disalbe Right click

Sunday, June 25, 2017

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!

விழிப்புணர்வுடன் பிச்சையெடுப்பதால் நிகழும் அற்புதம்?!

ஆன்மீகப்பாதையில் பிச்சை எடுப்பதென்பது வளர்ச்சிக்கான முக்கியமான கருவியாக பார்க்கப்படுகிறது! ஆனால், நாகரீக மனிதனின் பார்வையில் பிச்சையெடுப்பது அவமானத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது!
சத்குரு: தனது தேவைகள் அனைத்திற்கும் பிச்சை எடுத்த ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு கிழிந்த அங்கியுடன் வாழ்ந்தார். மெதுவாக, அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு சம்பாதித்தார். மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அவரிடம் ஆலோசனை கேட்டு அவர் பின்னால் செல்லத் துவங்கினர். மிகவும் விவேகமான ஒருவராக அவர் கருதப்பட்டார். அவர் புகழ் ஊரெல்லாம் பரவ, அரசரும் இந்த செய்தியைக் கேட்டு அவரிடம் அறிவுரை கேட்டு அவரை சந்திக்கத் துவங்கினார்.

ஒருநாள் அரசர் அவரைப் பார்த்து, “நீங்கள் பிச்சைக்காரராக இருக்கக்கூடாது, நீங்கள் எனது அரசவையில் அமைச்சராக இருக்கவேண்டும்என்றார். அதற்கு அந்த பிச்சைக்காரர், “நீங்கள் வழங்கும் இந்த பணி எனக்கு அர்த்தமற்றது, ஆனால் மக்களுக்கு இது உபயோகமாக இருக்கப்போகிறது என்றால், ஒரே ஒரு நிபந்தனையுடன் இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு அரண்மனையில் ஒரு அறை வேண்டும், அதற்குள் எவரும் வரவோ, சோதனை செய்யவோ கூடாது, நீங்கள் உட்பட எவரும் அந்த அறைக்குள் வரக்கூடாது. அப்படி எவராவது வந்தால், அதற்குப்பிறகு நான் உங்கள் அமைச்சராக இருக்கமாட்டேன்என்றார். அதற்கு அரசர், “சரி, நான் உங்களுக்கு ஒரு அறை கொடுக்கிறேன். அதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அறையை நான் எதற்காக பார்க்க நினைக்கப்போகிறேன்?” என்றார்.

சில வருடங்கள் இது தொடர்ந்தது. இப்போது அவையின் முக்கிய மந்திரியாக பதவி ஏற்றிருந்த பிச்சைக்காரர், தனது கிழிந்த அங்கியுடன் இனி நடமாட முடியாது என்பதால் நல்லவிதமான உடைகளை உடுத்திக்கொண்டார். காலப்போக்கில் மக்கள் அனைவரும் அவரை போற்றத் துவங்கினர், அவர் அரசருக்கும் மக்களுக்கும் மிகவும் பிரியமான மந்திரியாக மாறினார். அவருடைய புகழையும் வெல்லமுடியாத விவேகத்தையும் கண்ட பிற அமைச்சர்கள் பொறாமை கொண்டனர். சில அமைச்சர்கள், “அவர் அந்த அறையில் சந்தேகத்திற்குரிய எதையோ வைத்திருக்கிறார். அதனால்தான் எவரையும் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. அது அரசருக்கும் தேசத்துக்கும் எதிரான ஏதோவொன்றாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் எதற்காக இப்படி எவரையும் நுழையவிடாமல் வைத்திருக்கவேண்டும்?” என்று சிந்திக்கத் துவங்கினர்.

இந்த வதந்திப்பேச்சு பரவி அரசரின் காதுகளை அடைந்தது. அரசரும் என்னவென்று கண்டுபிடித்துவிட வேண்டும் என்று நினைத்து, ஒருநாள் முக்கிய மந்திரியிடம், “உங்கள் அறையில் என்ன இருக்கிறதென்று நான் பார்க்க வேண்டும்என்றார். அதற்கு அமைச்சர், “நீங்கள் பார்க்கலாம், ஆனால் அந்த அறைக்குள் நீங்கள் நுழைந்த மறுகணமே நான் திரும்பிச் சென்றுவிடுவேன். உங்கள் அமைச்சராக இருக்கமாட்டேன்.என்றார். அவரின் விவேகத்தை நன்கு அறிந்த அரசர், இப்படியொரு அமைச்சரை இழக்க மனமின்றி தன் ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டார்.

ஆனால் சிலநாட்களில், மக்கள் அவரிடம் சொன்ன கதைகளையும், “நீங்கள் அரசராயிற்றே, உங்களுக்குத் தெரியாத ரகசியம் உங்கள் அரண்மனையில் இருக்கக்கூடாதுஎன்ற அறிவுரையையும் கேட்டு, அரசர் மீண்டும் பதற்றமடைந்தார். பிறகு ஒருநாள் விடாப்பிடியாக அரசர் சொன்னார், “நான் இன்று உங்கள் அறையை பார்த்தே தீரவேண்டும்.மந்திரி அதற்குச் சம்மதித்தார், அதனால் அரசர் உள்ளே சென்றார். அந்த அறையில் அவர் எதையும் காணவில்லை. அது ஒரு காலியான, வெற்று அறையாக இருந்தது. சுவற்றில் பிச்சைக்காரனாக இருந்தபோது அணிந்த அந்த கிழிந்த அங்கி தொங்கிக்கொண்டு இருந்தது.

இதைக் கண்ட அரசர், “இதை எதற்காக ரகசியமாக வைத்துக்கொண்டீர்கள்? இங்கு எதுவும் இல்லையே!என்று கேட்டார். அதற்கு மந்திரி, “பகலில் நான் மந்திரி. இரவில் அந்த அங்கியை அணிந்துகொண்டு தரையில் படுத்துத் தூங்கினேன். இதனால் அமைச்சராக இருந்த எனது பதவியில் நான் சிக்கிப்போகவில்லை. ஆனால் இப்போது நம் ஒப்பந்தத்தை நீங்கள் மீறிவிட்டீர்கள், இனி இது செல்லாது.என்றபடி கிழிந்த அங்கியை அணிந்துகொண்டு வெளியேறிச் சென்றார்.
விழிப்புணர்வாக பிச்சை எடுப்பது
இந்தியாவில் பிச்சை எடுப்பது எப்போதும் ஆன்மீக பாரம்பரியத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. உங்கள் உணவை நீங்கள் தேர்வு செய்யவில்லை, பிச்சை எடுத்து மக்கள் என்ன வழங்கினாலும் அதை உண்டு வாழ்ந்தீர்கள். ஆன்மீகப்பாதையில் இருந்த ஒருவர் உங்கள் வீட்டின் முன் பிச்சை கேட்டால், அவருக்கு நீங்கள் உணவு வழங்குவது மிகப்பெரிய பாக்கியமாகக் கருதப்பட்டது. இன்று இந்த பாரம்பரியங்களை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். பலர் ஆன்மீகத் தேடுதலில் இருப்பவர்கள் போல உடை அணிந்தபடி பணத்தையும், உணவையும் மட்டும் தேடும் சாதாரண பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வாக பிச்சை எடுத்தபோது, அதற்கு முற்றிலும் மாறுபட்டதொரு அர்த்தமும், சாத்தியமும் இருந்தது.
உங்கள் முன்னால் யாரோ ஒருவர் கையேந்தும்போது, அதை அவர் தவறாகப் பயன்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால் நீங்கள் பிச்சை இடாமல் நகர்ந்து செல்லலாம். ஆனால் உண்மையான தேவையினால் அந்த செய்கை வந்திருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், மனிதராக நீங்கள் அதற்கு பதில் கொடுக்க வேண்டும். நீங்கள் தெருவில் யாரோ ஒருவரிடம் கையேந்துவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அந்த நிலைக்கு உட்படுத்துகிறார்கள்.
ஒரு பிச்சைக்காரர் வேறு வழியறியாமல் அப்படி செய்யலாம், ஆனால் ஒரு சந்நியாசி விழிப்புணர்வாக தன்னுடைய வளர்ச்சிக்காக அப்படி செய்கிறார். தன் குப்பையால் தான் நிரம்பிவிடக்கூடாது என்பதற்காக செய்கிறார். ஒரு பிச்சைக்காரருக்கு அப்படிப்பட்ட எந்தவொரு உயர்ந்த குறிக்கோளும் கிடையாது, வயிற்றை அவராகவே நிறைக்க முடியாத நிலைக்குப் போய்விட்டதால் கையேந்துகிறார்.
ஊனம் என்பது ஒரு கையையோ, காலையோ தொலைப்பதல்ல. நீங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து உணரும் விதத்திலேயே ஊனமாக இருக்கமுடியும். சொல்லப்போனால், நம் ஜனத்தொகை முழுவதுமே சிந்திக்கும் விதத்தாலும் வாழ்க்கை குறித்த உணர்வாலும் ஏதோவொரு விதத்தில் ஊனமுற்றுத்தான் இருக்கிறது. அப்படித்தான் பிச்சைக்காரனும் தன்னைத் தானே ஒரு மூலைக்குத் தள்ளிக்கொண்டான், பிழைப்பை சம்பாதிக்க பிச்சை எடுப்பதுதான் மிக சுலபமான வழி என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.
உங்களை கீழே உதிர்ப்பது
ஆன்மீகப்பாதையில் இருப்பவர், தன்னைத் தானே உதிர்ப்பதற்காகவே பிச்சை எடுக்கிறார். என் பிழைப்பையும், பணத்தையும், உணவையும், வீட்டையும் நானே சம்பாதிக்கிறேன்என்பது உங்கள் அகங்காரத்தின் மிகப்பெரிய அங்கம் வகிக்கிறது. ஒருநாள் ஒரு விருந்தினர், கைகளில் சில பூக்களை ஏந்தியபடி கௌதம புத்தரைக் காண வந்தார். ஒரு குருவைக் காண வரும்போது, அவருக்கு அர்ப்பணிக்க மலர்களை எடுத்துச்செல்வது நமது கலாச்சாரத்தில் உள்ள வழக்கம்.
அவர் வந்ததும் கௌதம புத்தர் அவரைக் கண்டு, “கீழே போடுஎன்றார். அவர் சுற்றியும் பார்த்துவிட்டு, “எதைக் கீழே போடுவது?” என்று குழம்பிப்போனார். அவர் கொண்டுவந்த மலர்களைக் கீழே போடச் சொல்கிறார் என்று எண்ணி தயங்கினார். ஆனால் இவற்றை உங்களுக்காக கொண்டுவந்தேன்என்றார். அதற்கு கௌதம புத்தர் மீண்டும் கீழே போடுஎன்றார். உடனே அவர் கையிலிருந்த பூக்களை கீழே போட்டார். கௌதமர் அவரை மீண்டும் பார்த்து, “கீழே போடுஎன்றார். அதற்கு அவர், “நான் மலர்களை கீழே போட்டுவிட்டேன். உங்களுக்காக பரிசாகக் கொண்டுவந்தேன். ஆனால் நீங்கள் கீழே போடச் சொன்னீர்கள். போட்டுவிட்டேன். இப்போது கீழே போட வேறென்ன இருக்கிறது?” என்று கேட்டார். கௌதமர் சொன்னார், “இல்லை, முதலில் உங்களை கீழே போடுங்கள். மலர்கள் ஒரு பிரச்சனையல்ல. மலர்களை எனக்காக பறித்தீர்கள், அது பரவாயில்லை, அவற்றை நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் உங்களை கீழே போடுங்கள்.
பிச்சை எடுப்பது உங்களை நீங்களே கீழே போடுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் பிழைப்பை சம்பாதிக்கும்போது உங்களை நீங்கள் ஒரு குவியலாக சேர்த்துக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் பிழைப்பை சம்பாதிக்கும் திறமை உங்களுக்கு இருப்பதை நன்கு உணர்ந்திருந்தும் பிச்சை எடுப்பதை தேர்ந்தெடுக்கும்போது, இன்னொருவர் முன்னால் கையேந்தி, உங்களை நீங்கள் உதிர்க்கிறீர்கள். இது ஒரு மனிதருக்குள் நிகழும் அபாரமான தன்னிலை மாற்றம். மனிதர்கள் உங்களுக்கு உணவு தரலாம், அல்லது உங்களை வெளியே போகச் சொல்லலாம், அது ஒரு பொருட்டல்ல, ஆனால் விழிப்புணர்வாக பிச்சை எடுப்பது சாதாரண விஷயமல்ல.
நன்றி : தினமலர் நாளிதழ் - 20.06.2017





மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?

மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி?
’நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்’ என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ.,யின், ’நீட்’ தேர்வு பொறுப்பு இணை செயலர், சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
’நீட்’ தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தகுதி பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட கவுன்சிலிங் கமிட்டியை தொடர்பு கொண்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கையை துவங்க வேண்டும்.
’நீட்’ தேர்வில், முன்னேறிய வகுப்பினருக்கு, 131; முன்னேறிய மாற்று திறனாளிகளுக்கு, 118 மற்றும் மற்றவர்களுக்கு, 107 மதிப்பெண், தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், digilocker.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் தரவரிசை கடிதங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள, 15 சதவீத மத்திய அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, மத்திய அரசின் சுகாதார பணிகள் துறை, பொது இயக்குனரகம்சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படும். இதுகுறித்த, ’கட் - ஆப்’ விபரங்களை, www.mcc.nic.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ’நீட்’ தேர்வின் அகில இந்திய தரவரிசை பட்டியலின் அடிப்படையிலும், மாநில விதிகளின் படியும், அந்தந்த மாநிலங்களால், கவுன்சிலிங் நடத்தப்படும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு, மாநில கவுன்சிலிங் கமிட்டி சார்பில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் உண்டா
தமிழகத்தில், பல மாணவர்கள், ’நீட்’ தேர்வில், 450 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர். தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு, ’நீட்’ தேர்வு மதிப்பெண்படி மட்டுமே, மாணவர் சேர்க்கை நடக்குமா அல்லது பிளஸ் 2 மதிப்பெண்படி நடக்குமா என, குழப்பம் நீடிக்கிறது. பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில், ’நீட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவில் தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின், பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறுகையில், ”தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், ’நீட்’ தேர்வில், தேர்ச்சியை மட்டுமே கணக்கிட்டு, பிளஸ் 2 மதிப்பெண்ணில் அதிகம் பெற்றவருக்கு சேர்க்கை வழங்க வேண்டும்,” என்றார்.
கல்வியாளர்கள் கூறுகையில், ’தமிழக பிளஸ் 2 தேர்வை விட, நீட் தேர்வு சிந்திக்கும் திறன் வாய்ந்ததாக உள்ளது. எனவே, அதில் அதிக மதிப்பெண் எடுப்போருக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எனவே, ’நீட்’ தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு சமவாய்ப்பு வழங்கி, இரண்டிலும் அதிகம் பெற்றவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரித்து, சேர்க்கை நடத்தலாம்’ என்றனர்.
உள் ஒதுக்கீடு அவசியம்
‘நீட் தேர்வில் பங்கேற்ற, தமிழக மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாகவே உள்ளது. 1,000க்கும் மேல் மாணவர்கள் படித்த டாப் பள்ளிகளில் கூட, நீட் தேர்வில், 300 மதிப்பெண்களை தாண்டியவர்களின் எண்ணிக்கை, 15ஐ கூட எட்டவில்லை. ஓராண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே, ஓரளவுக்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழக அரசு, மாணவர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில், உள் ஒதுக்கீடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த ஆண்டு அனைத்து மாணவர்களும், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு சென்றுவிடுவர். நீட் தேர்வில், கடந்த ஆண்டு 118 ஆக இருந்த தேர்ச்சி, நடப்பாண்டில் 125 முதல் 150 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது’, என்று கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 24.06.2017

பில், ரசீது & ஆவணங்களை பாதுகாக்க .....

பில், ரசீது & ஆவணங்களை பாதுகாக்க .....
பில், ரசீ­துகள், ஆவ­ணங்­களை பாது­காக்கும் வழி­மு­றைகள்!
முத­லீடு, காப்­பீடு உள்­ளிட்ட நிதி விஷ­யங்கள் தொடர்­பான ஆவ­ணங்­களை முறை­யாக பரா­ம­ரித்து வரு­வது, நிதி பாது­காப்­பிற்கு முக்­கி­ய­மா­கி­றது.
கட்­ட­ணங்­க­ளையும், தவணைத் தொகை­க­ளையும் ஒழுங்­காக செலுத்தி வந்தால் மட்டும் போதாது. அவை தொடர்­பான ஆவ­ணங்­களையும் சரி­யாக பரா­மரித்து வர வேண்டும். அப்­போது தான், எந்த ஆவணம் எங்­கி­ருக்­கி­றது என்­பதை அறிந்து, தேவை­யான போது உடனே எடுத்து பயன்­ப­டுத்த முடியும். இல்லை எனில், வைத்த இடம் தெரி­யாமல், தேடிக் கொண்­டி­ருக்க வேண்டும். இந்த தேவை­யில்­லாத குழப்­பத்தை தவிர்க்க, நிதி ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்தி முறை­யாக பரா­ம­ரிக்கும் வழக்­கத்தை பின்­பற்றி வர­வேண்டும். முத­லீடு, காப்­பீடு, மாதாந்­திர ரசீ­துகள் போன்­ற­வற்றை, அவற்­றுக்கு உரிய இடத்தில் வைத்து பாது­காக்க வேண்டும். 
இரண்டு கட்டம்:
முதலில் ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்­து­வதை இரண்டு கட்­ட­மாக செய்­யலாம். முதல் கட்­டத்தில், பில்கள், ரசீ­துகள் போன்­றவை வரும் போது, அவற்றை தற்­கா­லி­க­மாக எடுத்து வைக்க, ஓரி­டத்தை தேர்வு செய்­யுங்கள். பெரும்­பா­லானோர் இவற்றை ஏதேனும் ஒரு இழுப்­ப­றையில் அல்­லது கையில் கிடைக்கும் இடத்தில் வைத்து விடு­கின்­றனர். இதுவே குழப்­பத்­திற்கு கார­ண­மா­கி­றது. இதைத் தவிர்க்க, ஒரே இடத்தில் இவற்றை எடுத்து வைக்க வேண்டும். இதற்­காக இரண்டு பெட்­டி­களை தயார் செய்து கொள்­ளலாம். 
முதல் பெட்­டியில் தின­சரி வீட்டு உப­யோக பில்­களை போட்டு வைக்­கலாம். இரண்­டா­வது பெட்­டியில் மின் கட்­டண ரசீது, வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு அறிக்கை போன்­ற­வற்றை போட்டு வைக்­கலாம். இவ்­வாறு செய்த பின், இந்த தற்­கா­லிக இடத்தில் இருந்து நிரந்­தர சேமிப்­பிற்கு இவற்றை மாற்ற வேண்டும். தனித்­தனி கோப்­புகள் அல்­லது போல்­டர்­களை தயார் செய்து, அவற்றின் மீது பெயர் எழுதி, ஒவ்­வொன்­றிலும் உரிய ஆவ­ணங்­களை வைத்து வரலாம்.
வகைப்­ப­டுத்தல்:
ரசீ­துகள் மற்றும் ஆவ­ணங்­களை பல்­வேறு தலைப்­பு­களில் வகைப்­படுத்திக் கொள்­வது நல்­லது. உதா­ர­ண­மாக வரிகள் எனும் தலைப்­பி­லான போல்­டரில், வரு­மான வரி சான்­றி­தழ்கள், படிவம் 16, தொடர்­பு­டைய பில்கள் உள்­ளிட்­ட­வற்றை வைக்­கலாம். இதே போல, காப்­பீடு தலைப்பின் கீழ் ஆயுள் காப்­பீடு, வாகன காப்­பீடு, மருத்­துவ காப்­பீடு பாலிசி தொடர்­பா­ன­வற்றை எடுத்து வைக்­கலாம். மற்ற வகைகள்: முத­லீடு -வைப்பு நிதி, மியூச்­சுவல் பண்ட், பங்­குகள், சிறு சேமிப்பு, பி.எப்., – பி.பி.எப்., கடன்கள்- வீட்­டுக்­கடன், வாக­னக்­கடன், தனி­நபர் கடன், இல்லம்பத்­திரம், வாடகை ஒப்பந்தம். இவை தவிர மருத்­துவ ஆவ­ணங்கள், வீட்டு உப­யோக பொருட்­களுக்­கான கையே­டுகள், பில்கள் போன்ற­வற்­றையும் தனியே வகைப்­ப­டுத்­தலாம்.
ஆதார் அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை, வாக்­காளர் அடை­யாள அட்டை, ஓட்­டுனர் உரிமம், பிறப்பு சான்­றிதழ், கல்வி சான்­றிதழ் உள்­ளிட்ட முக்­கிய அடை­யாள சான்­றி­தழ்­க­ளையும் தனியே வகைப்­ப­டுத்தி வைக்க வேண்டும். இனி இவற்றை தற்கா­லி­க­மா­னவை, நிரந்­த­ர­மா­னவை என பிரித்து, அதற்­கேற்ப பாது­காத்து வைக்க வேண்டும். வீட்டு பத்­திரம், பான் கார்டு, ஆதார் அட்டை போன்­றவை நிரந்­த­ர­மாக வைத்­தி­ருக்க வேண்­டி­யவை. முத­லீடு சான்­றிதழ், காப்­பீடு பாலிசி போன்­ற­வற்றை அவற்­றுக்கு உரிய காலத்­திற்கு வைத்­தி­ருக்க வேண்டும். பில்கள், ரசீ­துகள் போன்­ற­வற்றை பயன்­பாடு முடிந்தால், அப்­பு­றப்­ப­டுத்தி விடலாம். 
டிஜிட்டல் பாது­காப்பு:
மற்ற முக்­கிய ஆவ­ணங்­களை பெள­தீக வடிவில் அல்­லது ஆன்­லைனில் பாது­காக்­கலாம். வீட்­டி­லேயே பெட்­டக வசதி இருந்தால் அதில் முக்­கிய ஆவ­ணங்­களை பாது­காக்­கலாம். வங்கி லாக்கர் வச­தி­யையும் நாடலாம். டிஜிட்டல்முறையில் உள்ள ஆவ­ணங்­களை டிஜி­லாக்கர்போன்­ற­வற்றில் பாது­காத்து வைக்­கலாம். ஆவ­ணங்­களை ஸ்கேன் செய்து கம்ப்­யூட்­ட­ரிலும் ஒரு பிர­தியை சேமித்து வைக்­கலாம். ஆனால், முறை­யாக பேக்கப்செய்­தி­ருக்க வேண்டும். ஒரு சில வங்­கிகள் -இ–-லாக்கர் வச­தியும் அளிக்­கின்­றன.
ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்தி பாது­காத்து வைப்­ப­துடன் நின்­று­வி­டாமல், தொடர்ந்து கண்­கா­ணித்து வர வேண்டும். காலாண்­டுக்கு ஒரு­முறை அல்­லது ஆறு மாதங்­களுக்கு ஒரு­முறை, போல்­டர்­களை எடுத்துப் பார்த்து, ஏதேனும் நட­வ­டிக்கை தேவையா என பார்க்க வேண்டும். காப்­பீடு தவணை தேதி, முதிர்வு காலம் போன்ற தக­வல்­களை, தனியே ஒரு நோட்டில் எழுதி வைப்­பது பய­னுள்­ள­தாக இருக்கும். கடன் தவணை, வரி திட்­ட­மிடல், முத­லீடு தக­வல்­க­ளையும் தனியே குறித்து வைக்க வேண்டும். 
நிதி பாது­காப்பும், பரா­ம­ரிப்பும்
* நிதி ஆவ­ணங்­களை ஒரே இடத்தில் வைத்­தி­ருத்தல் நல்­லது
* ஆவ­ணங்­களை வகைப்­ப­டுத்தி தனித்­தனி போல்­டர்­களில் வைத்­தி­ருக்க வேண்டும்.
* பாது­காப்­பான இடத்­திற்கு மாற்ற வேண்டும்
* தொடர்ந்து கண்­கா­ணித்து வரு­வது அவ­சியம்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 26.06.2017

எச்சரிக்கை! நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள்:

எச்சரிக்கை! நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள்:
மாணவர்கள் உஷார்
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையான போலி படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. 'விபரம் தெரியாமல், மாணவர்கள் இவற்றில் சேர்ந்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்து உள்ளது.
தமிழகத்தில், ஜூலை, 17ல், மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. அடுத்த கட்டமாக, நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
வேலை கிடைக்கும்
இந்நிலையில், தமிழகத்தில், அனுமதியின்றி செயல்படும், 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையாக, போலியான நர்சிங் படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதில், சேர்ந்து ஏமாற வேண்டாம் என, நர்சிங் கவுன்சில், எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:
தமிழகத்தில், நர்சிங் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இந்தியன் நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகாரம் வழங்கப்படு கிறது. இவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் படித்தால் மட்டுமே, அந்த சான்றிதழ்கள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்படும்; அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எனவே, நர்சிங் படிக்க விரும்பும்மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பள்ளி, கல்லுாரி மற்றும் நர்சிங் படிப்பு ஆகியவை, அங்கீகாரம் பெறப்பட்டதா என, சரிபார்த்து சேர வேண்டும். கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற, கல்லுாரி, படிப்பு விபரங்களை, /www.tamilnadunursingcouncil.com என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், நர்சிங் பயிற்சி என்ற பெயரில், சில பெரிய, சிறிய மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைகள், கல்லுாரிகள், பள்ளிகள் போன்றவை, 17 வகையான, போலி நர்சிங் படிப்புகளை நடத்து கின்றன.
இந்த படிப்பை முடிக்கும் மாணவர்கள், பெறக்கூடிய சான்றிதழ்களை, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. அரசுப்பணியில் சேர முடியாது. எந்த மருத்துவமனையிலும், செவிலியர்களாக பணியாற்ற முடியாது.
போலி படிப்பை நடத்தும் நிறுவனங்கள்,பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் ஆகியவை மீது, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் சட்டப்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அபராதம் விதிக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, போலி நர்சிங் பயிற்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, போலி படிப்பு நடத்தும் நிறுவனங்கள், தாங்களாகவே போலி படிப்பு நடத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
போலி படிப்புகள் என்ன?
ஆறு மாத படிப்புகள்
டிப்ளமா இன் நர்சிங் அசிஸ்டென்ஸ் கோர்ஸ்
இரண்டு ஆண்டு படிப்புகள்:
டிப்ளமா இன் நர் சிங்,
டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் நர்சிங்,
வில்லேஜ் ஹெல்த் நர்சிங்,
டிப்ளமா இன் நர்சிங் எய்ட்,
டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் அண்ட் பிராக்டிகல் நர்சிங்
ஓர் ஆண்டு படிப்புகள்:
சர்டிபிகேட் இன் நர்சிங்,
அட்வான்ஸ்ட் டிப்ளமா இன் நர்சிங் அசிஸ்டென்ட்,
டிப்ளமா இன் ஹெல்த் அசிஸ்டென்ட்,
நர்ஸ் டெக்னிசியன் கோர்ஸ்,
ஹெல்த் கெய்டு கோர்ஸ்
சான்றிதழ் படிப்புகள்:
ஹெல்த் அசிஸ்டென்ட்,
ஹாஸ்பிடல் அசிஸ்டென்ட்,
பெட் சைட் அசிஸ்டென்ட்,
பேஷண்ட் கேர்,
ஹோம் ஹெல்த் கேர்.
நன்றி : தினமலர் நாளிதழ் – 26.06.2017



லாக்கர் பொருள்: வங்கிகள் கைவிரிப்பு

லாக்கர் பொருள்: வங்கிகள் கைவிரிப்பு
புதுடில்லி:'வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்புக்கு, வங்கிகள் பொறுப்பேற்காது' என்பது, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
திருட்டு, தீ விபத்து உள்ளிட்டவற்றில் இருந்து, நகைகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்க, வாடிக்கையாளர்கள், வங்கிகளில் உள்ள பாதுகாப்பு லாக்கரில், அவற்றை வைக்கின்றனர். ஆனால், இந்த லாக்கரில் வைக்கப்படும் பொருட்கள், திருடப்பட்டால், தீவிபத்து உள்ளிட்ட விபத்துகளால் சேதமடைந்தால், அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது.
இது குறித்து டில்லி யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி மற்றும், 19 பொதுத் துறை வங்கிகளிடம் கேட்ட விபரங்களுக்கு, அவை அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கி லாக்கரை பயன்படுத்துவது தொடர்பாக, நுகர்வோர் மற்றும் வங்கிக்கு இடையே ஏற்படுத்தப் படும் ஒப்பந்தம், குத்தகை அடிப்படையிலான ஒப்பந்தமே. அதனால், அதில் வைக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பு, வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் நுகர்வோரையே சாரும்.
லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு எந்தவித சேதம் ஏற்பட்டாலும், காணாமல் போனால், திருடப்பட்டால்,அதற்கு வங்கி பொறுப்பாகாது. அதனால், இழப்பீடு தர முடியாது. இவ்வாறு வங்கிகள் பதில் அளித்துள்ளன.
அதைத் தொடர்ந்து, நிறுவனங்கள் இடையேயான போட்டி விவகாரத்தை விசாரிக்கும், சி.சி.ஐ., எனப்படும் 'இந்திய காம்ப்படிஷன் கமிஷனில் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார். 'அனைத்து வங்கிகளும் திட்டமிட்டு, இதுபோன்ற பிரிவுகளை ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளன.
லாக்கருக்கு வங்கிகள் பொறுப்பாகாதபோது, காப்பீடு செய்துவிட்டு, வீட்டிலேயே வைத்திருக்கலாமே. லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்புக்கு வங்கிகளை பொறுப்பேற்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்' என, புகாரில் அவர் கூறியுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -25.06.2017



இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்
“காந்தி இருந்திருந்தால் அவருக்கும் சிறைதான்!” நெருப்பு நாட்கள்...
எமர்ஜென்சி நினைவலைகள்!
இந்திய அரசியலில் இரும்புப்பெண்மணி எனப்பட்ட இந்திராகாந்தி தன் அதிகாரத்தின் அதிகபட்ச எல்லையை நிறுவிய நாள் இன்று. ஆம், 1975 ஜூன் மாதம் இதேநாள் நள்ளிரவில்தான் இந்தியாவில் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
அது ஒரு கடும் கோடைக் காலம் முடிந்து வெயிலும் குளிரும் சன்னமாய் உணரப்பட்ட ஜூன் மாதம். அந்த மாதத்தின் 12 ந்தேதி ஒட்டுமொத்த இந்தியாவும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் வாயிற் கதவுகளில் தங்கள் காதை வைத்துக் காத்துக்கொண்டிருந்தது. பிரதமர் இந்திராகாந்தியின் அரசியல் வாழ்வை அன்றுமுதல் தீர்மானிக்கபபோவது இந்த நீதிமன்றம்தான்.
இந்திராவுக்கு எதிரான வழக்கு என்ன...
நேருவுக்குப்பின் காங்கிரஸின் பலம்வாய்ந்த தலைவராக உருவாகிவந்த பிரதமர் இந்திரா காந்தி 1971 பாராளுமன்றத்தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்திராவிற்கு அப்போது எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு அலை இருந்தது.
இந்தத் தேர்தலில் தன் வெற்றிக்காக ஆட்சி இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த இந்திரா, யஸ்பால் கபுர் என்ற உயரதிகாரியை அதற்கு பயன்படுத்தினார் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனால் இந்திராவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்புதான் 1975ம் வருடம் ஜூன் 12 ந்தேதி அறிவிக்கப்பட இருந்தது.
நாடே பரபரப்பாய் உற்றுநோக்கிக்கொண்டிருந்த தீர்ப்பை நீதிபதி ஜெகன்மோகன் சின்ஹா 10 நிமிடங்களில் வாசித்து முடித்தார். வழக்கின் அனைத்து அம்சங்களும் உறுதிப்படுத்தப்பட்டதாய்க் கூறிய அவர், இந்திராவின் வெற்றி செல்லாது என அறிவித்ததோடு அடுத்த 6 வருடங்களுக்கு இந்திரா தேர்தலில் போட்டியிட தடையும் விதித்தார். இந்த தீர்ப்பால் அகில இந்தியாவும் அதிர்ந்து நின்றது. 'தீர்ப்பின் எதிரொலியாக இந்திரா உடனயடியாக பதவி விலகவேண்டும்' என இந்திராவுக்கு எதிராக அன்றைக்கு போர் நடத்திக்கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
அசைந்துகொடுக்காத இந்திரா உச்சநீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்தார். மனுவை ஏற்று, முந்தையத் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்த உச்சநீதிமன்றம், 'இந்திரா எம்.பியாகவும் பிரதமராகவும் நீடிக்கத் தடை இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களிக்கக்கூடாது' என்றது.
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இந்திரா சற்று நிம்மதியானார். ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த நிம்மதியை நீடிக்கவிடவில்லை. நாடு முழுவதும் இந்திரா எதிர்ப்பாளர்கள் கண்டனக் கூட்டங்கள் நடத்தி அவரை பதவி விலகச் சொல்லி பரபரப்பை கூட்டினர். உச்சகட்டமாக அவரை பதவியிலிருந்து அகற்ற மொரார்ஜி தேசாய் தலைமையில் எதிர்கட்சிகள் ஒரு போராட்டக்குழுவை அமைத்தன. நாடே பரபரப்பாக இருந்தது.
எதிர்க்கட்சிகளின் இந்த முடிவால் இந்திரா பதவி விலகும் முடிவுக்கு வந்தார். ஆனால் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு, தான் அஞ்சிவிடுவதா என்ற ஈகோ அவரது முடிவுக்கு முன் முட்டுக்கட்டையாக நின்றது. தனக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகரும் அன்றைய மேற்கு வங்க முதல்வருமான சித்தார்த் சங்கர் ரேவிடம் யோசனை கேட்டார். தேர்ந்த அனுபவம்பெற்ற அரசியல்வாதியான ரே, சில சட்டவல்லுநர்களை கலந்தாலோசித்துவிட்டு இந்திராவிடம் திரும்பிவந்தார்.
“பிரதமராக நீடிப்பதில் சட்டச்சிக்கல் இல்லாததால் பதவியில் தொடருங்கள். எதிர்கட்சிகளை பொருட்படுத்தாதீர்கள்” என யோசனை சொன்னார். ஓரிருநாளில் 'அடுத்துவரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் சஞ்சய் காந்தியின் மாருதி கார் விவகாரம், நகர்வாலா ஊழல் உள்ளிட்ட ஆட்சிக்கு சங்கடமான சில விவகாரங்களை கையிலெடுத்து எதிர்கட்சிகள் பிரச்னை கிளப்ப இருப்பதாக உளவுத்துறையிடமிருந்து இந்திராவுக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. நிலைகொள்ளாமல் தவித்தார் இந்திரா. தன் அரசியலின் அந்திமக்காலம் இது என்பதை உணர்ந்தாலும் அவரது இயல்பான குணம் அதை ஏற்கவில்லை. என்ன ஆனாலும் சரி போராடிப் பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். இந்த காலகட்டத்தில் இந்திரா மவுனம் காப்பதும் வழக்கத்துக்கு மாறாக பிரதமர் இல்லம் சட்டவல்லுனர்களால் நிரம்பிவழிந்ததும் எதிர்கட்சித்தலைவர்களுக்கு கொஞ்சம் நெருடலை தந்தது.
இந்திரா காந்திஇந்திராவின் குணத்தை அறிந்த அவர்கள், அவர் அதிரடியாக எதையாவது செய்துவிடக்கூடும் என அஞ்சினார்கள். ஆனால், நேருவின் மகள் ஜனநாயகத்துக்கு விரோதமான எந்த முடிவுக்கும் போகமாட்டார் என அவர்கள் நம்பினர்.
ஜூன் 23 ரேவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திரா. இந்திராவுக்கு பதவியை விட மனமில்லை. அதேசமயம் அதிகாரமின்றி அதில் தொடர்வதிலும் விருப்பமில்லை என்பதை நீண்ட பேச்சின் முடிவில் புரிந்துகொண்ட ரே, இந்திரா 'எதிர்பார்த்த' ஒரு முடிவை அவருக்கு சொன்னார். “பிரதமராக நீடித்தாலும் எதிர்கட்சிகள் குடைச்சல் தருவதை நிறுத்தாது. அதனால் வேறுவழியில்லை; எமர்ஜென்சியை அறிவித்துவிடுவதுதான் இப்போதைக்கு உங்களுக்கு சாதகமாக இருக்கும். எல்லாப்பிரச்னைகளில் இருந்தும் தற்காலிகமாக தப்பிவிடலாம்” என்றார். அன்றே ரேவுடன் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்த இந்திரா, உளவுத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி, 'ஆட்சியில் ஸ்திரத்தன்மை இல்லாத சூழலில் உள்நாட்டுக்கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முடிவெடுத்திருப்பதாக' சொன்னார்.
“உடனே நெருக்கடி நிலை பிரகடனத்தை தயாரித்து அனுப்புங்கள். கையெழுத்திடுகிறேன்” என்றார் ஜனாதிபதி. அதிகாரிகள் விரைந்து காரியம் ஆற்றினார்கள். எது நடந்துவிடக்கூடாது என எதிர்கட்சிகள் அஞ்சினார்களோ அந்த பயங்கரம் நடந்தேறியது. ஆம் ஜூன் மாதம் 25 ந்தேதி இந்திய மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அதிர்ந்து நின்றது இந்தியா. உலக நாடுகள் இந்திராவின் இன்னொரு முகத்தைக் கண்டு விக்கித்து நின்றன.
நெருக்கடி நிலையின் கோர முகம் 26ந்தேதி விடியற்காலையிலிருந்தே தெரிய ஆரம்பித்தது. சஞ்சய்காந்தியின் ஆலோசனையின்பேரில் இரவோடு இரவாக தலைவர்கள் கைதுப்படலமும் அரங்கேறியது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், பிலுமோதி, ராஜ் நாராயணன், பிஜூ பட்நாயக், அசோக் மேத்தா, மொரார்ஜி தேசாய், வாஜபாய், ஜார்ஜ் பெர்ணான்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் எந்தக் கேள்வியுமின்றி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். நெருக்கடி நிலை குறித்த செய்திகள், தலைவர்கள் கைது இவை மக்களிடம் சென்றுசேர்வதைத் தடுக்க டெல்லியில் முக்கிய நாளிதழ்களின் அலுவலகங்களுக்கு நள்ளிரவு முதல் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் பல பத்திரிகைகள் மறுதினம் வெளிவரவில்லை. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட தகவல் மந்திரிகளுக்கே மறுநாள் காலையில்தான் சொல்லப்பட்டது.
இந்திராவை எதிர்த்தவர்களில் முக்கியமானவரான ஜெயப்பிரகாசரை கைது செய்தபோது “வீநாச காலே விபரீத புத்தி” என மனம்நொந்து சொன்னார். எமர்ஜென்சியை விமர்சிக்க அஞ்சி மற்ற மாநிலங்கள் வாய்மூடி மவுனம் காத்தபோது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக அதை கடுமையாக எதிர்த்தது. அதிமுக சற்று அடக்கிவாசித்தது. இந்திரா எதிர்ப்பாளர்களில் கைது செய்யப்படாத ஒரே தலைவர் தமிழத்தில் காமராஜர் மட்டுமே. ஏற்கெனவே கட்சிக்குள் இந்திராவின் சர்வாதிகாரப்போக்கினை எதிர்த்துத் தோல்வி கண்டவர் காமராஜர். தனக்கு எதிராக மாநிலத்தில் பலம் வாய்ந்த ஓர் தலைமை உருவாவதை விரும்பாத இந்திரா எடுத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் உடைந்து தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் என்றும், காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் எனவும் தனித்தனியே செயல்பட்டுவந்தன. இந்நிலையில் இந்திராவின் எமர்ஜென்சி அறிவிப்பு காமராஜரை மனம் நோகச் செய்தது. ஆனால் இந்திராவை கட்டுப்படுத்தும் கடிவாளம் அவரிடம் அப்போது இல்லை. “ நாட்டுக்கு உழைச்சவங்க எல்லாம் சிறையில் இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு நானும் சிறைக்கு போறேன்” என எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து அவர் மேடைபோட்டு பேச ஆரம்பித்தார்.
இந்திராகாந்தி
இந்திராகாந்தி
நேருவின் மகள் ஜனநாயகத்தை பழிதீர்த்துக்கொண்டதாக கட்சிப்பிரமுகர்களிடம் தெரிவித்த அவர், “நாட்டின் தலைவர்களையெல்லாம் கைது செய்துவிட்டு இவர்கள் ஆளப்போவது நாட்டையா, சுடுகாட்டையா” என மனம் நொந்துச் சொன்னார். பிளவுபட்ட காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஒட்டவைக்கும் ஆசை இந்திராவின் அடிமனதில் அப்போது இருந்ததுதான், காமராஜரை அவர் கைது செய்யாமல் விட்டதற்கு காரணம். ஆனால் எமர்ஜென்சி பிரகடனத்தின் எதிரொலியாக நாட்டில் நடந்தவைகளை காமராஜரால் ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. அவரது உடல் நலிவுற்றது. நெருக்கடி நிலை அமலுக்கு வந்த 4 மாதத்தில் காமராஜர் காலமானார்.
எமர்ஜென்சி பிரகடனத்தையொட்டி வானொலியில் உரையாற்றிய இந்திரா, மக்களின் நலனுக்காக, தான் எடுத்த சில முற்போக்கு நடவடிக்கைகளை பிடிக்காத சிலர் ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி செய்ததால் அவற்றை முறியடிக்க வேறு வழியின்றி எமர்ஜென்சியை கையிலெடுக்க வேண்டியதாகிவிட்டதாக கூறினார். அதேசமயம் சட்டத்தை மீறாத எந்த குடிமகன்களுக்கும் எதுவும் நேராது. வழக்கம்போல் சட்டப்படியான உரிமை அனைத்தும் கிடைக்கும். அசாத்தியமான சம்பவங்கள் எதுவும் நிகழாது. ஜனநாயக மாண்புகளை எள்ளளவும் மீறப்படாது என உறுதியளிக்கிறேன்” என்றார். ஆனால் நடந்ததெல்லாம் அதற்கு நேர் எதிர்.
நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு முந்தைய வாரம் தனது துக்ளக் இதழில் 'ஒண்ணரைப்பக்க நாளேடு' என்ற கற்பனைப்பகுதியில் 'எமர்ஜென்சியை அறிவித்தார் இந்திரா', என கற்பனையாக ஒரு செய்தியை வெளியிட்டு கைதாகப்போகும் தலைவர்கள் என கிண்டலாக ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார் பத்திரிகையாளர் சோ. ஆச்சர்யமாக பட்டியலில் இடம்பெற்ற தலைவர்கள் அத்தனைபேருமே அடுத்த ஒருவாரத்திற்குள் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
தொடர்ந்து பத்திரிகை தணிக்கை அமலுக்கு வந்தது. செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள், தலையங்கக்கட்டுரைகள் அரசின் தீவிர தணிக்கைக்குப்பிறகே வெளிவந்தன. பல பத்திரிகைகள் இந்திராவின் கடுமைக்கு பயந்து அவற்றை நிறுத்திக்கொண்டன. சில பத்திரிகைகள் இந்திராவின் எண்ண ஓட்டத்திற்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டன. வெளிநாட்டு பத்திரிகை அலுவலகங்கள் முடக்கப்பட்டு அவற்றின் நிருபர்கள் அவர்களின் நாட்டுக்கு மிரட்டி அனுப்பப்பட்டனர்.
எம்.ஜி.ஆர்
இப்படி ஜனநாயகத்தின் அத்தனை பண்புகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதிகாரிகள் நினைத்தவை நடந்தன. எமர்ஜென்சியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மாணவர் தலைவர்கள், போராட்டக்காரர்கள் பலர் திடீர் திடீர் எனக் காணாமல்போயினர். பெற்றோர்கள் அவர்களை தேடித்தேடி அலைந்ததுதான் மிச்சம். கடைசிவரை அவர்கள் 'காணாமலேயே' போய்விட்டார்கள். கேரளாவில் மாணவப் போராட்டத்திற்கு தலைமை வகித்த சுகுமாரன் என்ற மாணவர் காணாமல் போக, அவரின் தந்தை பல வருடங்களுக்குத் தேடிவந்தார். வழக்கும் நடத்தினார். எமர்ஜென்சியின்போது காவல்துறையினரால் அவர் கொல்லப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்க சர்க்கரையை கொட்டி எரித்த கொடூரமான கொலைச் சம்பவம், பல வருடங்களுக்குப்பின் வெளிச்சத்துக்கு வந்தது. தன் மகன் குறித்து அவர் எழுதிய நுால் இன்றளவும் எமர்ஜென்சியின் கொடூரத்திற்கு சாட்சியான ஓர் புத்தகம்.
சிறையில் அடைபட்டவர்கள் கடும் சித்ரவதைக்கு ஆளானார்கள். தலைவர்களின் மனநிலையை சிதைக்க அவர்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் சிலருக்கு சிறையில் அளித்த உணவு குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் உலவின. மொரார்ஜி தேசாய் பாம்புகள் நிறைந்த பாழடைந்த பயன்படுத்தப்படாத சிறையில் அடைக்கப்பட்டார். “நல்லவேளை காந்திஜி உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவரும் சிறையில்தான் இருந்திருப்பார்” என நகைச்சுவையாக சொல்வார்கள் அந்நாளில். பாராளுமன்றக் கூட்டத்தொடர்களில் எதிர்கட்சிகள் சார்பில் பேச ஆளின்றி அத்தனைபேரும் தலைமைறைவாகியிருக்கும் நிலை ஏற்பட்டது. பலர் இந்தத் 'திருடன் போலீஸ் விளையாட்டு' பிடிக்காமல் தங்கள் எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். ரேடியோவில் இந்திராவின் 20 அம்ச திட்டத்தைப் பற்றி பாடமுடியாது என்று சொன்ன பிரபல இந்தி பாடகர் கிஷோர்குமாரின் பாடல்கள் தடைசெய்யப்பட்டன.
சோ
துக்ளக் ஆசிரியர் சோ தணிக்கை அதிகாரிகளை கலாய்ப்பதற்காக ஒருமுறை தன் பத்திரிகையின் நகல் என அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிப்பட்டியலை அனுப்பிவைத்தார். 'எமர்ஜென்சியை எதிர்ப்பவரிடமிருந்து இப்படியொரு கட்டுரையா, இதென்ன சங்கேத பாஷையா' என குழம்பிப்போனார் அதிகாரி. அதனால் எதற்கு வம்பு என அதற்கு தடை போட்டதோடு சோவை அழைத்து விசாரித்தார். “நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற தேசிய கீதத்துக்கும் தடை போட்டிருக்கிறீர்களே எமர்ஜென்சியின்போது தேசியகீதம்கூட பாடக்கூடாதா?” என கேட்டு இன்னமும் அதிகாரியை எரிச்சலுாட்டினார் சோ. அப்போதுதான் சோ செய்த குறும்பு தெரியவந்தது அவருக்கு. நான் என்ன செய்வது அதிகாரிகள் சொல்வதை நான் கேட்கிறேன் என நொந்துகொண்டார் அந்த அதிகாரி.
இந்நிலையில், எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்ததோடு அதைக் கண்டித்து கட்சியின் செயற்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக. தணிக்கையை கண்டிக்கும் விதமாக ஒருநாள் சலவைக்கு துணி போட்ட கணக்கு வழக்குகளை முரசொலியில் பிரசுரித்தது திமுக தலைமை. இந்நிலையில் 1976 ம் ஆண்டு ஜனவரி 31 ந்தேதி திமுக அரசு கலைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும்சில இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன.
எமர்ஜென்சிக்கு எதிராக பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவுசெய்தனர். உச்சநீதிமன்றத்தில் இந்திராவுக்காக மேற்முறையீடு செய்திருந்த பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா இந்திராவைக் கண்டிக்கும் விதமாக அந்த வழக்கிலிருந்து விலகிக்கொண்டார். மத்திய அரசின் சோலிசிட்டர் நாரிமன் பதவி விலகினார்.இந்திராவின் உதவியாளர் ஜனகராஜ் என்பவர் இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்டு துணிச்சலாக அவருக்கே கடிதம் எழுதினார். அவரை சிறையிலடைத்தார் இந்திரா. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா, மரியாதையாக நீங்கள் பதவி விலகுங்கள் இந்திரா என நயமாக ஒரு கடிதத்தை இந்திராவுக்கு எழுதினார். நெருக்கடி நிலையைப்பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த ஜார்ஜ் பெர்ணான்டஸை கைது செய்ய அவரது சகோதரரை அடித்துக்காயப்படுத்தியது தனிக்கதை.
20 அம்சத் திட்டம் பத்திரிகை வானொலிகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டதோடு எமர்ஜென்சியின்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசு முனைந்தது. ஒருவகையில் அது உண்மையே. அரசியல் மாச்சர்யங்களினால் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதும் பொதுமக்களுக்கான சேவையில் அக்காலகட்டத்தில் அரசு இயந்திரம் சரிவர இயங்கியது. ரயில்கள் நேரத்தோடு ஓடின. அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள்வரை சரியான நேரத்தில் பணிக்கு வந்தனர். வேலைநிறுத்தங்கள் எதுவும் நடைபெறவில்லை. ரேஷன் கடையில் எல்லாப் பொருட்களும் முறையாக கிடைத்தன. கடத்தல், பதுக்கல் வேலைகள் நடக்கவில்லை' இப்படி பல நல்ல காரியங்களும் நடந்தன.
இதை மீறியும் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பிய ஒருசமயம், “முன்னேற்றத்திற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எப்படி பாழாகின்றன என்பதை நெருக்கடி காலத்தில்தான் அறிய நேர்ந்தது. நம் நாட்டு மக்களின் பின்தங்கிய நிலை மாறவேண்டுமானால் நெருக்கடி நிலை தொடரவேண்டும்” என தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பேசினார் இந்திரா. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு சுமார் ஒண்ணரை ஆண்டுகள் கடந்த நிலையில் 1977 ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திரா மீதான மக்களின் கோபம் வாக்குப்பெட்டியில் வெளிப்பட்டது. தான் போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் அதே ராஜ் நாராயணனிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் இந்திரா. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தபோதே நெருக்கடி நிலையை ரத்து செய்த இந்திரா, தனது பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மக்களின் கோபத்தைக் கண்ட இந்திரா நெருக்கடி நிலைப்பிரகடனத்தின் மூலம், தான் செய்த வரலாற்றுத்தவறை புரிந்துகொண்டார்.
எமர்ஜென்சியை அறிவித்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட இந்திரா, “என்னுடன் இருந்தவர்களின் பேச்சைக்கேட்டு எனது விருப்பத்துக்கு மாறாக சில முடிவுகளை எடுக்கவேண்டியதாகிவிட்டது. ஆனால் விளைவுகள் தங்களுக்கு பாதகமாகிவிட்டதும் அதற்கு காரணமானவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். எல்லா தீய விளைவுகளையும் நான் ஒருத்தியே சுமக்கவேண்டியதாகிவிட்டது” என வருந்தினார்.
இந்திராகாந்தி
எப்படியிருந்தாலும் இந்திராவின் இந்த நெருக்கடி நிலைப்பிரகடனம் அவர் வாழ்வில் ஒரு கரும்புள்ளி என்றே இன்றளவும் விமர்சிக்கிறார்கள். ஜனநாயக மாண்புகளின் மீது அபரிதமான நம்பிக்கை கொண்டிருந்த நேருவின் மகள் அதற்கு நேர் எதிராக ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி சர்வாதிகாரி என்ற பெயரைத்தான் இந்த நடவடிக்கையின் மூலம் பெறமுடிந்தது. எந்த நிலையிலும் மக்கள் அவரின் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை.
அதிர்ச்சி என்னவென்றால் இந்திரா என்ற இரும்புப்பெண்மணியை எதிர்த்து ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியின் தலைவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் 3 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்சியை இழந்தனர். மீண்டும் இந்திராவை மன்னித்துவிட்ட வாக்காள பரமபிதாக்கள் 1980 தேர்தலில் அபரிதமான வெற்றியை அவருக்கு அளித்து மீண்டும் பிரதமராக்கி அழகு பார்த்தனர்.




எஸ்.கிருபாகரன்




நன்றி : விகடன் செய்திகள் - 25.06.2017