாய் மற்றும், 1,998 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. 

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மோசடி பட்டியலில், தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முதலிடத்தில் உள்ளது.

அடுத்த இடங்களில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்க், எச்.டி.எப்.சி., பேங்க், ஆக்சிஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, சிட்டி பேங்க் ஆகியவை உள்ளன.

மதிப்பீட்டு காலத்தில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவைச் சேர்ந்த, 64 ஊழியர்கள் மீது, பண மோசடியில் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) நாளிதழ் -14.03.2017

Sunday, March 12, 2017

குறைந்தபட்ச இருப்பு தொகை வங்கிகள் கணக்கிடுவது எப்படி?


குறைந்தபட்ச இருப்பு தொகை வங்கிகள் கணக்கிடுவது எப்படி?

வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச, மாத சராசரி இருப்புத் தொகை இல்லாவிட்டால், வாடிக்கையாளர்கள், மாதம், 600 வரை அபராதம் செலுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 
வங்கி சேமிப்புக் கணக்கில், பண இருப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதைப் பற்றி வாடிக்கையாளர்கள் கவலைப்படாத காலம் ஒன்று இருந்தது. 

இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியாது. வங்கியில் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம், குறிப்பிட்ட அளவு தொகையை எப்போதும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற நிலை, தனியார் வங்கிகளில் கட்டாயமாகிவிட்டது. அது, ‘எம்.ஏ.பி.,’ என, குறிப்பிடப்படுகிறது. இப்போது, பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியும், ‘எம்.ஏ.பி.,’யை, அமல்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது, வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வங்கி, ‘எம்.ஏ.பி.,’ தொகையை, வைத்திருக்காத, சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களிடம், அபராதம் வசூலிக்கப்படும் என, அறிவித்துள்ளது. 

மத்திய அரசு அறிமுகம் செய்த, பூஜ்ஜிய இருப்பு, ‘ஜன்தன்’ வங்கிக் கணக்கு திட்டத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளை சமாளிப்பதற்காக, இந்த முடிவை எடுத்திருப்பதாக அவ்வங்கி கூறியுள்ளது. 

அபராதம் எவ்வளவு? பொதுவாக, வங்கிகள், மாநகரம் மற்றும் நகரம்; சிறிய நகரம்; ஊரகம்; மற்றும் கிராமப்புறம் என, பல்வேறு வகையாக, வாடிக்கையாளர்களைப் பிரித்து, எம்.ஏ.பி., தொகையை, நிர்ணயித்துள்ளன. 

அந்த, எம்.ஏ.பி., இருப்பு குறைவாக இருந்தால், அதற்கு ஏற்ப, அவை அபராதமும் விதிக்கின்றன. அது, ஒவ்வொரு வங்கிக்கும் சிறிது மாறுபடுகிறது. 

பொதுவாக, எம்.ஏ.பி., அளவு 2,500 ரூபாயில் துவங்குகிறது; பின், 2,500 – 5,000 ரூபாய்; 5,000 – 7,500; மற்றும் 7,500 – 10,000 என, பல வகையாக பிரிக்கப்பட்டு, அதற்கேற்ப அபராதம் வசூலிக்கப்படுகிறது. மாநகரப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு, பெரும்பாலும், எம்.ஏ.பி., 10 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

 கிராமங்களில், அது, 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 எச்.டி.எப்.சி., வங்கியில், மாநகர பகுதியில், எம்.ஏ.பி., தொகை வைத்து இருக்காவிட்டால், அதிகபட்சம், 600 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 

ஐ.சி.ஐ.சி.ஐ.,யில், 450 ரூபாய்; 

ஆக்சிஸ் வங்கியில், 350 ரூபாய்; 

பாரத ஸ்டேட் வங்கியில், 100 ரூபாய் 

என, வங்கிக்கு வங்கி அது மாறுபடுகிறது. 

இவற்றுடன் கூடுதலாக, 14% சேவை வரி மற்றும் 0.5% கிருஷி கல்யாண் மற்றும் 0.5% ஸ்வச் பாரத் வரி விதிக்கப்படுகிறது. 

பாரத ஸ்டேட் வங்கியில், மாநகர கிளைகளில், ‘எம்.ஏ.பி.,’ 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நகரங்களுக்கு, 3,000 ரூபாய்; 

சிறிய நகரங்களுக்கு, 2,000 ரூபாய்; மற்றும் 

கிராமங்களுக்கு, 1,000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அபராதத்தை பொறுத்தவரை, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விதிக்கப்படவுள்ளது. வங்கிகள், எம்.ஏ.பி., தொடர்பான அபராதங்களை செலுத்தாதவர்களுக்கு, வங்கிகள், இமெயில், எஸ்.எம்.எஸ்., மூலமாக, தகவல் அனுப்புகின்றன. அப்படியும் அபராதத்தை செலுத்தாவிட்டாலோ, இருப்பு பராமரிக்கப்படா-விட்டாலோ, அபராதம் கூடிக் கொண்டே போகும். 

அந்த சேமிப்புக் கணக்கில் பணம் டிபாசிட் செய்யப்படும் ¬போது, அந்த நிலுவைத் தொகை வசூலிக்கப்படுகிறது. எனினும், வங்கிக் கணக்குகளை ரத்து செய்யப்படுவதில்லை; 

சட்டரீதியான நடவடிக்கையோ பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை என்பது ஆறுதல்!

மாத சராசரி கணக்கீடு எப்படி? 
வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காதவர்களுக்கு, அபராதத் தொகை, ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளில் விதிக்கப்படுகிறது. அது, மாத சராசரி குறைந்தபட்ச இருப்பு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

இதை கணக்கிடுவது எப்படி? 
ஒவ்வொரு நாள் இறுதியிலும், சேமிப்புக் கணக்கில் மீதம் இருக்கும் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 30 நாளும் அவ்வாறு தினசரி கணக்கிடப்படும். அதை மொத்தமாகக் கூட்டி, வரும் தொகையை, 30 அல்லது 31ல் வகுத்தால் வரும் தொகை தான் மாத குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகை ஆகும். 

மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு!

வங்கி எம்.ஏ.பி., அப¬ராதம் (ரூபாயில்)

எச்.டி.எப்.சி., 10,000 150–600 

ஸ்டேட் வங்கி 5,000 50–100

 ஐ.சி.ஐ.சி.ஐ., 10,000 350–450 

ஆக்சிஸ் 10,000 350**

ஆக்சிஸ் வங்¬கியில், ஒவ்வொரு 100 ரூபாய் இருப்பு குறைவுக்கும், 10 ரூபாய் அபராதத்தொகை, 350 ரூபாய்க்கு மிகாமல் வசூலிக்கப்படுகிறது.

நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) - 13.03.2017


ஓய்வு பெற்றவர்களுக்கான முதலீடு திட்டம்


ஓய்வு பெற்றவர்களுக்கான முதலீடு திட்டம்

அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ‘சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும் மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme)  ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் பிரபலமான முதலீட்டு திட்டமாக இருக்கிறது. 
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அதிக பலன், குறைவான ரிஸ்க் மற்றும் வரிச்சலுகை போன்ற அம்சங்களால், இது ஓய்வூதியம் விரும்பும் முதலீட்டாளர்களால் அதிகம் நாடப்படுகிறது.

வங்கிகளின் வைப்பு நிதி முதலீடு தவிர, இந்த திட்டத்தையும் வயதானவர்கள் பரிசீலிக்கலாம் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். 

மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

தகுதி: 
60 வயதுக்கு மேலானவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது சூப்பர் ஆனுவேஷன் கீழ் ஓய்வு பெற்றவர், 55 வயது முதல், 60 வயதானவர்களும் முதலீடு செய்யலாம். 

ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக முதலீடு செய்யலாம். அதற்கு மேலான தொகை எனில் காசோலை மூலம் முதலீடு செய்யலாம். 

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆயிரம் ரூபாயின் பெருக்கல் தொகையாக முதலீடு செய்யலாம். 

இந்த திட்டத்தின் கீழ் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் துவக்கலாம். ஆனால், மொத்த தொகை, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. 

தனியாக அல்லது கணவன், மனைவி இணைந்த கூட்டாக கணக்கு துவக்கலாம். நாமினி வசதியும் இருக்கிறது.

வட்டி வருமானம்: தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. வட்டி காலாண்டு அடிப்ப-டையில் செலுத்தப்படும்.

வட்டி வருமானம் தானாக செலுத்தப்பட அஞ்சல் அலுவலகத்தில் தனியே சேமிப்பு கணக்கு துவக்கியிருக்க வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம், 5 ஆண்டுகள். 

முதிர்வு அடைந்தவுடன், ஓராண்டு காலத்திற்குள் உரிய விண்ணப்பம் சமர்ப்பித்து, மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். 

தொகையை முன்கூட்டியே விலக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஓராண்டுக்கு பிறகு வழங்கப்படுகிறது. எனினும், டிபாசிட் தொகையின், 1.5 சதவீதம் கழித்துக்கொள்ளப்படும். 

2 ஆண்டுகளுக்குப் பிறகு விலக்கிக் கொண்டால், 1 சதவீத தொகை கழித்துக்கொள்ளப்படும். ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து, இன்னொரு அஞ்சல் அலுவலகத்திற்கு கணக்கை மாற்றிக்கொள்ளலாம். 

கே.ஒய்.சி., படிவம், புகைப்படம், பான் எண் ஆகியவற்றை சமர்ப்பித்து அஞ்சல் அலுவலகங்களில் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவக்கி முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்கள் அதற்குரிய சான்றிதழை அளிக்க வேண்டும். ஒரு சில வங்கிகளும் இந்த திட்டத்தை வழங்குகின்றன. 

இந்த முதலீடு, 80 சி பிரிவின் கீழ் வருமான வரிச்சலுகைக்கு தகுதி உடையது.

நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) - 13.03.2017