disalbe Right click

Saturday, April 1, 2017

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நடைமுறை


மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நடைமுறை

 ஒவ்வொரு மாவட்டத்திலும்  அல்லது  இரண்டு/மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தினை நமது மாநில அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியின் தகுதி உள்ள ஒருவர் தலைவராக இருப்பார். இந்தப் பதவிக்கு மாவட்ட நீதிமன்றநீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரையேமாநில அரசாங்கம் தலைவராக நியமிக்கிறது. மேலும் இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
                           
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவபர்கள் கல்விகேள்விகளில் தலைசிறந்தவர்களாக இருக்கவேண்டும்! என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிபந்தனை விதித்திருக்கிறது. ஆனால்ஓரளவு படித்த ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதற்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

 அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் நீதிமன்றம் நடைபெறும். தலைவரும் ஒரு உறுப்பினரும் இருந்தால்கூட நுகர்வோர் நீதிமன்றம் நடைபெறும். தலைவர் வரவில்லை என்றால்இந்த நீதிமன்றம் நடைபெறாது.

  மற்ற நீதிமன்றங்களைப் போல சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும்சாட்சிகளை விசாரிக்கவும் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.

வழக்கறிஞர்களோமனுதாரர்களோ தங்களது வாதுரைகளை (Arguments) வாய்மொழியாகவும்எழுத்துமூலமாகவும் நுகர்வோர்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
மனுவினை தமிழிலோஆங்கிலத்திலோ தாக்கல் செய்யலாம். மனுவினை மனுதாரரோவழக்கறிஞரோ அல்லது நுகர்வோர் பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்தவரோ தாக்கல் செய்யலாம்.

மனுதாரர்எதிர்மனுதாரர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் முகவர்கள் ஒவ்வொரு கேட்புநாளின்போதும் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மனுதாரர்,எதிர்மனுதாரர் நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கலாம். அவர்களுக்குப் பதிலாகஅவர்களது வழக்கறிஞர்கள் அல்லது முகவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்க வேண்டும். 

மனுதாரர் அல்லது மனுதாரரின் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு அற்றும் ஆவணங்கள் குறிப்புரைகள் (Memos) ஆகிய எதற்கும் நீதிமன்ற முத்திரை வில்லைகள் (Court fee stamls) ஒட்ட வேண்டிய அவசியமில்லை. வழக்குரைக்கும் அதிகார ஆவணமான (Vakalat) வக்காலத்தில் மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையும்வழக்கறிஞர் நலநிதி முத்திரை வில்லையும் ஒட்டப்படுதல் வேண்டும்.

எதிர்மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில்  (Vakalat) மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை மற்றும் வழக்கறிஞர் நலநிதி முத்திரைவில்லை ஒட்டினால் போதுமானதாகும். மற்றபடி  எதிர்மனுதாரரால் தாக்கல் செய்யப்படும் எதிர்விரைமெய்ப்பு உண்மை உறுதிமொழி (Proof Affidavit) ஆவணம்ஆவணங்கள் (Documents),   வரைமொழி வாதுரை (Written Argument), குறிப்புரை (Memos) ஆகிய எவற்றிற்கும்    நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை ஒட்டவேண்டிய அவசியமில்லை.

மனுதாரர் தரப்பு ஆவணங்கள் A வரிசையிலும் எதிர்மனுதாரர் தரப்பு ஆவணங்கள் B வரிசையிலும் குறியீடு செய்யப்படும். ஆவணங்கள் (Original  documents) அசல் ஆவணங்களாகவோ,  ஜெராக்ஸ் நகல்களாகவோ இருக்கலாம். ஆனால்நீதிமன்றம் அசல் ஆவணங்களைக் கோரினால்அவற்றையே மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆவணம் ஒவ்வொன்றையும் மனுதாரர் மற்றும்  எதிர்மனுதாரர் மேலுரையுடன் (with Docket)  தாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை முதலில் நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனுவுடன் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள்வக்காலத்மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் முகவரியிட்ட இரண்டு பதிவு அஞ்சல் உறைகள் ஆகியவற்றை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். மனு சரியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால் எதிர்ம்னுதாரருக்கு வழக்குப் பற்றிய அறிவிப்பும்மனுவின் நகலும் அனுப்பி வைக்கப்படும். மனுதாரருக்கு கேட்பு நாள் (Hearing Date) தெரிவிக்கப்படும்.

மனுவை கோப்பில் எடுப்பதற்கு முன்னர்சில விளக்கங்கள் தேவைப்பட்டால்அந்த விளக்கத்தை வழக்கறிஞரிடம் கேட்டுநீதிபதி திருப்தி அடைந்த பிறகுஅந்த மனுவை கோப்பில் எடுப்பார். வழக்கறிஞரின் விளக்கத்தில் திருப்தி ஏற்படாவிட்டால்அந்த மனுவை கோப்பில் எடுக்கமாட்டார்.

மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இருவரும் அவரவர் தரப்பு சாட்சிகளை அவரவர்களே முன்னிலைப்படுத்த வேண்டும்.

சாட்சிகள் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்தால்தான் வருவேன் என்று கூறினால்,    மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாமே பெற்றுஅந்த சாட்சிக்கு அழைப்பாணையை சார்வு செய்யலாம்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சாட்சிகளை விரிவான நிலையில் விசாரிக்க, மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தின் காலம் இடந்தரவில்லை என்றுரைத்து தனை விரிவான நிலையில் விசாரிப்பதற்குரிய நீதிமன்றம்உரிமையியல் (Civil Court) நீதிமன்றம்தான். அதனால். இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்றுநுகர்வோர் சட்டத்தின் கீழான வழக்கொன்றை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நீதிபதி அனுப்பி வைக்க முடியாது.

மனுதாரர் தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள விரும்பினால்,குறிப்புரை ஒன்று தாக்கல் செய்துதிரும்ப பெற்றுக் கொள்ளலாம். தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்வது சம்பந்தமாகதமது மனுவிலும் எழுதி தமது கையொப்பத்தை இடுதல் வேண்டும்.

 மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் சமரசம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக இருவரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் குறிப்புரை எழுதிக் கொடுத்தல் வேண்டும்.

மனுவில் இரு தரப்பு வாதமும் கேட்கப்பட்டு தீர்ப்புரை வழங்கப்படும். 

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் எதிர்வுரை  (Counter) 45நாட்களில் தாக்கல் செய்யப்படுதல் வேண்டும். வழக்கில் எதிர்மனுதாரர் முன்னிலையாகாததால்ஒருதலைபட்சத் (Exparte) தீர்ப்பானால்,  அதனை நீக்கறவு (Setaside) செய்ய முடியாது.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள்மாநில  நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதே நேரத்தில்மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்பவர்கள்,  மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமலிருக்க தடையாணை (Stay order) பெற்றிருக்க வேண்டும்.  தடையாணை பெறப்படவில்லை எனில்மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும்.

எந்தெந்த சூழ்நிலைகளில் நுகர்வோர் வழக்கிடலாம்?

  பொருள்கள் எதனையும் விலை கொடுத்து வாங்கியிருக்கும் போது அவைகள் பழுதுடையவைகளாகவோகுறைபாடு உடையவையாகவோ இருக்கும்போது அந்தப் பொருள்கள் எவரிடம் வாங்கப்பட்டதோ அவரிடமே அதனை ஒப்படைத்துவேறு நல்ல பொருள்களை தரும்படி கோர வேண்டும். அவர் அவ்வாறு குறைபாடுடைய பொருள்களுக்குப் பதிலாக வேறு நல்ல பொருளை மாற்றித் தராதபோதுவிற்பனை செய்த பொருள்களை திரும்ப பெற்றுக்கொண்டு அதற்குண்டான தொகையை திருப்பி அளிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்ய மறுப்பாராயின் அவர்மீது இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.

நபர் ஒருவருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கிடுமுன்அதனை எதிர்தரப்பினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால்முன்னதாக அறிவிப்புக் கொடுப்பது நல்லதாகும். 

சேவைக்குறைபாடு தொடர்பாக வழக்கிடுதல்

வழக்கறிஞர் ஒருவர் தமது கட்சிக்காரரிடம் வழக்குகளை நடத்த பணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது,  அவர் நீதிமன்றத்தில் தவறாது ஆஜராகி வழக்குகளை நடத்துதல் வேண்டும். வழக்கறின்கரின் வருகையின்மையால்வழக்கு அவரது கட்சிக்காரருக்கு பாதகமானால்அதனால் ஏற்படும் இழப்புக்கு வழக்கறிஞர் பொறுப்பாவார். அதன் பொருட்டு  வழக்கறிஞரிடம் இருந்து இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.
மருத்துவர் ஒருவர் நோயாளியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவம் மேற்கொண்டபோது அவரது தவறான சிகிச்சையால் நோய் குணமடையாதிருந்தாலோதவறான அறுவை சிகிச்சையால் நோயாளி பாதிக்கப்பட்டு இருந்தாலோ நோயாளி மருத்துவரிடம் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

பொறியாளர் ஒருவர்வீடு கட்டித் தருவதாக ஒருவரிடம்  பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான முறையில் வீட்டைக் கட்டித்தராமல் இருந்தாலோபுதிய வீடு கட்ட அடமானத்தின் மூலம் கடன் தொகையை வழங்க முன்வந்திருக்கும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்,உடனுக்குடன் கடன் வழங்காமல் இருந்தாலோதொலைக்காட்சிப் பெட்டி,  குளிர்சாதனப் பெட்டிவானொலிப் பெட்டி போன்றவற்றை பழுதுபார்த்தவர்அவைகளை சரியாக பழுது பார்க்காமல் இருந்தாலோ,கூரியர்அஞ்சல்மணியார்டர் போன்றவை காலதாமதமாக பட்டுவாடா செய்யப்பட்டாலோதொலைபேசித்துறை சரியான சேவை செய்யாமல் கட்டணம் பெற்றாலோகட்டணத்தை கூடுதலாக பெற்றாலோ,கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைபேசி இனைப்புக் கொடுக்காமல் இருந்தாலோமருத்துவர் ஒருவர் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையை சரியான முறையில் மேற்கொள்ளாததால் பெண்மணி ஒருவர் கருவுற்றாலோ சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து புகார்தாரர் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யலாம்.

எந்தெந்த வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது

 மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு,கொலை முயற்சி வழக்குஇந்திய தண்டணைச் சட்டம் மற்றும் பிற குற்றவியல் சட்டங்கள் தொடர்பான வழக்குகள்கடனுறுதிச் சீட்டு,விவாக ரத்துகுழந்தைகள் மீட்புஜீவனாம்சம்அடமான மீட்பு,வாடகைப் பிரச்சனைநிலப்பிரச்சனையில் தடையாணை பெறுதல் சம்பந்தமான வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது.

நன்றி : சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம், M.A, B.L.,


டாக்டரின் அலட்சியத்தால் உயிரிழப்பு


டாக்டரின் அலட்சியத்தால் உயிரிழப்பு -  என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த, பள்ளி முதல்வரின் குடும்பத்துக்கு, 23.54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, கர்நாடக நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரின் ரீஜன்சி பப்ளிக் பள்ளியில், முதல்வராக பணியாற்றி வந்தவர் வித்யா பிரசாத். இவருக்கு 'ஸ்லீப் டிஸ்க்' நோய் இருந்ததால், 2010 பிப்ரவரி, 11ல், சேஷாத்திரி புரத்திலுள்ள போர்டீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அறுவை சிகிச்சையின் போது, அவர் உயிரிழந்தார்.டாக்டர்களின் அலட்சியத்தால், வித்யா உயிரிழந்ததாக அவரது கணவரும் வக்கீலுமான பிரசாத், கர்நாடக மருத்துவ கவுன்சில் - கே.எம்.சி.,யில் புகார் அளித்தார். 

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை தொடர்ந்து பிரசாத், அன்றைய மருத்துவ கல்வித்துறை அமைச்சராக இருந்த எஸ்.ஏ.ராமதாசிடம் பிரசாத் புகார் செய்தார். 

அவரும் குழு அமைத்து விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கும்படி, பெங்களூரு மருத்துவ கவுன்சில் - பி.எம்.சி., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி அமைக்கப்பட்ட குழுவானது, புகார்தாரரிடம் விபரங்களை கேட்டறியாமலும், வித்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களின் விளக்கத்தை மட்டுமே பெற்றும், ஒரு தலைபட்சமான அறிக்கை தயாரித்தது. 

அந்த அறிக்கையும் அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை.  புகார்தாரருக்கும் கொடுக்கவில்லை.

எனவே பிரசாத், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்து, மறு விசாரணைக்கு உத்தரவிடும்படி கோரினார். விசாரணையில், டாக்டர்களின் அலட்சியத்தால், வித்யா உயிரிழந்தது உறுதியானது. 

இதையடுத்து, பிரசாத்தும், அவரது இரு மகன்களும் கர்நாடக நுகர்வோர் தீர்ப்பாயத்தில், நியாயம் கோரி, மனு தாக்கல் செய்தனர்.

மனு விசாரித்த தீர்ப்பாயம், போர்டீஸ் மருத்துவமனை, டாக்டரின் அலட்சியத்தால் உயிரிழந்த வித்யாவின் குடும்பத்துக்கு, எட்டு வாரங்களுக்குள், வட்டியுடன் சேர்த்து, 23.54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 26.10.2016

சேதமான பொருட்களுக்கு நஷ்ட ஈடு


சேதமான பொருட்களுக்கு நஷ்ட ஈடு

சென்னையிலிருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட பொருள்கள் சேதம் அடைந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25,500-ஐ லாரி நிறுவனம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம், பராசக்திநகரைச் சேர்ந்தவர் தசரதன் மனைவி ராஜலட்சுமி. இவர் சென்னையிலிருந்து வீட்டை காலி செய்து, ராஜபாளையத்திற்கு வருவதற்காக, சென்னை திருவான்மியூர், அண்ணா தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அவர்கள் வீட்டில் உள்ள பொருள்களை 44 மூட்டைகளில் கட்டி, 16.3.13-ஆம் தேதி குறிப்பிட்ட லாரியில் ஏற்றி, மறுநாள் ராஜபாளையத்தில் பொருட்களை இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளனர். ஆனால் மார்ச் 18-ஆம் தேதி மாலை வேறொரு லாரியில் பொருள்கள் வந்துள்ளன.
இதில், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்துவிட்டதாம். மேலும் ரூ.13,500 மதிப்புள்ள பொருள்கள் இருந்த மூட்டையைக் காணவில்லையாம். இதனால் மன உளச்சல் அடைந்த ராஜலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி வி.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் எஸ்.சங்கர், எஸ்.கற்பகசெல்வி ஆகியோர் குறிப்பிட்ட லாரி நிறுவனம், பொருள்கள் செலவிற்கு ரூ.18,500-ம், மன உளச்சலுக்கு ரூ.5ஆயிரமும், வழக்குச் செலவிற்கு ரூ.2 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர்.
தினமணி நாளிதழ் செய்தி - 31.03.2015

பழசுக்கு புதுசு - நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

Image may contain: text

பழசுக்கு புதுசு - நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு

பழுதான ஜெனரேட்டருக்குப் பதிலாக, புதிய ஜெனரேட்டர் வழங்குவதுடன், மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோருக்கு ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என, ஜெனரேட்டரை தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகர், கசாப்புக்காரர் தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ் சுதாகர். இவர், மருந்துக் கடை வைத்துள்ளார். இவர், 19.10.2010இல் விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள ஒரு ஏஜென்ஸியில் ஜெனரேட்டர் ரூ. 29,200-க்கு வாங்கியுள்ளார். உத்தரவாத அட்டை கேட்டபோது, அந்த ஏஜென்ஸியினர் தரவில்லையாம்.

ஆனால், மூன்றே நாளில் ஜெனரேட்டர் பழுதாகிவிட்டதாம். உடனே, சம்பந்தப்பட்ட கடைக்கு கொண்டு சென்று, பழுது நீக்கிவிட்டு மீண்டும் இயக்கிய போது, கடையில் உள்ள அனைத்து மின்சாதனங்களும் பழுதாகிவிட்டதாம். பின்னர், ஜெனரேட்டரை எடுத்துச்சென்று பழுது நீக்கி கொடுத்துள்ளனர். மறுபடியும் பழுதாகிவிட்டதாம்.

அதையடுத்து, விருதுநகர் ஏஜென்ஸியினர் ஜெனரேட்டரை, சென்னை செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பழுதுநீக்குவதற்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் 1 மாதம் கழித்து 1.12.2010 இல் பழுது நீக்கிவிட்டதாய் கூறி திருப்பி அனுப்பிவைத்துள்ளனர். அதன் பின்னரும், ஜெனரேட்டர் வேலை செய்யவில்லையாம்.

பின்னர், 17.2.2013இல் ஜெனரேட்டரை திரும்ப எடுத்துச்செல்ல மாரிஸ் சுதாகர் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் திரும்ப எடுத்துச்செல்ல மறுத்துவிட்டனராம்.

எனவே, மாரீஸ் சுதாகார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வி. பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் எஸ். சங்கர், எஸ். கற்பகசெல்வி ஆகியோர், விருதுநகரிலுள்ள அந்த ஏஜென்ஸி மற்றும் சென்னையில் உள்ள நிறுவனம் ஜெனரேட்டரை எடுத்துக்கொண்டு புதிய ஜெனரேட்டரை வழங்கவேண்டும். அல்லது ரூ. 29,200 வழங்கவேண்டும். மேலும், நுகர்வோர் அடைந்த மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவுக்கு ரூ. 2 ஆயிரத்தையும் சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டனர்.

தினமணி நாளிதழ் செய்தி - 01.04.2015

எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?


எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?

காவல் நிலையத்தில் ஏன் லஞ்சம் வாங்குகிறார்கள் தெரியுமா..? - ஒரு குபீர் விளக்கம்!

'ஆடுதானே காணாம போச்சு. அதை அப்படியே விட்டுடு. போலீஸ் ஸ்டேஷன் போனா... இருக்குற மாட்டையும் விக்க வேண்டியிருக்கும்' - கிராமங்களில் இப்படி சொல்வதுண்டு.

பிரச்னைனா போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டியதுதானே. நீங்களாவே ஒரு முடிவு எடுத்துக்குவீங்களா? என போலீஸ் தரப்பு நியாயம் பேசினாலும், 'போலீஸ் ஸ்டேஷனே வேண்டாம். நமக்கேன் பிரச்னை?' என போலீஸ் ஸ்டேஷனையே பிரச்னையாக நினைப்பவர்கள்தான் அதிகம். இதற்கு காரணமும் உண்டு.

உங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் அலுவலகம் எதுவென்று தெரியுமா? சந்தேகமே வேண்டாம் போலீஸ் ஸ்டேஷன்கள்தான். புகார் கொடுப்பவரையே கைது செய்ய போலீசாரால் முடியும். என் மீது தவறில்லை என நீங்கள் போலீஸ் ஸ்டேஷனின் நான்கு சுவருக்குள் நிரூபிக்க முடியாது. அதற்கு நீங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கும். 

நீங்கள் காவல்நிலையத்துக்கு எதற்காக சென்றாலும், வாசலில் காவலுக்கு துப்பாக்கியோடு நிற்கும் காவலாளியை கடந்து செல்ல வேண்டியிருக்கும். அடுத்து நீங்கள் சந்திக்கும் நபர் ரைட்டர். 

நீங்கள் சென்றால் உங்களை பார்க்காமல் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பார். சில நிமிடங்கள் நீங்கள் நின்று கொண்டே இருந்தால் மெல்ல நிமிர்ந்து பார்த்து, 'என்ன பிரச்னை..?' என கேட்பார். 

நீங்கள் ஏதாவது பெரிய பிரச்னையை சொல்லிவிட்டால், எஸ்.ஐ.,யையோ, இன்ஸ்பெக்டரையோ கை காட்டி விடுவார். அதுவே சிறிய பிரச்னையாக ஏதாவது சொன்னால் அவரே களத்தில் இறங்கி விடுவார். 

பேப்பர் கட்டு, பேனாவில் துவங்கி...பிரச்னை என கேட்டு விட்டு, 'அப்படியா. முதல்ல பக்கத்துல கடைக்கு போய் 2 கட்டு பேப்பர், 10 பேனா வாங்கிட்டு வா. வரும்போது எல்லோருக்கும் டீ சொல்லிடு" என ஆரம்பிப்பார். 

அதில் இருந்துதான் துவங்குகிறது வசூல் வேட்டை. காவல்நிலையத்தில் நீங்கள் புகார் அளித்தால் உடனடியாக புகார் ஏற்பு சான்றிதழ் கொடுக்க வேண்டும். 

புகாரைப்பொறுத்து அதன் மீது முதல் தகவல் அறிக்கை போட வேண்டும். அதன் பின்னர்தான் விசாரணையை துவக்க வேண்டும்.

ஆனால் இது எதையுமே போலீசார் செய்யமாட்டார்கள். நீங்கள் புகார் கொடுக்கிறீர்கள் என்றால் உடனே எதிர் தரப்பை அழைத்து பேசுவார்கள். இருவரிடமும் ஒரே நேரத்தில் பேரம் பேசுவார்கள். யாரிடம் அதிகம் பேரம் படிகிறதோ அவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவார்கள். 

அதாவது புகார் கொடுத்தவரை விட எதிர் தரப்பு அதிக பணம் கொடுத்தால், முதலில் புகார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இதை மீறி புகார்தாரர் கேள்வி கேட்டால் அவ்வளவுதான். எதிர்தரப்பிடம் புகாரை வாங்கி, புகாரை கொடுத்தவர் மீதே நடவடிக்கை எடுத்து விடுவார்கள். 

ஒருவரை தகாத வார்த்தைகளில் பேசுகிறீர்கள் என்றால் அது சாதாரண வழக்கு. அதுவே கொலை செய்து விடுவேன் என சேர்த்துக்கொண்டால் அது கொலை மிரட்டல் ஆகிவிடும். அதேபோல் தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் என ஒரே சம்பவத்தில் ஜாமீனில் வரக்கூடிய அளவுக்கும் போலீசால் வழக்குப்பதிவு செய்ய முடியும். ஜாமீனில் வரமுடியாத அளவுக்கும் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ய முடியும். 

சட்டப்பிரிவுகளை மாற்றி உங்கள் ஜாதகத்தை இவர்கள் மாற்றி அமைத்து விடுவார்கள். ஜாமீனில் வெளி வரக்கூடிய அளவுக்கு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் லஞ்சம் கொடுத்துதான் ஆக வேண்டும்.

குற்றப்பிரிவு திருட்டு, கொள்ளை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் கூட போலீசார் தங்கள் கைவரிசையை காட்ட மறுப்பதில்லை. ஒரு வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போகிறது என்றால், அவர் புகார் அளித்தாலும் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய
மாட்டார்கள். 

அப்படியே வழக்குப்பதிவு செய்தாலும் கொள்ளைபோன அளவை விட குறைவாகவே குறிப்பிட்டு வழக்கு பதிவார்கள். அதாவது 50 பவுன் கொள்ளை போன இடத்தில் 20 பவுன், 30 பவுன் நகை திருட்டு போனதாக வழக்கு பதிவாகும்.

திருடர்களை பிடித்த பின்னர் ஒட்டுமொத்த நகையையும் பறிமுதல் செய்து விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் அத்தனை நகை இல்லை. எல்லாவற்றையும் விற்றுவிட்டான். பாதிதான் கிடைக்கும் என்பார்கள். பலருக்கு எப்.ஐ.ஆரில் குறிப்பிட்ட அளவு நகைதான் கிடைக்கும். மீதி போலீசின் பாக்கெட்டுக்கு போய் விடும். பத்திரிகையாளர்களை அழைத்து 20 பவுன் நகையையும் மீட்டு விட்டதாக பந்தாவாக பிரஸ் மீட்டும் கொடுப்பார்கள்.

எதுக்காக லஞ்சம் வாங்குறோம்?போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் இத்தனை கொள்ளைகளும் உண்மைதானா என்றால், கொஞ்சம் கூட மறுக்காமல் ஒப்புக்கொள்கிறார்கள் போலீசார். 

"காவல்துறையில் லஞ்சம் அதிகளவில் புழங்குவது உண்மைதான். ஆனால் காவல்துறையில் லஞ்சத்தை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஏனென்றால் காவல்நிலையங்களே இந்த லஞ்சப்பணத்தில்தான் நடக்கிறது" என அதிர வைத்தார் முன்னாள் போலீஸ் அதிகாரி.

"புகார் கொடுக்க வருபவரை பேப்பர் வாங்கி வரச்சொல்வதும், டீ வாங்கி கொடுக்க சொல்வதும், உணவு பொட்டலங்களை வாங்கி வரச்சொல்வதும் உண்மை. அது எங்களுக்கு மட்டுமல்ல. காவல்நிலையங்களில் உள்ள விசாரணை கைதிகளுக்காகவும்தான். விசாரணை கைதிகளை வைத்து பராமரிக்க அரசு வழங்கும் நிதியை வைத்து ஒரு டீ கூட வாங்கி தர முடியாது. 

மேலும் சட்டப்படி ஒருவரை ஒரு நாளுக்கு மேல் விசாரணைக்கு வைத்திருக்கவும் முடியாது. அதேபோல் குற்றவாளிகளை கைது செய்ய செல்வதற்கான வாகன செலவுகளையும் அரசு ஏற்காது. 

விசாரணைக்கு வரும் போலீஸ் அதிகாரிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் என எதற்கும் அரசு செலவு இல்லை. இதுதவிர போலீஸ் வாகனம் துவங்கி, மறியலில் கைது செய்யப்படும் ஆயிரக்கணக்கானோருக்கு சாப்பாடு கொடுப்பது வரை எல்லாவற்றுக்கும் லஞ்சப்பணம் தேவை.

ஏனென்றால் அரசு இதற்கெல்லாம் செலவிடும் தொகை மிக மிக சொற்பம். சாலை மறியலில் ஆயிரம் பேரை கைது செய்தால், அவர்களுக்கு உணவுக்கு கொடுக்கும் தொகை ஒரு நபருக்கு வெறும் 10 ரூபாய். 

ஆனால் ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 100 ரூபாய் செலவாகும். இதற்கெல்லாம் நாங்கள் எங்கு போவது. இதற்கு துவங்கிய லஞ்சம்தான் இப்போது மிக அதிகமாகி இருக்கிறது" என இதற்கு விளக்கமும் சொன்னார் அந்த ஓய்வுபெற்ற அதிகாரி.

ஏன் லஞ்சம் வாங்குறீங்கனு கேட்டா... ஜென்டில்மேன் அர்ஜூன்மாதிரி விளக்கம் சொல்றீங்களே பாஸ்...! 

- ச.ஜெ.ரவி


விகடன் செய்திகள் - 31.03.2016

ஆயுள் தண்டனை கைதிகள் - வழக்கு


ஆயுள் தண்டனை கைதிகள் - என்ன செய்ய வேண்டும்?

ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் 17 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருவதால் தன்னை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் அவரே வாதாடி வெற்றி பெற்றார். 

இதனால், தமிழக சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 1999-ம் ஆண்டு 16 வயது பள்ளி மாணவி பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பொறியாளர் பி.வீரபாரதி(44) என்பவருக்கு விருதுநகர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கியது. 

மேல் முறையீட்டில் வீரபாரதிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. 

தற்போது அவர் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 17 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினார். 

இது நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வீரபாரதி தனக்காக வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் அவரே வாதாடினார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு:
தமிழ்நாடு சிறை விதி 341(3)-ல் 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதி களை முன்கூட்டியே விடுவிக்க பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 ஆனால், இந்த விதி பாலியல் பாலத்காரம், போர்ஜ
ரி, கொள்ளை, பொருளாதாரக் குற்றங்கள், கடத்தல், உணவு கலப்படம், பயங்கர வாதம் மற்றும் மாநில நலனுக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு உடையவர்களுக்குப் பொருந்தாது.

ஆனால் விதி 341(2)-ல் ஆயுள் தண்டனை கைதிகளில் 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அதே பிரிவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

இருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ஆயுள் கைதிகள் அனுப்பிய மனுவை விதி 341(3)-ஐ காரணம் காட்டி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். 

ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட உரிமை உண்டு என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

வீரபாரதி அளித்த மனுவை நிராகரித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், மனுதாரரின் மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உள்துறை செயலருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், வீரபாரதிபோல் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்து, அறியாமையால் நீதிமன் றத்தில் வழக்கு தொடராமல் இருக்கும் பிற ஆயுள் கைதிகளின் மனுக்களை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை உள்துறை செயலர் மறு சீராய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கால் வீரபாரதி மட்டுமின்றி, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளித்துள்ள 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள பிற ஆயுள் கைதிகளும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.10.2016

சூரிய மின் தகடு அமைக்கலாம், வாருங்கள்!


சூரிய மின் தகடு அமைக்கலாம், வாருங்கள்!

புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் இல்லத்தில் சூரிய தகடு மின்சாரம் அமைப்பது எப்படி என்று சில அடிப்படை விவரங்களைப் பார்ப்போம். 

சூரிய மின்சக்தி எப்படித் தயாராகிறது எனத் தொழில்நுட்ப ரீதியாக அல்லாமல் எளிதாக நமக்குத் தேவையான சூரிய மின்சக்தி தொடர்பாக மட்டும் பார்க்கலாம்.

பொதுவாகக் கோடைக்காலத்தில் மின் பயன்பாடு அதிமாகத்தான் இருக்கும். இன்று குளிர்சாதன வசதி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதன இயந்திரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

மின் பயன்பாடு இயல்பாகவே கோடைக்காலத்தில் அதிகமாகும். அதே சமயம் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்போவதில்லை. இந்தக் கோடைக்காலம் மட்டுமல்ல பொதுவாக நமது வீட்டின் மின் தேவையைச் சமாளிக்க நமக்கு இயற்கையே தரும் ஒரு வழிதான் சூரிய மின்னாற்றல்.

பொதுவாக இன்றைக்குப் பெரும்பாலும் பல வீடுகளில் இன்வெட்டர் பொருத்தியிருக்கிறார்கள். மின்சாரம் இல்லாத நேரத்தில் இன்வெட்டரை வைத்துச் சமாளித்து வருகிறார்கள். ஆனால் இந்த இன்வெட்டரில் சேமிக்கப்படும் மின்சாரம் என்பது மின் வாரியம் மூலமாக நமக்குக் கிடைக்கும் மின்சாரம்தான். அதைத்தான் சேமித்துப் பயன்படுத்திவருகிறார்கள். 

ஆனால் இந்த சூரியத் தகடு (Solar Panel) மின் பற்றாக்குறையையும் சமாளிக்க உதவும். சூரியத் தகடு மற்றும் அதற்கான சார்ஜ் கன்ட்ரோலர் என்ற இயந்திரம் ஆகிய இரண்டையும் மட்டும் வாங்கி மாட்டினால் நமது மின்தேவையில் ஒரு பகுதியை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும். 

உலகிலேயே இந்தியாவில்தான் வருடத்திற்கு அதிகபட்சமாக 300 நாட்கள் முழு அளவிற்கு சூரிய வெளிச்சத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.

சாதாரணமாக ஒரு வீட்டில் இன்வெட்டர் வைக்கும்போது மின்சாரம் இல்லாதபோது 2 ஃபேன்கள் 3 லைட்டுகளை 3 அல்லது 4 மணிநேரம் இயங்குவது மாதிரி வைப்பது வழக்கம். 

இதற்கு ஒரு 150 எ.ஹெச் பேட்டரி மற்றும் 850 வி.ஏ இன்வெர்ட்டர் சரியாக இருக்கும். சூரியத் தகடு வைக்க இதை இரண்டு 150 எ.ஹெச் பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டராக மாற்ற வேண்டும். இதற்குச் சற்றுக் கூடுதலாகச் செலவாகும்.

 1கேவி சூரியத் தகடு பயன்படுத்த இந்த பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் போதுமானது. 1 கேவி என்பது 1000 வாட்ஸ். இந்த 1000 வாட்ஸ் பேனலில் தினந்தோறும் 5 யூனிட் வரை மினசாரம் சேமிக்க முடியும். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதால் 60 தினங்களுக்கு நாம் 300 யூனிட்கள் வரை மிச்சப்படுத்தலாம்.

லாபம் தரும் செயல்

1000 வாட்ஸ் சூரிய சக்தி பேனல் வாங்க அதன் தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து விலை விகிதம் மாறுபடும் சராசரியாக ஒரு யூனிட் சூரியத் தகடு ரூ. 40 முதல் ரூ. 60 வரை இருக்கும். இதன் ஆயுள் காலம் சுமார் 15 முதல் 20 ஆண்டுகளாகும். 

நாம் பயன்படுத்தும் பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களின் ஆயுள் காலம் அந்தந்த நிறுவனத்தைப் பொறுத்து 2 முதல் 4 ஆண்டுகாலம் இருக்கும். பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களை 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியதிருக்கும்.

ஆனால் சூரியத் தகடு 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதால் நமது முதலீடு கண்டிப்பாக லாபத்தையே தரும் என உறுதியாக நம்பலாம். சூரியத் தகடு சார்ஜ் கன்ட்ரோலரின் விலையும் அதன் நிறுவனத்தைப் பொறுத்து அமையும். இதுவும் சாராசரியாக ரூ.2000 முதல் 5000 வரை இருக்கும். தற்போது சார்ஜ் கன்ட்ரோலருடன் இணைந்த இன்வெர்ட்டர்களும் கிடைக்கின்றன.

சூரியத் தகடு பொருத்தினால் லாபமா நஷ்டமா என்று கேள்வி வரும். அதைப் பார்ப்போம்.

 1000 வாட்ஸ் சூரியத் தகடு இணைப்பு கொடுத்த வீட்டுக்கு ஒரு நாளைக்கு சுமார் 5 யூனிட் மிச்சமாகும் என்று கணக்கிட்டால் ஒரு மாதத்திற்கு 150 யூனிட். வருடத்துக்கு 1800 யூனிட். 20 வருடத்துக்கு 36,000 யூனிட். சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்று கணக்கிட்டால் (20 வருடங்களுக்குப் பிறகு யூனிட் கண்டிப்பாக இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்) ரூ1,44,000 மிச்சமாகும்.

இதில் நமது இன்றைய செலவு என்று பார்த்தால் சுமார் 60 ஆயிரம் மட்டும்தான் (கண்டிப்பாக அனைவரும் தங்களது வீட்டில் இன்வெட்டர் வைத்திருப்பார்கள் என்ற அனுமானத்தில் சூரியத் தகடு மற்றும் சார்ஜ் கன்ட்ரோலர் செலவு மட்டும்). 

ஆனால் சூரியத் தகடு பொருத்தும் பட்சத்தில் அதிகபட்சமாகத் தொடர்ந்து 4 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டாலும் இந்த சூரியத் தகடு மின்சாரம் தடைப்படாமல் வரும் என்பதை நிச்சயமாச் சொல்லலாம். பகல் முழுவதும் பராமரிப்புப் பணிக்காக மின்சார வாரியம் மின்சாரத்தை நிறுத்தினால் பகலில் 2 ஃபேன்களை தொடர்ந்து 7 முதல் 9 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும்.

சூரியத் தகடில் மானியம்

முதலில் சொன்னதுபோல் இரண்டு 150 எ.ஹெச் பேட்டரிகள் மற்றும் 1000 வி.ஏ இன்வெர்ட்டர் மாட்டினால் பிறகு சிறிது நாள் கழித்துக்கூட சூரியத் தகடை மாட்டிக்கொள்ளலாம். ஆனால் புதிய வீடு கட்டும்போது செலவோடு செலவாக இதைச் செய்து விட்டால் பின்னால் கஷ்டமில்லாமல் இருக்கலாம்.

சூரியத் தகடிலிருந்து பேட்டரியில் சேகரமாகும் டிசி மின்சாரத்தை ஏசி-ஆக இன்வெர்ட்டர்கள் மாற்றித் தருவதால் நாம் வழக்கமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவதைப் போலப் பயன்படுத்துகிறோம். மின் இணைப்பே வேண்டாம் என்றால் பகலில் சேகரமாகும் மின்சாரம் இரவில் சுமார் 4 மணிநேரத்திற்கு மட்டுமே இருக்கும். அதுவும் அதிகபட்ச வாட்ஸ் உள்ள டிவி, ஃபிரிட்ஜ், மிக்ஸ், மோட்டார் ஆகியவற்றை பேட்டரி மூலம் பயன்படுத்த இயலாது என்பதால் இம்முறை சாத்தியமில்லாதது.

எல்லாம் சரி, சூரியத் தகடு இணைப்பிற்காக அரசாங்கம் மான்யம் தருகிறதே அதை எப்படி பெறுவது என்பதைப் பற்றிச் சொல்லவேயில்லையே என்றால் அதற்கு பதில் இதுதான். 

மாநில அரசாங்கத்தின் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு பெற்ற சூரியத் தகடு நிறுவனங்கள் மூலமாக சூரியத் தகடு இணைப்பு பெற்றால் அவர்கள் தங்களது நிறுவனத்தின் மூலம் இன்வெர்ட்டர், பேட்டரி, சூரியத் தகடு, சார்ஜ் கன்ட்டோலர் என்று அனைத்துக்கும் மொத்தமாகக் கணக்கிட்டு அதில் அரசாங்க மான்யத் தொகை கழித்து மீதமுள்ள தொகையைச் செலுத்தினால் சூரியத் தகடு இணைப்பை அளிப்பார்கள். 

மான்யத் தொகையை பின்னர் அவர்கள் நமது சார்பில் பெற்றுக் கொள்வார்கள். இந்தச் சலுகையைப் பெற குறைந்த பட்சம் 1 கேவி அளவுக்குச் சூரியத் தகடு அமைக்கப்பட வேண்டும்.

வீ.சக்திவேல் 

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 01.04.2017

குறிப்பு :  மேலதிக விபரங்களுக்கு  
http://teda.in/ இணையதளம் செல்க.

Friday, March 31, 2017

வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள்


வருமான வரியில் மாற்றம்: 10 அம்சங்கள்

புதுடில்லி: அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இன்று( ஏப்ரல்1 ) புது நிதியாண்டு பிறந்துள்ளது. மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது வருமான வரி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதேபோல், பல மாற்றங்களுடன் நிதி மசோதாவும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்த, 10 அம்சங்கள்:
1.ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய்க்குள் இருப்பவர்களுக்கான வருமான வரி, 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் வருபவர்களுக்கு இதன் மூலம், 12,500 ரூபாய் வரித் தொகையில் குறையும். இதேபோல், ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து, 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, 12,900 ரூபாயும்; ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு, 14,806 ரூபாயும் வருமான வரி குறையும்.

புதிய வருமான வரி படிவம்
2. தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை தவிர்த்து, ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள், வருமான வரி கணக்கு செலுத்த, ஒரே ஒரு பக்கம் கொண்ட படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ் முதல் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் 
செய்யபவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்யாது.

3. 2017 - 18 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக, 2018 டிசம்பர் 31ம் தேதி தாக்கல் செய்தால், 5,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அந்த தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டால், அபராத தொகை உயரும். எனினும், ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் தாமதமாக தாக்கல் செய்தால், 1,000 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.

4. ராஜிவ்காந்தி பங்கு சந்தை சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யபவர்கள், அந்த தொகையை வருமான வரி கணக்கில் காட்டி கழித்து கொள்ளலாம் என, 2012 - 13ல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், 2018 -19 நிதியாண்டுக்கு பிறகு இந்த சலுகை கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அசையா சொத்து முதலீடு
5. அசையா சொத்துக்களில் முதலீடு செய்பவர்கள், அவற்றுக்கு வரி செலுத்தாமல் மூன்று ஆண்டுகள் வரை வைத்து இருக்கலாம் என்ற நடைமுறை முன்பு இருந்தது. தற்போது, அது, இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல், அசையா சொத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்க, 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.

6. நீண்டகால முதலீடுகள் மூலம் லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கும் புது சிக்கல் வந்துள்ளது. இதற்கான அடிப்படை ஆண்டு, 1981 ஏப்ரல், 1ம் தேதியில் இருந்து, 2001 ஏப்ரல், 1ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. 

7. தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையமான நகாய், ஆர்.இ.சி., ஆகியவற்றின் பத்திரங்களில் முதலீடு செய்யபவர்களுக்கு வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை மேலும் சில பத்திரங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

8. மாத வாடகையாக, 50,000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் தனி நபர்கள், 5 சதவீத டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக தொகையை வாடகையாக பெறுபவர்களில் ஏராளமானோர் வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இது, வரும் ஜூன், 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆதார் கட்டாயம்
9.ஜூலை, 1ம் தேதி முதல் பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களும், வருமான வரி கணக்கு செலுத்துபவர்களும் ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்துடன், ரொக்க பண பரிமாற்ற அளவு, இரண்டு லட்சம் ரூபாய் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்ப பெறுபவர்கள், அதற்காக எந்த வரியையும் செலுத்த வேண்டாம். அதாவது பென்ஷன் தொகையில், 25 சதவீதம் வரை அவசர தேவைக்காக, பணி ஓய்வு பெறுபவதற்கு முன்பே திரும்ப பெறலாம். அதே போல், பணி ஓய்வு பெறும் போது, பென்ஷன் தொகையில், வரி ஏதும் இல்லாமல், 40 சதவீதம் வரை திரும்ப பெறலாம்.

இத்துடன், கார், இருசக்கர வாகனம், மருத்துவ காப்பீடு ஆகியவற்றுக்கான பிரிமியம் தொகை, இன்று முதல் அதிகரிக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்து இருப்பவர்கள், குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்காமல் இருந்தால், அபராதம் செலுத்தும் திட்டமும், இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

நன்றி : தினமலர் நாளிதழ் -01.04.2017

மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் இன்றுமுதல் அபராதம்


மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் இன்றுமுதல் அபராதம்

உங்க எஸ்பிஐ வங்கிக்கணக்கில் பணம்  மினிமம் பேலன்ஸ் இருக்கா! இல்லாவிட்டால் இன்று முதல் அபராதம் 

எஸ்பிஐ வங்கிகணக்கில் மினிமம் பேலன்ஸ் இன்றுமுதல் வைத்துக்கொள்வது அவசியமாகிறது. இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும்.

டெல்லி: எஸ்பிஐ எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி இன்று முதல் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காதவர்களிடம் இன்று முதல் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

எஸ்பிஐ எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி உடன், அதன் ஐந்து துணை வங்கிகள், இன்று முதல் இணைக்கப் படுகின்றன. இதனையடுத்து அந்த ஐந்து துணை வங்கி கிளைகள் எஸ்பிஐ வங்கி கிளைகளாக செயல்பட துவங்கும். 

1) ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், 2) ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், 3) ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, 4) ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா,         5)  ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கியின் வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக மாறுவர். பாரதிய மகிளா வங்கியும் எஸ்பிஐ உடன் இணைக்கப்படுகிறது. 

இந்த இணைப்பு ஒரு பக்கம் இருக்க எஸ்பிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் பற்றியும் அபராதம் எவ்வளவு விதிக்கப்படும் என்பது பற்றியும் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மினிமம் பேலன்ஸ் 

எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் குறைவாக ஜீரோ பேலன்ஸ் இருந்தால் 100 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

அபராதம் எவ்வளவு 

புறநகர்ப் பகுதிகள் எஸ்பிஐ வங்கி கணக்குகளில் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 40 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 60 ரூபாயும், ஜீரோ பேலன்ஸ் இருந்தால் 80 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

நகரங்களில் வங்கிக்கணக்கு 

நகரப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 2,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 25 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 75 சதவிகிதத்திற்கும் குறைவாக அதாவது ஜீரோ பேலன்ஸ் இருந்தால் 75 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

கிராம வங்கிக் கணக்கு 

கிராமப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 20 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 30 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் குறைவாக ஜீரோ பேலன்ஸ் இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும். செக் புக் இல்லாத வங்கி கணக்குகளுக்கு 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் போதுமானது.

ஏடிஎம் கட்டண வசூல்

 எஸ்பிஐ ஏடிஎம் வாடிக்கையாளர்கள் முதல் 5 பரிவர்த்தனையை இலவசமாகப் பெற முடியும், இதுவே அதனை மீறும் போது 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது மூன்று முறை இலவசமாகவும் அதற்கு அதிகமான முறை பணம் எடுக்கும் போது 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

இணையதள பண பரிவர்த்தனை 

1,000 ரூபாய்க்கும் குறைவாக 20 முறை இலவசமாகவும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 40 முறை இலவசமாகவும், அதற்கு அதிகமான தொகைக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது முழுவதும் இலவசமாகவும் இணையதள வங்கி சேவை மூலம் பரிமாற்றம் செய்யலாம். இங்குக் கொடுக்கப்பட்ட வரம்பை மீறும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 5 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

நன்றி : ஒன்இந்தியா  » தமிழ்  » செய்திகள்  » 01.04.2017

ஸ்மார்ட் கார்டு பெற என்ன செய்ய வேண்டும்?


ஸ்மார்ட் கார்டு பெற என்ன செய்ய வேண்டும்?

மதுரை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம், மதுரை மாவட்டத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ஏப்.,1 முதல் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்பட உள்ளது.

'ஸ்மார்ட் கார்டு'கள் வினியோகம் குறித்த விபரம், ரேஷன் கார்டுதாரர்களின் அலைபேசி எண்ணிற்கு ஒருமுறை கடவுச்சொல் ஓ.டி.பி.,(ஒன் டைம் பாஸ்வேர்டு) எண் பதிவு செய்து குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) அனுப்பப்படும். 

அது வரப்பெற்ற கார்டுதாரர்கள் தற்போதைய ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அசல் நகல் மற்றும் எஸ்.எம்.எஸ்., வரப்பெற்ற அலைபேசியுடன் சிறப்பு முகாமிற்கு செல்ல வேண்டும். 

ஒப்புதல் பட்டியலில் கையொப்பமிட்டு, புதிய 'ஸ்மார்ட் ரேஷன் கார்டை பெறலாம். இதற்கு கட்டணமில்லை.

இதுவரை அலைபேசி எண்ணை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டும்.

'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' குறித்த எஸ்.எம்.எஸ்., வராமல் இருந்தால் அச்சப்பட தேவையில்லை. 

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 31.03.2017

நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

நெடுஞ்சாலை டாஸ்மாக் மட்டுமல்ல... பார் உள்ள ஸ்டார் ஹோட்டல், பப்புகளுக்கும் தடை உச்ச நீதிமன்றம் அதிரடி 

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் மதுக்கடைகள் இருப்பதால், வாகன ஓட்டிகளை அது ஈர்க்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 

எனவே, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும்' என்று வழக்கறிஞர் பாலு 2012-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கில், தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள கடைகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு சார்பில், வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ''நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். 2017 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எந்த ஒரு மதுபான விற்பனை கடையோ, பாரோ இருக்கக் கூடாது. மேலும், 'மதுக்கடைக்குச் செல்லும் வழி' என்ற விளம்பரத்தைக்கூட நெடுஞ்சாலைகளில் வைக்கக் கூடாது'' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை 2016 டிசம்பர் 15-ம் தேதி வெளியிட்டார். 

இதையடுத்து, 'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவைத் தாண்டியே கடைகள் இருக்க வேண்டும் என்பதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். காலக்கெடுவை நவம்பர் 28 வரை நீட்டிக்க வேண்டும். தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று தமிழக அரசு மனு செய்திருந்தது. 

அதேபோல், 'இந்தத் தடையால் எங்களுக்குப் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும். மேலும், நட்சத்திர விடுதிகள், பார் போன்ற இடங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது. இவையும் 500 மீட்டர் தூரம் என்ற அளவீட்டில் அடங்குமா ?' என்று சில தெளிவு கேட்டும்' பல மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. 

இந்த வழக்கை உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து தீர்ப்புக்காக மாநில அரசுகள் காத்திருந்தன. ஆனால், அமர்வில் அடங்கிய நீதிபதி விடுப்பில் சென்றதால், தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வினர், 'ஏப்ரல் 1-ம் தேதி முதல் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் செயல்படக்கூடாது' என்று உறுதிபடத் தெரிவித்ததோடு, தீர்ப்பு தேதியையும் இன்றைய தினத்துக்கு (31-03-2017) ஒத்திவைத்தனர். 

இதையடுத்து, இன்று  (31-03-2017)  பிற்பகல் தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

அதில், 'எல்லா வகையான மது விற்பனை நிலையங்கள், கடைகள், உணவங்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும்' என்று உச்ச நீதிமன்றம் உறுதியாகக் கூறிவிட்டது. மேலும், 'மேற்கண்ட விற்பனைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றால், எந்த நோக்கத்துக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ, அது நிறைவேறாமலே போய்விடும்' என்று தெரிவித்துள்ளது. 

இருப்பினும் தீர்ப்பில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. 

500 மீட்டர் என்பது பெரிய நகரங்களுக்குப் பொருந்தும். அதுவே, 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகர்ப்புறமாக இருந்தால், அங்கு 220 மீட்டர் தூரத்துக்குக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 

'சிக்கிம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு 500 மீட்டர் விதி பொருந்தாது. 

ஆனால், ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு 220 மீட்டர் தூரம் என்ற விதி பொருந்தும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஆந்திரபிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் ஏற்கெனவே லைசென்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதால், செப்டம்பர் 30-ம் தேதி வரை கடைகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 'படிப்படியாக மது விலக்கு' என்ற அடிப்படையில் தற்போது 500 கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 

நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள, விற்பனை குறைவாக உள்ள கடைகளாகப் பார்த்து மூடும் நடவடிக்கையை டாஸ்மாக் மேற்கொண்டு வருகிறது.

 உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தமிழ்நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் நாளை முதல் மூடப்படுகின்றன. 

நன்றி : விகடன் செய்திகள் -31.03.2017

Thursday, March 30, 2017

வழக்கறிஞராக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?

Image may contain: 1 person, text

வழக்கறிஞராக பணியாற்ற என்ன செய்ய வேண்டும்?

இந்திய பார் கவுன்சில் தேர்வு! 
கோவை அரசு சட்டக் கல்லுாரியில் நேற்று நடந்த, அனைத்து இந்திய பார் கவுன்சில் தேர்வை, 458 பேர் எழுதினர்.

நாடு முழுவதும், 2010ம் ஆண்டு முதல், அனைத்து  இந்திய பார் கவுன்சில் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான வழக்கறிஞர் தகுதிகான் பார் கவுன்சில் தேர்வு, கோவை உட்பட, 48 மையங்களில் நடந்தது.

கோவை அரசு சட்டக் கல்லுாரியில், தமிழ் வழித்தேர்வை, 229 பேர், ஆங்கில வழித்தேர்வை, 229 பேர் என, மொத்தம் 458 பேர் எழுதினர்.

கோவை அரசு சட்டக்கல்லுாரி முதல்வரும், தேர்வு ஒருங்கிணைப்பாளருமான கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ”சட்டப்படிப்பு முடித்து (பி.எல்.,) பார் கவுன்சிலில் பதிவு செய்த, மூன்றாண்டு களுக்குள் அனைத்து இந்திய பார் கவுன்சில் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வழக்கறிஞராக வாதாட முடியும்.

”தேர்வில், 100 ’அப்ஜெக்டிவ்’ வகை வினாக்கள் கேட்கப்பட்டன. இரண்டரை மாதங்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம்,” என்றார்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 27.03.2017

Wednesday, March 29, 2017

காவலர்கள் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பு


காவலர்கள் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பு

 காவல்துறை தலைமையகம் உத்தரவு
அனைத்துக் காவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக காவல்துறையில் பணியில் சேரும் காவலர்களுக்கு அடையாள அட்டை காவல்துறை தலைமையகத்தில் இருந்து வழங்கப்படுவதில்லை.

மாறாக காவலர்களுக்கு சீருடை, லத்தி, ஷூ உள்ளிட்டவைகளை வழங்கும் தனியார் நிறுவனம் தான் அடையாள அட்டையையும் வழங்கி வருகிறது. 

இதனால் எளிதாக போலியாக அடையாள அட்டை தயார் செய்யும் வாய்ப்புகள் இருந்து வருகிறது. 

இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் காவலர்கள் போல வேடமிட்டு பணம்பறிப்பு, மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் செயல்கள் நடைபெறுகின்றன.

இதனைத் தடுக்கவும், அடையாள அட்டையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் அனைத்து காவலர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

போலியாக அடையாள அட்டை தயார் செய்து காவலர்கள் போல் உலவுபவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் ஆதார் எண் இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி : விகடன் செய்திகள் - 20.03.2017

Tuesday, March 28, 2017

காவல்துறை ஒரு புகாரை எப்படி கையாள வேண்டும்?


காவல்துறை ஒரு புகாரை எப்படி கையாள வேண்டும்?

போலீசில் யார் புகார் கொடுத்தாலும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

1. புகார் அடிப்படையில் குற்றம் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை தேவையில்லை.

2. குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இல்லையெனில் விசாரிக்க வேண்டும். சம்பவம் நடந்துள்ளதா? இல்லையா? என கண்டறிய வேண்டும். முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

3. புகாரில் உண்மையில்லை என விசாரணையை முடிப்பதாக இருந்தால், மனுதாரருக்கு ஒருவாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

4. முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப் பதிவு செய்வது போலீசாரின் கடமை. கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. முதற்கட்ட விசாரணையில் புகார் உண்மையா? இல்லையா? என பார்க்கக்கூடாது. முகாந்திரம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும்.

6. குடும்பத் தகராறு, வணிக ரீதியான குற்றங்கள், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக வரும் புகார்களின் மீது முதற்கட்ட விசாரணை தேவை.

 7. முதற்கட்ட விசாரணையை ஏழு நாட்களில் முடிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படின் காவல்நிலைய டைரியில் பதிவு செய்ய வேண்டும். தினசரி வரும் அனைத்து புகார்களையும் டைரியில் பதிவு செய்ய வேண்டும். 

(கோர்ட் டைரக்‌ஷன் கேட்டு பலபேர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அவர்கள் காவல்துறை டி.ஜி.பி. அவர்களுக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.)

நன்றி : தினமலர் நாளிதழ் செய்தி - 27.03.2015

வழக்குப்பதிவு செய்யாத காவலர் மீது நடவடிக்கை!



வழக்குப்பதிவு செய்யாத காவலர் மீது நடவடிக்கை!
மதுரை: புகார்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை திருமுருகன் உட்பட 69 பேர் தங்கள் புகார்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். 

நீதிபதி சி.டி.செல்வம் உத்தரவு: 

போலீசில் யார் புகார் கொடுத்தாலும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு அடிப்படையில் இக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

புகார் வந்தால் பதிவு செய்யாமல் போலீசார் தவிர்ப்பது கவலையளிக்கிறது. போலீசார் விருப்பம் போல் செயல்படுகின்றனர். தேசிய ஆய்வில் புகார்களில் பெரும்பாலானவற்றிற்கு வழக்கு பதிவு செய்வதில்லை என தெரியவந்துள்ளது. 

ஒரு புகார் பதிவு செய்யப்படாதபோது காலதாமதத்தால் புகாரர்தாரர் பாதிக்கப்படுகிறார். இது கோர்ட் விசாரணையை பாதிக்கும். சில நேரங்களில் போலீசார் உண்மைகளை திரித்து வழக்குப் பதிவு செய்கின்றனர். 

இந்தியாவில் 2012 ல் 60 லட்சம் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதிலிருந்து 60 லட்சம் வழக்குகள் பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இக்கோர்ட் கீழ்கண்ட வழிகாட்டுதல்களை டி.ஜி.பி.,க்கு பரிந்துரைக்கிறது.
  •  புகார் அடிப்படையில் குற்றம் புலனாகும் பட்சத்தில் கண்டிப்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆரம்பகட்ட விசாரணை தேவையில்லை.
  • குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இல்லையெனில் விசாரிக்க வேண்டும். சம்பவம் நடந்துள்ளதா? இல்லையா? என கண்டறிய வேண்டும். முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
  • புகாரில் உண்மையில்லை என விசாரணையை முடிப்பதாக இருந்தால், மனுதாரருக்கு ஒருவாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
  • முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்குப் பதிவு செய்வது போலீசாரின் கடமை. கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • முதற்கட்ட விசாரணையில் புகார் உண்மையா? இல்லையா? என பார்க்கக்கூடாது. முகாந்திரம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும்.
  • குடும்பத் தகராறு, வணிக ரீதியான குற்றங்கள், மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைவு, ஊழல், காலதாமதமாக வரும் புகார்களின் மீது முதற்கட்ட விசாரணை தேவை.
  •  முதற்கட்ட விசாரணையை ஏழு நாட்களில் முடிக்க வேண்டும். காலதாமதம் ஏற்படின் காவல்நிலைய டைரியில் பதிவு செய்ய வேண்டும். தினசரி வரும் அனைத்து புகார்களையும் டைரியில் பதிவு செய்ய வேண்டும். 
டி.ஜி.பி., எங்கள் கவலையில் பங்குபெற இக்கோர்ட் விரும்புகிறது. கண்காணிப்பு குழு அமைத்து, தவறு செய்யும் அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன என்றார்.

தினமலர் நாளிதழ் செய்தி - 27.03.2015

Sunday, March 26, 2017

விசாரணைக்கு 20 மாதம்; தீர்ப்புக்கு 22 மாதம்

Image may contain: text
விசாரணைக்கு 20 மாதம்; தீர்ப்புக்கு 22 மாதம் 
தேர்தல் வழக்கில் தான் இந்த கூத்து
பொதுவாக, எந்த வழக்கானாலும், உடனடியாக விசாரணை நடந்து, தீர்ப்பு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அனைவருக்கும் உண்டு. ஆனால், தீர்ப்பு வழங்க, 22 மாதங்கள் எடுத்து கொண்ட தேர்தல் வழக்கு பற்றி யாருக்கு தெரியும்.
அது நடந்தது, வேறு எந்த நீதிமன்றத்திலும் அல்ல; சென்னை உயர் நீதிமன்றத்தில் தான்.
இந்த வழக்கில் விசாரணை நடந்தது, 20 மாதங்கள்; தீர்ப்புக்காக, தேதி தள்ளி வைக்கப்பட்டு, 22 மாதங்களுக்கு பின், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சுவாரஸ்யமான வழக்கின் விவரம் இதோ:
கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், தி.மு.க., உடன், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்., அணி சேர்ந்தது. இந்த அணி, மகத்தான வெற்றி பெற்றது.
அப்போது, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தொகுதியில், த.மா.கா., சார்பில் போட்டியிட்டவர் வேல்துரை. இவரை எதிர்த்து போட்டியிட்டவர், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன். தேர்தலில், வேல்துரை வெற்றி பெற்றார்.
அவரின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பி.எச்.பாண்டியன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில், 20 மாதங்களாக நடந்தது.
நீதிபதி ஜெயசிம்ம பாபு, வழக்கை விசாரித்தார். 1996 ஜூன் 24ம் தேதி, தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. 1998 பிப்., 24ம் தேதி, விசாரணை முடிந்தது; தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது.இந்த வழக்கில், 1999 டிச., 29ம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்டது.
பி.எச்.பாண்டியன் தொடர்ந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, 22 மாதங்களுக்கு பின், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் வழக்கில், விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இவ்வளவு மாதங்கள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டது,
இந்த வழக்கில் தான்.தீர்ப்பு வழங்கியதற்கு, 22 மாதங்களானது மட்டுமல்லாமல், தீர்ப்பின் நகல் வழங்குவதற்கும், 11 மாதங்கள் எடுத்து கொள்ளப்பட்டது தான், முக்கியமான விஷயம்.
உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பி.எச்.பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் லகோத்தி, அசோக் பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', 2001 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.பி.எச்.பாண்டியன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சிவசுப்ரமணியம் ஆஜராகி, ''22 மாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது; தீர்ப்பு எழுதும் போது, நாங்கள் எழுப்பிய வாதங்கள் பரிசீலிக்கப்படாமல் இருக்கலாம்,''என்றார்.
'இந்த ஒரு காரணத்திற்காகவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து விட்டு, புதிதாக விசாரிக்கும்படி திருப்பி அனுப்பலாம்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு, மூத்த வழக்கறிஞர், ''மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்புவதால், எந்த பலனுமில்லை; அடுத்த தேர்தலும் நடந்து முடிந்து விட்டது,'' என்றார்.
இந்த வழக்கில் எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு, போதிய ஆதாரமில்லை' என கூறிய உச்ச நீதிமன்றம், சில அறிவுரைகளை உயர் நீதிமன்றத்துக்கு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதியை தள்ளி வைத்து, 22 மாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் வழக்கில், இவ்வளவு நீண்ட கால தாமதம் செய்தது முறையற்றது. 22 மாதங்களாக தீர்ப்பு வழங்காமல் இருந்ததை, நியாயப்படுத்த முடியாது. இத்தகைய தாமதம், விமர்சனத்துக்கு வழிவகுக்கும்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.தீர்ப்பின் நகலை அளிக்கவும், 11 மாதங்களாகி உள்ளது.
உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கை, சாதாரணமாக அணுகுவது ஏன் என்பதை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தீர்ப்பின் நகல், கால தாமதமாக வழங்குவது, ஆட்சேபனைக்குரியது. இந்த விஷயத்தை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவனிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் நாளிதழ் - 26.03.2016

Saturday, March 25, 2017

தேர்தல் களம் - டெபாசிட் என்றால் என்ன ?

Image may contain: text

தேர்தல் களம் - டெபாசிட் என்றால் என்ன ?
தேர்தலில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் ஒருவருக்கு மட்டுமே வெற்றி. மற்றவர்களுக்கு தோல்வி கட்டாயம். ஆனாலும் அந்த தோல்வி கவுரவமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்.
அந்த கவுரவத்தின் அடையாளமாக சொல்வது டெபாசிட்டை தக்க வைத்துக் கொள்வது. அதுவும் எல்லோருக்கும் வாய்க்காது அதிகபட்சமாக 6 பேருக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கும்.
அதற்கு மேல் போட்டியிட்டவர்களுக்கு கட்டாயம் டெபாசிட் காலி.
என்ன இந்த டெபாசிட் காலி?
தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் வேட்பு மனுவுடன் வைப்புத் தொகையும்(டெபாசிட்) செலுத்துவார்கள். தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.
தோற்பவர்களுக்கும் இந்த வைப்புத் தொகை திருப்பித்தரப்படும்.
அப்படி வைப்புத் தொகையை திருப்பி பெற வேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் அந்த தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
அதாவது ஒரு தொகுதியில் 6000 வாக்குகள் பதிவாகி இருந்தால் 1000 அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் வாக்குகள் பெறும் ஒவ்வொருவருக்கும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படும்.
அப்படியில்லாமல் 1000க்கும் குறைவான வாக்குகள் பெறுபவர்களுக்கு வைப்புத் தொகையை திருப்பித்தர மாட்டார்கள். அப்படி வைப்புத் தொகையாக செலுத்திய பணத்தை திருப்பி பெற முடியாத தோல்வியைத்தான் 'டெபாசிட் காலி' என்கின்றனர்.
பெரும்பாலும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு டெபாசிட் காலி சங்கடம் அதிகம் ஏற்படுவதில்லை. சிறுகட்சிகள், சுயேட்சைகள்தான் இந்த நஷ்டத்தில் சிக்குவார்கள்.
சில நேரங்களில் அரிதாக பெரிய கட்சிகளும், முக்கிய பிரமுகர்களும் கூட இந்த 'டெபாசிட் காலி' அலையில் அடித்து செல்வதுண்டு.
நாடாளு(பாராளு)மன்ற தேர்தலுக்கு அதில் போட்டியிடுபவர் ரூ.25,000/- டெபாசிட் பணம் கட்ட வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு அதில் போட்டியிடுபவர் ரூ.10,000/- டெபாசிட் பணம் கட்ட வேண்டும். SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள் மேற்கண்ட தொகையில் பாதியை கட்டினால் போதுமானது.
(2011ம் ஆண்டு கணக்கின்படி) உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை, தேர்தல் செலவின உச்சவரம்பு விவரங்கள்:
ஊராட்சி வார்டு உறுப்பினர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 200,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 100.
செலவின உச்சவரம்பு ரூ. 3,750.
ஊராட்சித் தலைவர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 300.
செலவின உச்சவரம்பு ரூ. 15,000.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 600,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 300.
செலவின உச்சவரம்பு ரூ. 37,500.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000,
எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு ரூ. 500.
செலவின உச்சவரம்பு ரூ. 75,000.
பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி ஆகியவற்றின் உறுப்பினர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 250,
செலவின உச்சவரம்பு ரூ. 11,250.
பேரூராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி ஆகியவற்றின் தலைவர் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 500,
செலவின உச்சவரம்பு ரூ. 56,250.
நகராட்சி உறுப்பினர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 500.
செலவின உச்சவரம்பு
முதல் நிலை, இரண்டாம் நிலை ரூ. 22,500,
சிறப்பு நிலை, தேர்வு நிலை 56,250.
நகராட்சித் தலைவர்பொதுப் பிரிவினருக்கு ரூ. 2,000,
எஸ்.சி. எஸ்.டியினருக்கு ரூ. 1,000,
செலவின உச்சவரம்பு
முதல் நிலை, இரண்டாம் நிலை ரூ. 1,12,500,
தேர்வு நிலை, சிறப்பு நிலை ரூ. 2,25,000.
செலவு செய்வது எப்படி?தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்படும் தேர்தல் செலவினங்களை தேசியமயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் தனி கணக்கு துவங்கி பராமரிக்க வேண்டும்.
செலவு கணக்கு 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவின் படி,
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான 30 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
அதன்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதிக்க முடியும்.